ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள தந்திரிமலை ஓயாமடு பிரதேசத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள இவ்வருடத்துக்கான ‘தேசத்திற்கு மகுடம்’ தேசிய அபிவிருத்தி கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
600 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெறவுள்ள இக் கண்காட்சியில் அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புக்களுடன் ஆயிரத்திற்கும் அதிகமான காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெப்ரவரி மாதம் 4ம் திகதி மாலை ஜனாதிபதி அவர்களினால் இக்கண்காட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் பெப்ரவரி மாதம் 5ம் திகதி முதல் 10 ம் திகதி வரையிலான காலப்பகுதியில் காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை பொது மக்களின் பார்வைக்காக கண்காட்சி கூடங்கள் திறந்திருக்கும்.
இலங்கையின் பாரிய கண்காட்சியான தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு அநுராதபுரம் மாவட்டத்தில் 25 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பாடசாலை மாணவர்களும்இ ஆசிரியர்களும் கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம். தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி சீட்டை பெற்று ஏனையோர் கண்காட்சியைப் பார்வையிடலாம். WWW.NEWS.LK
No comments:
Post a Comment