Wednesday, March 14, 2012

வெளிநாடுகளில் வேலை பார்க்கின்ற இலங்கையர்களுக்கு அமைச்சர் டிலான்
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை அமுல்படுத்த மேற்குலக நாடுகள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தால் முடியவே முடியாது என்று தெரிவித்து உள்ளார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா.இவர் அரச தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு நம்பிக்கை வெளியிட்டார்.இவர் இங்கு முக்கியமாக தெரிவித்தவை வருமாறு இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை அமுல்படுத்த மேற்குலக நாடுகள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தால் முடியவே முடியாது. ஏனெனில் இலங்கைக்கு தேவையான அன்னியச் செலவாணி வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களால் அனுப்பப்பட்டு வருகின்றன.இலங்கைக்கு அதிக அன்னியச் செலவாணியை பெற்றுக் கொடுப்பவர்கள் வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்கள் ஆவர். எனவே இவர்களும் ஹீரோக்கள்தான். 2009 ஆம் ஆண்ட 813.91 மில்லியன் ரூபாய் வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் இருந்து கிடைத்தது. இது மொத்த அன்னியச் செலவாணியில் 47.03 விகிதம். 2011 ஆம் ஆண்டில் 465.37 மில்லியன் ரூபாய் கிடைத்தது. இது மொத்த அன்னியச் செலவாணியில் 49.63 வீதம்.இலங்கை இன்று பொருளாதார ரீதியாக பலமாக உள்ளது. இதற்கு வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களின் பங்களிப்பே மிக முக்கிய காரணம் ஆகும்.ஸ்! 

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.