

சம்மாந்துறை றம்ஸியா பகல் பராமரிப்பு இல்லத்தில் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழாவும், கலைநிகழ்வும் 2010.12.20 பிற்பகல் 3.00 மணியளவில் சம்மாந்துறை அல்-அர்சத் ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி கே. உதுமாலெவ்வை அவர்களும் கௌரவ அதிதியாக இஸ்மாயில் வித்தியாலய அதிபர் ஐ.எல்.எம். சலீம் அவர்களும், சிறப்பு அதிதியாக தமிழ் பாடத்துறைப்புகழ் திருமதி. நபீதா கால்டீன் ஆசிரியையும், ஊடகவியலாளர் தேசமான்ய ஜலீல் ஜீயும் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வை ரம்ஸியா பாலர் பாடசாலையின் ஆசிரியைகளான எஸ்.எல். சித்தி பரீதா எஸ்.எல். சித்தி ஜனூஸா மற்றும் ஏ.பி. பாத்திமா அன்பியா ஆகியோர் மிகச்சிறப்பாக வழிநடாத்தினர். மேடையில் தமிழ் மொழி அறிவிப்பினை பிறை எப் எம் புகழ் கே.எம்.எம். ஜவாத் மற்றும் ஆங்கில மொழியில் எல்லோரையும் கவரும் வகையில் எஸ்.எல். பாத்திமா றுஸானா நிகழ்ச்சிகளைத் சிறப்பாகத் தொகுத்து வழங்கியமை சிறப்பம்சமாகும்.
No comments:
Post a Comment