Thursday, February 24, 2011

75 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம்




சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு 20அ அனுமதியின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் காணி உத்தியோகஸ்தர் எம்.ஏ.எம்.றாபி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சா உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் 65 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் பிரதம மற்றும் கௌரவ அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.