இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூக சேவை பிரிவும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து சம்மாந்துறை அஸ்ஸமா வித்தியாலயத்தில் 2011/02/13ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் பி.ப. 4.00 மணி வரை இடம்பெற்றது. இதில் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவ் வைத்திய முகாமில் பின்வரும் வைத்தியர்கள் தமது சேவையை வழங்கினர். ஆசில் அஹமட், ஏ.ஏ.கபூர், எம்.எல்.கபூர், இஸானா ஆகிய வைத்தியர்கள். இம் மருத்துவ முகாமானது சம்மாந்துறை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொறுப்பாளர் மெளலவி யூ.எல்.எம். ஸலாஹுதீன் தலைமையில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment