Wednesday, September 8, 2010

நபி வழியில் நம் பெருநாள் தொழுகை

அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!அஸ்ஸலாமு அலைக்கும்.அபுஸயீத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் "நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தார்கள்.அவர்களது காரியங்களில் முதற் காரியமாக தொழுகையை துவக்குவார்கள்.(புஹாரி 956,முஸ்லிம் 1612)

இரு பெருநாட்களிலும் மாதவிடாய் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும்(தொழும் திடலுக்கு)அனுப்புமாறும் அப் பெண்கள் வீட்டில் இருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்கு சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும் தொழுமிடத்தை விட்டும் மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கி இருக்குமாறும் நாங்கள் கட்டளையிட்டோம் என நபி (ஸல்) கூறியதாக உம்மு அத்தியா(ரழி)அறிவிக்கின்றார்கள்.(புஹாரி351,முஸ்லிம்1612).

இந்த நபி வழிக்கு மாற்றமாக காலாகாலமாக பெருநாள் தொழுகை தொழுவிக்கப்படுவதாலும்,பெண்கள் பெருநாள் தொழுகைகளில் புறக்கணிக்கப்படுவதாலும்,இம் முறை நோன்புப் பெருநாள் தொழுகையை திடலில் தொழுவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்,அல்ஹம்துலில்லாஹ்.

இடம் :- அல்மர்ஜான் மகளிர் கல்லூரி மைதானம்
காலம்:-பெருநாள் தினம்(அகில இலங்கை உலமா சபை பிறைக்குழுவால் அறிவிக்கப்படும் தினம்)
நேரம்:-காலை 06.20
ஏற்பாடு:- சம்மாந்துறை தவ்ஹீத் ஜமாஅத்
இம் முயற்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க விரும்புவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்-
0773520876,0775527326








No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.