சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையத்திற்கு முன்னால் இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை ஜெனீவா இலங்கை மற்றும் ஏனைய பிரதேசங்கள் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
thanks meelparvai
சர்வதேச ஆசிரியர் தின விழா – 2012 சம்மாந்துறை -முஸ்லிம் மகளிர் வித், (படங்கள் இணைப்பு)
மாதா, பிதா, குரு தெய்வம் என்பது தமிழ்மொழி எமக்குச் சொன்னது. அதில் வரும் குருவானவர் ஒரு பிள்ளையின் எதிர்காலத்தில் எந்தளவு முக்கியத்துவமானவர் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.
அவ்வாறு எங்களுக்கு கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளும் ஆசான்களை நாங்கள் கண்ணியப்படுத்த வேண்டியது ஒவ்வொரு பிரஜையினதும் தலையாகிய கடமையாகும்.
ஒரு நல்ல கல்வி நற்பிரஜையை உருவாக்கும் என்ற கோட்பாட்டுக்குகமைவாக அந்த மாணவனை இந்த ஆசான் வழிநடத்திச் சென்று அவனை நல்லவனாக உருவாக்குகிறான் என்பதில் ஐயமில்லை.
அவ்வாறு நற்பிஜைகளை உருவாக்கும் சிறந்த சேவைகளை செய்யும் ஆசிரியர்களை நாங்கள் கௌரவப்படுத்த வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
இந்த வகையில் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் நிகழ்வுகள் அதன் பாடசாலை முன்றலில் 05.10.2012ல் மிக விமர்சியாக நடைபெற்றது. அதன் போது அப் பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு மற்றும் அங்கு சிறப்பாக கடமையாற்றிய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டார்கள் இந் நிகழ்வு தரம் – 9 ம் வகுப்பு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றது இங்கு விசேட அம்சமாகும்.
தகவல்கள் – ஏ.எம்.தாஹாநழீம் – (Publisher – Google Inc)
சம்மாந்துறை -முஸ்லிம் மகளிர் வித், புலமைப்பரிசில் பரீட்சையில் வலய மட்ட சாதனை(படங்கள் இணைப்பு)
சம்மாந்துறை வலயத்தில் பலராலும் பெருமையாகப் பேசப்படும் பாடசாலையான கமு/ சது/ முஸ்லிம் மகளிர் வித்தியாலயம், இந்த முறையும் வலயத்தில் சாதனை படைத்துள்ளது. நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் 26 மாணவர்கள் சித்தி பெற்றதுடன், வலயத்தின் கூடுதலான புள்ளியான 179 புள்ளிகளைப் பெற்ற MBM.தஸ்னீம் வலய மட்ட சாதனையாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பாக ஒவ்வொரு வருடம் சராரியாக 20- 40ற்கும் இடைப்பட்ட மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெறவைக்கும் ஒரு சிறந்த பாடசாலையாக எல்லோராலும் பேசப்படுவதுடன் இது ஒரு பிள்ளை நேயப் பாடசாலையாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இந்தப்பாடசாலையை தரிசிப்பதற்காக நாளாந்தம் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு பிள்ளை நேயப்பாடசலைகள் இங்கு வந்து பாடசாலையின் சிறப்பான கற்றல், கற்பித்தல் மற்றும் அதன் சூழலின் சிறப்புத்தன்மையை சுவைத்துச் செல்வதுடன் அவர்கள் தங்களுடைய பாடசாலைகளிலும். இங்குள்ள சிறப்புக்களை உதாரணமாகக் கொண்டு அமுல்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்றாலும் அது மிகையாகாது.
இவ்வாறான பல்வேறுபட்ட சிறப்புக்களை அடைவதற்கு அதனை முகாமைப்படுத்தி நிர்வகிக்கின்ற அதிபரான TM. தௌபீக் அவர்களின் சேவையும் மற்றும் அங்கு கடமையாற்றும் ஆசிரியர்களின் சேவையும் அளப்பெரியது என்பதை இங்கு சுட்டிக்காடடுதல் பொருத்தமாகும்.
மேலும், இந்த ஆண்டு இவர்கள் சித்தி பெற உறுதிணையாக நின்று உழைத்த ஆசிரியைகளான ஜனாபா - RUM. மன்சூர், AB. பரீதா , AU. றிம்லான் நன்றிகைகளை தெரிவிப்பதோடு, ஒவ்வொரு வருடமும் இந்தப்பாடசாலையில் மாணவர்களைச் சேர்ந்துக் கொள்ளுவதில் ஏனைய பாடசாலையை விட போட்டித்தன்மையும் காணப்படுகின்றது என்பதையும் இங்கு கோடிட்டு காட்டுதல் வேண்டும்.
தகவல்கள் – ஏ.எம்.தாஹாநழீம் – (Publisher – Google Inc)