Friday, December 16, 2011

GCE (A/L) பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் இழுபறி!

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படுவதில் இழுபறிநிலை காணப்படுகிறது. இது தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க ஆகியோர் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளனர்


நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 19ம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க இன்று காலை பாராளுமன்றில் அறிவித்தார்.

எனினும் அப்பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிட முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். அவற்றை வெளியிடுவதற்கு மேலும் ஒரு வாரம் காலம் எடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டள்ளார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க இன்று காலை பாராளுமன்றில் தெரிவித்ததைத் தொடர்ந்தே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க மாற்று கருத்தை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.