Sunday, January 16, 2011

இலவச வைத்தியமுகாம்


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர். ஏம்.எஸ். இப்றாலெவ்வை அனுசரனையில் - சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஏ. இஸ்ஸடீன் தலைமையிலான குழுவினர் 2011.01.16 மஜீட்புரத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இலவச வைத்திய முகாமை நடாத்தினர்.

இவ் வைத்திய முகாமில் விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் றுக்மண் ஜயபால மற்றும் வைத்தியர்களான ஏ.ஆர்.எம். நியாஸ், எம். மர்சூக், ஏ. சபீர், ஏ. இஸ்ஸானா மற்றும் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோகர் ஐ.எல். றாஸீக் தலைமையிலான சுகாதார பரிசோகர்கள் குழுவும், தாதியர் மேற்பார்வையாளர் ரீ.எல்.ஏ. றசூல் தலைமையிலான குழுவினரும், மஜீட்புர வித்தியாலயத்தின் அதிபர் ஏ.அமீர்அலி பிரதி அதிபர் எம்.ஐ. முஸம்மில் மற்றும் ஆசிரியர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் இவ் இலவச வைத்திய முகாமில் பங்குகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகளை வழங்கினர்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.