எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து இன்று முதல் மின் பாவனையாளர்களுக்கான மின்சாரக் கட்டணத்தில் எரிபொருளுக்கான மேலதிக கட்டணம் விதிக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்படுகளுக்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி வீடுகளுக்கான மின் பாவனையில் 1 – 30 அலகுகளுக்கு 25 சதவீதமும் 31 – 60 அலகுகளுக்கு 35 சதவீதமும் 61க்கு மேற்பட்ட அலகுகளுக்கு 40 சதவீதமும் வீடுகளில் மேலதிக எரிபொருள் கட்டணமாக அறவிடப்படவுள்ளது. இதேவேளை, கைத்தொழில் துறைக்கு 15 சதவீத மேலதிக கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகளுக்கான ஆணைக்குழு கூறியுள்ளது tamilmirror.lk
No comments:
Post a Comment