Thursday, October 28, 2010

மின்னல் தாக்கத்தினால் இளம் குடும்பஸ்த்தர் பலி




2010.10.28 ஆகிய இன்று சுமார் பி.ப  2.25 இற்கு இடியுடன் கூடிய மழை பரவலாக பெய்தது. சம்மாந்துறை கைகாட்டி வீதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தகப்பனான ஆதம்லெப்பை மஹ்றூப் (வயது 37) சம்மாந்துறை அன்டிய சேகப்பற்று வயல் வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி ஸ்தலத்திலேயே மரணமானார். இவருடன் கூடச் சென்ற மருமகனான ஹசன் ஹாசிர் (வயது 17) சம்பவத்தில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.

சடலம் உடனடியாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டது. சம்மாந்துறைப் பொலிஸார் இது தொடர்பான் மேல் விசாரணைகளை நடத்துகின்றனர்.




                                                                      

3 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்லும்போது என் காதுகளை இசை சப்தங்கள் துளைக்கின்றன.
    ஆகவே இங்கு பின்னணியை இருக்கின்ற இந்த ஒலியை நிறுத்தி வைக்ககூடிய ஆழியை இதில் தென்படச்செய்யவும்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

    இந்த உடனடிச் செய்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
    நன்றி

    ReplyDelete

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.