கடந்த 1 ம் திகதி கல்வி அமைச்சர் மாண்பு மிகு பந்துல குணவர்தனா தலைமையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் புதிய பரீட்சை ஆணையாளராக திரு டப். எம். என். ஜே. புஷ்பகுமார பதவியேற்றார். இலங்கை கல்வி நிர்வாக சேவை முதலாம் வகுப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரியான திரு புஷ்பகுமார புதிய பதவியைப் பொறுப்பேற்கு முன்னர் கல்வி அமைச்சின் கீழுள்ள கல்வி நூல் வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாகப் பதவி வகித்ததுடன் பரீட்சை ஆணையாளர், பிரதிப் பரீட்சை ஆணையாளர் மற்றும் உதவிப் பரீட்சை ஆணையாளராகவும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
No comments:
Post a Comment