அம்பாறை மாவட்டத்தில் நாம் கைப்பற்றிய பிரதேச சபைகளுக்கு நமது கட்சி
தீர்மானிக்கும் ஒருவரே தலைவராக நியமிக்கப்படுவார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸின் பொதுச் செயலாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கைப்பற்றிய நான்கு சபைகளுக்குமான தலைவர்களைச் தெரிவுசெய்யும் போது கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களா? அல்லது கட்சி விரும்புகின்றவர்களா? கவனத்தில் கொள்ளப்படுவார்கள் என வினவப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானி மூலம் அறிவித்தல் செய்யப்பட்டபின்னர் தேர்தல் ஆணையாளர் எமக்கு எழுத்து மூலம் கைப்பற்றிய பிரதேச சபைகளுக்கு தலைவர்களைத் தெரிவு செய்யுமாறும் சத்தியப் பிரமாணத்தினை அறிவிப்பார். இதன் பின்னரே எமது கட்சி கூடி ஆராயுமெனக் கூறினார்.
வெற்றி பெற்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணத்தினை அந்தந்தப் பிரதேசசபை அலுவலகங்களிலேயே நடாத்தப்படும் என்றும் ஹஸன் அலி எம்.பி. தெரிவித்தார்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கைப்பற்றிய நான்கு சபைகளுக்குமான தலைவர்களைச் தெரிவுசெய்யும் போது கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களா? அல்லது கட்சி விரும்புகின்றவர்களா? கவனத்தில் கொள்ளப்படுவார்கள் என வினவப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானி மூலம் அறிவித்தல் செய்யப்பட்டபின்னர் தேர்தல் ஆணையாளர் எமக்கு எழுத்து மூலம் கைப்பற்றிய பிரதேச சபைகளுக்கு தலைவர்களைத் தெரிவு செய்யுமாறும் சத்தியப் பிரமாணத்தினை அறிவிப்பார். இதன் பின்னரே எமது கட்சி கூடி ஆராயுமெனக் கூறினார்.
வெற்றி பெற்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணத்தினை அந்தந்தப் பிரதேசசபை அலுவலகங்களிலேயே நடாத்தப்படும் என்றும் ஹஸன் அலி எம்.பி. தெரிவித்தார்
No comments:
Post a Comment