கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வருடாந்தம் பிரதேச ரீதியாக நடத்தப்பட்டுவரும் பிரதேச சாஹித்திய கலாசார விழா சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 22-03-2012 வியாழக்கிழமை நடைபெற்றது. கலை நிகழ்வுகள்,சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொணடு வெற்றியீட்டியவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. சம்மாந்துறை பிரதேச செயலக சாஹித்திய கலாசார பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் சாஹித்திய கலாசார பேரவையின் பிரதித் தலைவர் கலாபூஷனம் மாறன் யூ.செயின் ஆகியவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
Saturday, March 24, 2012
நாடுபூராகவும் ‘ஒரு கிராமத்துக்கு ஒரு மில்லியன் வேலைத்திட்டம்’ ஆரம்பம்
மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கு அமைவாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் ஒரு கிராமத்துக்கு ஒரு மில்லியன் வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் சம்மாந்துறை தைக்கா பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்தீன், மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஹ்பர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் (ஐ.பி), பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ. ஜப்பார், ஜனாதிபதி இணைப்பாளர்கள், ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Thursday, March 22, 2012
ஒன்பது மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றம்!
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!
இதன்படி அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன
8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை
ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடான இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது.
வாக்களித்த நாடுகளின் முழு விபரம் வருமாறு:
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-
பங்களாதேஷ்- சீனா- கொங்கோ- கியூபா- ஈக்குவாடோர்- இந்தோனேசியா- குவைத் மாலைத்தீவு- மைவுரிடானியா- பிலிபைன்ஸ்இ-கட்டார்- ரஸ்யா- சவுதி அரேபியா- தாய்லாந்து- உகாண்டா.
இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள்:-
அவுஸ்திரேலியா- பெல்ஜியம்- பெனின்- கெமரூன-இ சிலி- கொஸ்டரீக்கா- செக் குடியரசு- கோத்தமாலா- ஹங்கேரி- இந்தியா- இத்தாலி- லிபியா- மொரிடஸ்- மெக்சிகோ- நைஜீரியா- நோர்வே- பெரு- போலந்து- மோல்டோவா- ரோமானியா- ஸ்பெயின்- சுவிட்ஸர்லாந்து- ஐக்கிய அமெரிக்கா- உருகுவே.
வாக்களிக்காத நாடுகள்:
அங்கோலா- போர்சுவானா- பேர்கினா பசோ- ஜிபூடி- ஜோர்தான்- கிர்கிஸ்தான்- மலேசியா- செனகல்.(எம்.ரி.-977)
இதன்படி அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன
8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை
ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடான இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது.
வாக்களித்த நாடுகளின் முழு விபரம் வருமாறு:
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-
பங்களாதேஷ்- சீனா- கொங்கோ- கியூபா- ஈக்குவாடோர்- இந்தோனேசியா- குவைத் மாலைத்தீவு- மைவுரிடானியா- பிலிபைன்ஸ்இ-கட்டார்- ரஸ்யா- சவுதி அரேபியா- தாய்லாந்து- உகாண்டா.
இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள்:-
அவுஸ்திரேலியா- பெல்ஜியம்- பெனின்- கெமரூன-இ சிலி- கொஸ்டரீக்கா- செக் குடியரசு- கோத்தமாலா- ஹங்கேரி- இந்தியா- இத்தாலி- லிபியா- மொரிடஸ்- மெக்சிகோ- நைஜீரியா- நோர்வே- பெரு- போலந்து- மோல்டோவா- ரோமானியா- ஸ்பெயின்- சுவிட்ஸர்லாந்து- ஐக்கிய அமெரிக்கா- உருகுவே.
வாக்களிக்காத நாடுகள்:
அங்கோலா- போர்சுவானா- பேர்கினா பசோ- ஜிபூடி- ஜோர்தான்- கிர்கிஸ்தான்- மலேசியா- செனகல்.(எம்.ரி.-977)
தனியார் வைத்தியக் கல்லூரி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி அமைப்பது தொடர்பான ஆய்வூகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
அலரி மாளிகையில் வைத்து சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த அறிக்கையை கையளித்தார். இது தொடர்பான நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க- நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர- சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திர ருபேரு ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். (எம்.ரி.-977)
அல் மதீனாப் பாடசாலையில் பரிசளிப்பு விழாவும் புத்தக வெளியீடும்
சம்மாந்துறை அல் மதீனாப் பாடசாலையில் இன்று கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்(டி.ஏ) அவர்களின் தலைமையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும்இ தடம் புத்தக வெளியீடும் இடம் பெற்றதோடு ஓய்வு பெற்ற அதிபருக்கான கௌரவிப்பு நிகழவும் இடம்பெற்றது. இதில் கௌரவ அதிதிகள் வரிசையில் சம்மாந்துறை வலயக் கல்விப் பிரதிப் பணிப்பாளர்களான திரு.அஸீஸ் முகைதீன் அவர்களும் எச்.எம்.பாறூக் அவர்களும் ஜானாதிபதி ஒருங்கிணைப்புச் செயலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்
Wednesday, March 21, 2012
கல்முனை ஸாஹிரா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி - 2012
2012.03.17 ம் திகதி சனிக்கிழமை அன்று கல்முனை ஸாஹிரா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி மிகவூம் விமர்சையாக கல்லூரி அதிபர் அல்-ஹாஜ்: எம்.எம்.இஸ்மாயில் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு அதிதிகளாக,
எஸ்.எம்.எம்.ஹரிஸ் (பாராளுமன்ற உறுப்பினர்)
கலாநிதி: சீறாஸ் மீராசாஹிப் (மாநகர சபை முதல்வர்)
அல்ஹாஜ்: எம்.ரீ.எம்.தௌபீக் (வலயக் கல்வி அதிகாரி. கல்முனை)
ஏ.எல்.எம். சலீம் (பிரதேச செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு, போட்டி நிகழ்ச்சிப் பணிப்பாளராக கல்லூரியின் பிரதி அதிபர் A.A.Gafoor அவர்கள் பணிபுரிந்தமையூம் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு அதிதிகளாக,
எஸ்.எம்.எம்.ஹரிஸ் (பாராளுமன்ற உறுப்பினர்)
கலாநிதி: சீறாஸ் மீராசாஹிப் (மாநகர சபை முதல்வர்)
அல்ஹாஜ்: எம்.ரீ.எம்.தௌபீக் (வலயக் கல்வி அதிகாரி. கல்முனை)
ஏ.எல்.எம். சலீம் (பிரதேச செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு, போட்டி நிகழ்ச்சிப் பணிப்பாளராக கல்லூரியின் பிரதி அதிபர் A.A.Gafoor அவர்கள் பணிபுரிந்தமையூம் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
Sunday, March 18, 2012
VTC இல் தற்போது BAKER எனும் புதிய பாடநெறி
சம்மாந்துறை VTC இல் தற்போது BAKER எனும் புதிய பாடநெறி ஆரம்பித்துள்ளது. பாடநெறி முடீவில் NVQ தரச் சான்றிதழ் வழங்கப்படும். (பயிற்சி நெறி 03மாத காலம் மாத்திரமே.)
இப் பாடநெறிக்கு மேலும் 03 மாணவர்கள் தேவைப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலதிக தகவல்களுக்கு
Mrs: Jumaana Wazeem 075 23 84 484
இப் புகைப்படம் மேற்குறித்த பாடநெறி மாணவர்களால் செய்யப்பட்ட பொருட்கள் ஆகும்.
--
firos123g@gmail.com
info@sammanthurai.tk
www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk
Friday, March 16, 2012
காருக்குள் கஞ்சா- சம்மாந்துறை பொலீஸார் மடக்கிப் பிடிப்பு
நேற்று அதிகாலை சம்மாந்துறையில் 19கிலோ கிராம் கஞ்சா பொதிகளுடன் கார் ஒன்று கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை சந்தியில் வைத்து நேற்று அதிகாலை 4.30 மணியளவில் 19கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகளுடன் வெள்ளை
நிற 6-5307இலக்க, 404-கார் ஒன்று கைப்பற்றப்பட்டதுடன் பொருட்களை கொண்டு
வந்த கார் சாரதியும் சம்மாந்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.சம்மாந்துறை பொலிசாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பினை அடுத்து பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையினை அடுத்து இவ்வாகனம் மல்வத்தையில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா பொதிகளை காரின் முன் பொனட்டில் பெருத்தப்பட்டுள்ள லைட் கோப்பையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இக்கஞ்சா பொதிகள் தனமல்வில பிரதேசத்திலிருந்து கல்முனை பிரதேசத்துக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிக்கப்பட்ட கஞ்சா பொதிகளை பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், பெருங்குற்றவியல் பொறுப்பதிகாரி கே.எம்.இப்றாஹீம், பொலிஸ் பரிசோதகர் குமாரகே உட்பட பொலிஸ் அதிகாரிகள் பார்வையிடுவதையும் இங்கு காணலாம். metromirro
Wednesday, March 14, 2012
உங்கள் உயிரை காப்பாற்றலாம் APPENDIX..
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்
APPENDIX - இந்த உடல் உறுப்பு குறித்து ஏதோ ஒரு வகையில் நாம் நன்கு அறிந்திருக்கவே செய்வோம். இந்த பகுதியில் வரக்கூடிய வீக்கம் (Appendicitis) கொடுக்கக்கூடிய வலியை நாம் உணர்ந்தோ/கேள்விப்பட்டோ இருப்போம். இந்த பதிவானது, இந்த உறுப்பு குறித்த நவீன அறிவியல் தகவல்களை அலசுகின்றது. அதுமட்டுமல்லாமல், இந்த உறுப்பை அகற்றினால் நம்முடைய வாழ்க்கையில் எம்மாதிரியான பாதிப்புகளை அது ஏற்படுத்தலாம் என்பதையும் விளக்க முயற்சிக்கின்றது.
சென்ற மாதம் "Scientific American" ஆய்விதழின் தளத்தில், அப்பென்டிக்ஸ் குறித்து வெளிவந்த ஒரு கட்டுரை என்னை வெகுவாக கவர்ந்தது. "அப்பென்டிக்ஸ் உங்கள் உயிரை காப்பாற்றலாம் (Your Appendix Could Save Your Life)" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரை, என்னுடைய கவனத்தை ஈர்த்ததற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கிய காரணம் என்றால், இந்த உடல் உறுப்பு நீண்ட காலமாகவே உபயோகமற்ற அல்லது மிக குறைவான பயன்பாட்டை கொண்ட உறுப்பு என்பதாக கருதப்பட்டு வந்தது.
உடலின் எந்தவொரு பாகத்தையும் உபயோகமற்றதாக நான் கருதியதில்லை. பரிணாம கோட்பாட்டின் பல யூகங்கள் காலப்போக்கில் நிலைத்ததில்லை. அது போல, இந்த அப்பென்டிக்ஸ் குறித்த புரிதல்களும் ஒரு நாள் மாறும் என்பதாகவே என்னுடைய எண்ணம் இருந்தது.
இம்மாதிரியான நேரத்தில், இந்த கட்டுரையை பார்க்க நேர்ந்ததால் ஒருவிதமான ஈர்ப்பு இயல்பாகவே வந்துவிட்டது (இதுப்போன்ற மேலும் சில கட்டுரைகளை வேறு சில அறிவியல் தளங்களிலும் பார்த்திருக்கின்றேன்).
தலைப்பை பார்த்தவுடன் நான் கேட்டுக்கொண்ட கேள்வி இது தான், உயிரையே இந்த உறுப்பு காப்பாற்றும் என்றால் இது எப்படி பயனற்ற ஒரு உறுப்பாக இருக்க முடியும்?
தலைப்பை பார்த்தவுடன் நான் கேட்டுக்கொண்ட கேள்வி இது தான், உயிரையே இந்த உறுப்பு காப்பாற்றும் என்றால் இது எப்படி பயனற்ற ஒரு உறுப்பாக இருக்க முடியும்?
டியுக் பல்கலைகழக மருத்துவ கழகத்தை (Duke University Medical Center) சேர்ந்த ஆய்வாளரான பில் பார்க்கர், அப்பென்டிக்ஸ் ஒரு உபயோகமற்ற உறுப்பு என்ற கருத்தை நிராகரித்தார். மேலும் இதுக்குறித்த ஒரு சுவாரசியமான யூகத்தை முன்வைத்தார். ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை (Beneficial bacteria) சேமித்து வைக்கும் ஒரு பெட்டகமாக அப்பென்டிக்ஸ் செயல்படுகின்றது என்ற யூகம் தான் அது.
சற்றே தெளிவாக கூற வேண்டுமென்றால் இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். காலரா போன்ற நோய்கள் தாக்கும் போது, அவை குடல் பகுதியில் உள்ள ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை அழித்து/செயலிழக்க செய்து விடுகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில், தான் சேமித்து வைத்துள்ள நல்ல பாக்டீரியாக்களை கொடுப்பதின் மூலம் குடல் பகுதி மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப அப்பென்டிக்ஸ் உதவுகின்றது.
இன்னும் சுருக்கமாக சொல்லுவேன்றால், நல்ல பாக்டீரியாக்களின் சரணாலயமாக அப்பென்டிக்ஸ் திகழ்கின்றது. அப்பென்டிக்ஸ் இருப்பவர்கள், அது இல்லாதவர்களை காட்டிலும், குடல் ரீதியான பாதிப்புகளில் இருந்து எளிதாக மீண்டு விடுகின்றனர்.
பார்க்கரின் இந்த ஐடியா நிச்சயம் புரட்சிகரமானது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக, அரிசோனா பல்கலைகழகம் மற்றும் அரிசோனா மாநில பல்கலைகழக ஆய்வாளர்களுடன் சேர்ந்து இதுக்குறித்த ஆய்வை முன்னெடுத்து சென்றார்கள் டியுக் பல்கலைகழக ஆய்வாளர்கள். ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்கவும் செய்தார்கள். அப்பென்டிக்ஸ் குறித்த டார்வினின் எண்ணம் தவறு என்றும், இந்த உடல் உறுப்பு பயனற்றது இல்லை என்றும் தெரிவித்தார்கள்.
ஆனால் ஒரு தீர்மானமான முடிவிற்கு அனைத்து ஆய்வாளர்களாலும் வர முடியவில்லை. காரணம், இந்த ஐடியா இன்னும் தெளிவாக சோதிக்கப்பட வேண்டும்.
எப்படி சோதிப்பது?
யார் முன்வருவார்கள், காலரா போன்ற நோய் கிருமிகளை தங்கள் உடலில் செலுத்திக்கொண்டு ஆய்வுக்கு உட்பட யார் தான் முன்வருவார்கள்? எலி போன்ற உயிரினங்களில் சோதிக்கலாம் என்றால் அவற்றிற்கு அப்பென்டிக்ஸ் கிடையாது.
வேறு வழி?.... ஒரே ஒரு வழி தான் இருக்கின்றது. மனிதர்களில் தான் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். குடல் ரீதியான நோய்களால் பாதிக்கப்பட்டோரை கணக்கிட வேண்டும். பின்னர் அவர்களை அப்பென்டிக்ஸ் உள்ளவர்கள், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்கள் என்று இரண்டாக பிரிக்க வேண்டும். பின்னர் இவர்களை கண்காணிக்க வேண்டும். கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் இதுவும் செயல்முறை ரீதியாக கடினமான ஒன்றே.
இம்மாதிரியான சூழ்நிலையில் தான், Clinical Gastroenterology and Hepatology என்ற ஆய்விதழில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பரவசமூட்டும் ஆய்வு முடிவுகள் வெளிவந்தன. பார்க்கரின் ஐடியா செயல்முறை ரீதியாக சோதிக்கப்பட்டு விட்டதாக தெரிய வந்தது.
எப்படி?
C.difficile எனப்படும் படுஆபத்தான நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்ட சுமார் 254 நோயாளிகளை கண்டெடுத்தனர். இவர்கள் அனைவரும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களை அப்பென்டிக்ஸ் உள்ளவர்கள், அகற்றப்பட்டவர்கள் என்று பிரித்துக்கொண்டார்கள். பிறகு கண்காணிக்க ஆரம்பித்தார்கள்.
இந்த நுண்ணுயிரிகள் இயல்பான நிலையில் குடல்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுடன் போட்டியிடாது. குடல்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிய ஆரம்பித்துவிட்டால் இவை வேகமாக வளர/திரும்ப (recurrence) ஆரம்பித்துவிடும். பயிர்களுக்கு நடுவே இருக்கும் களை போன்றவை இவை.
பார்க்கரின் யூகம் சரியென்றால், அப்பென்டிக்ஸ் இருப்பவர்களின் உடலில் இந்த நோய் கிருமிகள் திரும்பக்கூடாது. ஏனென்றால், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குறைந்தால், தான் சேமித்து வைத்துள்ள பாக்டீரியாக்களை அப்பென்டிக்ஸ் தரும். இந்த பாக்டீரியாக்கள் அந்த நுண்ணுயிரிகளை திரும்பவிடாமல் தடுக்கும். அதே நேரம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்களின் குடல்களில் இந்த நுண்ணுயிரிகள் திரும்ப வேண்டும்.
கண்காணிக்கப்பட்டு முடிவுகள் வெளிவந்தன.
ஆஹா...
பார்க்கர் எதனை கணித்தாரோ அது தான் முடிவாக இருந்தது. ஆம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்ட 48% நோயாளிகளில் C.difficile நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன. அதேநேரம், அப்பென்டிக்ஸ் உள்ளவர்களில் 11% பேரில் மட்டுமே இந்த நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன.
பார்க்கர் எதனை கணித்தாரோ அது தான் முடிவாக இருந்தது. ஆம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்ட 48% நோயாளிகளில் C.difficile நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன. அதேநேரம், அப்பென்டிக்ஸ் உள்ளவர்களில் 11% பேரில் மட்டுமே இந்த நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன.
ஆக, அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்கள் இந்த நோய் கிருமியால் நான்கு மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த முடிவுகள் நிச்சயம் பார்க்கரையும், அவரது சக ஆய்வாளர்களையும் ஊக்கப்படுத்தியிருக்கும்.
ஆனால், இங்கு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விசயங்களும் இருக்கின்றன. அதாவது, இந்த சோதனை முடிவுகள் அப்பென்டிக்ஸ் குறித்த தெளிவை தருகின்றனவா என்ற கேள்விக்கு இன்னும் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும். காரணம், அறிவியல் இப்படியாக வேலை செய்வதில்லை. ஒரு ஆய்வு முடிவை வைத்துக்கொண்டு நாம் எதையும் சொல்ல முடியாது. இன்னும் நிறைய ஆய்வுகள் இதில் செய்யப்பட்டாலே தெளிவான பார்வை கிடைக்கும்.
அதே நேரம், அப்பென்டிக்ஸ் நம் உடலில் மிகவும் பயனுள்ள உறுப்பு என்ற யூகத்தை இந்த ஆய்வு முடிவுகள் ஊக்கப்படுத்தியிருக்கின்றன. மேற்கொண்டு இந்த திசையில் பயணிக்க இந்த ஆய்வுகள் வழிவகை செய்திருக்கின்றன.
சரி, அப்பென்டிக்ஸ் வீக்கத்தால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? இந்த வீக்கம் உண்டாக்கும் வலியை அதனை அனுபவித்தவர்களை கேட்டால் தெரியும். துடிதுடித்து போய் விடுவார்கள். காலங்காலமாக இதனை உபயோகமில்லாத உறுப்பு என்று அகற்றிக்கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள். இப்போது என்ன செய்வது?
Fine...நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ அப்பென்டிக்ஸ் வீக்கத்தால் பாதிக்கப்பட்டால், உங்கள் மருத்துவரை தீவிரமாக கன்சல்ட் செய்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை அதனை அகற்றாமல் மாற்று வழியில் தீர்வு காண முயற்சி செய்யுங்கள். சில ஆய்வுகள், ஆண்டிபயாடிக் மூலமாக வீக்கத்தை குறைக்கலாம் என்று தெரிவிக்கின்றன. இருப்பினும் இத்தகைய ஆய்வுகள் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன.
பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லையா? வீக்கத்தை குறைக்கும் வேறு வழிகள் கண்டுபிடிக்கப்படும் வரை அதனை அகற்றுவதை தவிர மருத்துவர்களுக்கு வேறு வழியில்லை.
இறைவா, கூடிய விரைவில் இதற்கான நிரந்தர தீர்வை கண்டெடுக்கும் வழிமுறைகளை காட்டித் தருவாயாக...ஆமீன்.
இறைவனே எல்லாம் அறிந்தவன்.
வெளிநாடுகளில் வேலை பார்க்கின்ற இலங்கையர்களுக்கு அமைச்சர் டிலான் ஐ
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை அமுல்படுத்த மேற்குலக நாடுகள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தால் முடியவே முடியாது என்று தெரிவித்து உள்ளார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா.இவர் அரச தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு நம்பிக்கை வெளியிட்டார்.இவர் இங்கு முக்கியமாக தெரிவித்தவை வருமாறு இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை அமுல்படுத்த மேற்குலக நாடுகள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தால் முடியவே முடியாது. ஏனெனில் இலங்கைக்கு தேவையான அன்னியச் செலவாணி வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களால் அனுப்பப்பட்டு வருகின்றன.இலங்கைக்கு அதிக அன்னியச் செலவாணியை பெற்றுக் கொடுப்பவர்கள் வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்கள் ஆவர். எனவே இவர்களும் ஹீரோக்கள்தான். 2009 ஆம் ஆண்ட 813.91 மில்லியன் ரூபாய் வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் இருந்து கிடைத்தது. இது மொத்த அன்னியச் செலவாணியில் 47.03 விகிதம். 2011 ஆம் ஆண்டில் 465.37 மில்லியன் ரூபாய் கிடைத்தது. இது மொத்த அன்னியச் செலவாணியில் 49.63 வீதம்.இலங்கை இன்று பொருளாதார ரீதியாக பலமாக உள்ளது. இதற்கு வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களின் பங்களிப்பே மிக முக்கிய காரணம் ஆகும்.ஸ்!
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை அமுல்படுத்த மேற்குலக நாடுகள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தால் முடியவே முடியாது என்று தெரிவித்து உள்ளார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா.இவர் அரச தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு நம்பிக்கை வெளியிட்டார்.இவர் இங்கு முக்கியமாக தெரிவித்தவை வருமாறு இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை அமுல்படுத்த மேற்குலக நாடுகள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தால் முடியவே முடியாது. ஏனெனில் இலங்கைக்கு தேவையான அன்னியச் செலவாணி வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களால் அனுப்பப்பட்டு வருகின்றன.இலங்கைக்கு அதிக அன்னியச் செலவாணியை பெற்றுக் கொடுப்பவர்கள் வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்கள் ஆவர். எனவே இவர்களும் ஹீரோக்கள்தான். 2009 ஆம் ஆண்ட 813.91 மில்லியன் ரூபாய் வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் இருந்து கிடைத்தது. இது மொத்த அன்னியச் செலவாணியில் 47.03 விகிதம். 2011 ஆம் ஆண்டில் 465.37 மில்லியன் ரூபாய் கிடைத்தது. இது மொத்த அன்னியச் செலவாணியில் 49.63 வீதம்.இலங்கை இன்று பொருளாதார ரீதியாக பலமாக உள்ளது. இதற்கு வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களின் பங்களிப்பே மிக முக்கிய காரணம் ஆகும்.ஸ்!
Thursday, March 8, 2012
தேசிய பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டி
இன்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டிகளின்
இறுதி நாள் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எஸ்.அப10பக்கர் அவர்களின் தலைமையில் மிகவும் விமர்சையாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக
கிழக்கு மகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்
பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத் மற்றும் பாடசாலையின் முன்னால் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டணர்.
மேலும் இதில் வெற்றியீட்டிய அணிகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இளந் நிகழ்வில் நேரடி ஒளி பரப்பு சேவையையும் எமது தள வரிசையினூடாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இறுதி நாள் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எஸ்.அப10பக்கர் அவர்களின் தலைமையில் மிகவும் விமர்சையாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக
கிழக்கு மகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்
பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத் மற்றும் பாடசாலையின் முன்னால் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டணர்.
மேலும் இதில் வெற்றியீட்டிய அணிகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இளந் நிகழ்வில் நேரடி ஒளி பரப்பு சேவையையும் எமது தள வரிசையினூடாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Wednesday, March 7, 2012
பங்களாதேசத்தில் சவுதி அரேபியா தூதுவர் சுட்டுக் கொலை!
பங்களாதேசத்திற்கான சவுதி அரேபியா தூதுவர் காலிப் அல் அலி, தலைநகர் டாக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார் என அறிவிக்கப்படுகிறதுசவுதி அரேபியா தூதுவர் காலிப் அல் அலி நேற்று மாலை தனது உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து நடை பயிற்சிக்காக வெளியே சென்ற போது எதிரே காரில் வந்த ஒருவர துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டு தப்பியோடி விட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
காயமடைந்த தூதர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் முன்பே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவி்த்தனர். பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் சவுதியில் 8 வங்கதேசத்தினர் கொலை, கொள்ளை வழக்கில் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கவே தூதரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் பொலிசார் கூறுகின்றனர்.
சவுதி தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வளைகுடா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ன. வங்கதேச நாட்டிற்கு சவுதி அரேபியா பல வழிகளில் பெருமளவு நிதி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்த தூதர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் முன்பே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவி்த்தனர். பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் சவுதியில் 8 வங்கதேசத்தினர் கொலை, கொள்ளை வழக்கில் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கவே தூதரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் பொலிசார் கூறுகின்றனர்.
சவுதி தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வளைகுடா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ன. வங்கதேச நாட்டிற்கு சவுதி அரேபியா பல வழிகளில் பெருமளவு நிதி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
metromirror
Tuesday, March 6, 2012
2012 ஆம் ஆண்டு G.C.E A/L பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2012 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இம்மாதம் 30 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீ்ட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எச்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
புதிய பாடவிதானம் மற்றும் பழைய பாடவிதானங்களுக்கான விண்ணப்பங்கள் இதற்கமைய ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
தனியார் விண்ணப்பதாரிகள் உரிய காலத்திற்குள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிய பாடவிதானம் மற்றும் பழைய பாடவிதானங்களுக்கான விண்ணப்பங்கள் இதற்கமைய ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
தனியார் விண்ணப்பதாரிகள் உரிய காலத்திற்குள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Monday, March 5, 2012
உயர் கற்கை நெறிகளுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு -2012
நீங்கள் எதிர்பார்க்கும் எதிர்கால இலக்குகலை எய்திட உங்கள் பரீட்சைப் பெறுபேறுகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் மேலும் உயர்தரத்தில் கற்கும் மாணவர்கள் தங்களது கற்கை நெரிபற்றிய தெளிவான எதிர்கால அறிவைப் பெற்றுக்கொள்வதற்குமான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு SMART FRIENDS ORGANIZATION இனால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
1 உயர் கற்கை நெறிகளைத் தெரிவு செய்வதற்கான அடிபடைத் தேவைகளும், தெரிவு செய்யும் முறையும்
2 உயிரியல் விஞ்ஞன கற்கை நெறியும் எதிர்காலமும்
3 கலைத்துறையும் எதிர்காலமும்
4 பெளதீக விஞ்ஞான கற்கை நெறியும் எதிர்காலமும்
5 வர்த்தக முகாமைத்துவ கற்கை நெரியும் எதிர்காலமும்
6 தொழில்சார் கற்கை நெறிகளும்,பல்கலைக்கழகத் தெரிவில் Z-Score வெட்டுப்புள்ளி முறையும்.
ஆகிய தலைப்புகளில் தகுதிவாய்ந்த விரிவுரையாளர்களினால் கருத்துரைகள் வழங்கப்படவிருக்கின்றன.
இக்கருத்தர்ங்கில் உச்சப்பயனைப் பெற்றுக்கொள்ள க.பொ.(சா/த)
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களையும், க.பொ.த.(உ/த)
கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களையும்,மற்றும் பெற்றோர்களையும் அழைக்கின்றோம்.
இடம் : அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி,சம்மாந்துறை
காலம் : 07/03/2012 காலை 8.00 மணி
SMART FRIENDS ORGANIZATION SAMMANTHURAI
1 உயர் கற்கை நெறிகளைத் தெரிவு செய்வதற்கான அடிபடைத் தேவைகளும், தெரிவு செய்யும் முறையும்
2 உயிரியல் விஞ்ஞன கற்கை நெறியும் எதிர்காலமும்
3 கலைத்துறையும் எதிர்காலமும்
4 பெளதீக விஞ்ஞான கற்கை நெறியும் எதிர்காலமும்
5 வர்த்தக முகாமைத்துவ கற்கை நெரியும் எதிர்காலமும்
6 தொழில்சார் கற்கை நெறிகளும்,பல்கலைக்கழகத் தெரிவில் Z-Score வெட்டுப்புள்ளி முறையும்.
ஆகிய தலைப்புகளில் தகுதிவாய்ந்த விரிவுரையாளர்களினால் கருத்துரைகள் வழங்கப்படவிருக்கின்றன.
இக்கருத்தர்ங்கில் உச்சப்பயனைப் பெற்றுக்கொள்ள க.பொ.(சா/த)
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களையும், க.பொ.த.(உ/த)
கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களையும்,மற்றும் பெற்றோர்களையும் அழைக்கின்றோம்.
இடம் : அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி,சம்மாந்துறை
காலம் : 07/03/2012 காலை 8.00 மணி
SMART FRIENDS ORGANIZATION SAMMANTHURAI
Sunday, March 4, 2012
2020 இல் பூமிக்குக் காத்திருக்கும் ஆபத்து!: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!
பூமிக்கு ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விஞ்ஞானிகள் பலமுறை எச்சரித்துள்ளனர். இவற்றில் சில அவர்களின் கணிப்பின் படி நடந்துள்ளதுடன், பல நடக்காமலும் போயுள்ளன.
எனினும் இத்தகைய எதிர்வுகூறல்கள் லேசான பயத்தை நிச்சயமாக வரவழைக்கக் கூடியன.
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டில் பூமிக்கு ஏற்படக்கூடிய ஆபத்தொன்று தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆம், 2020 ஆம் ஆண்டு பூமியை சூரியப் புயல் தாக்கலாம் எனவும், இதற்கான வாய்ப்பு 8 இல் 1 ஆகக் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஏற்படும் பாதிப்பினால் பல ஆயிரம் கோடி ரூபாக்களுக்கு நட்டமேற்படுமெனவும், இதில் இருந்து மீள எமக்கு ஒரு தசாப்பதத்துக்கு மேல் தேவைப்படுமெனவும் குறிப்பிடுகின்றனர். இதே போன்ற புயலொன்று சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியைத் தாக்கியுள்ளது. இதன்போது தந்தி நிலையங்கள் தீப்பற்றி எரிந்துள்ளதுடன் அவற்றின் வலையமைப்பும் பாதிக்கப்பட்டன.
இன்றைய இலத்திரனியல் மயமாக்கப்பட்ட உலகில் அத்தகையதொரு புயல் தாக்குமாயின் அதன் விளைவுகள் முன்னரை விடப் பல மடங்கு மோசமாக இருக்குமென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது மின் சக்தி, வானொலி தொடர்பாடல், ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் ஆகியவற்றில் பாரிய பாதிப்பை உண்டாக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற அனர்த்தங்களின் காலவரையறைகளை ஒப்பிட்டே இம்முடிவை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இத்தகைய எதிர்வுகூறல்கள் லேசான பயத்தை நிச்சயமாக வரவழைக்கக் கூடியன.
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டில் பூமிக்கு ஏற்படக்கூடிய ஆபத்தொன்று தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆம், 2020 ஆம் ஆண்டு பூமியை சூரியப் புயல் தாக்கலாம் எனவும், இதற்கான வாய்ப்பு 8 இல் 1 ஆகக் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஏற்படும் பாதிப்பினால் பல ஆயிரம் கோடி ரூபாக்களுக்கு நட்டமேற்படுமெனவும், இதில் இருந்து மீள எமக்கு ஒரு தசாப்பதத்துக்கு மேல் தேவைப்படுமெனவும் குறிப்பிடுகின்றனர். இதே போன்ற புயலொன்று சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியைத் தாக்கியுள்ளது. இதன்போது தந்தி நிலையங்கள் தீப்பற்றி எரிந்துள்ளதுடன் அவற்றின் வலையமைப்பும் பாதிக்கப்பட்டன.
இன்றைய இலத்திரனியல் மயமாக்கப்பட்ட உலகில் அத்தகையதொரு புயல் தாக்குமாயின் அதன் விளைவுகள் முன்னரை விடப் பல மடங்கு மோசமாக இருக்குமென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது மின் சக்தி, வானொலி தொடர்பாடல், ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் ஆகியவற்றில் பாரிய பாதிப்பை உண்டாக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற அனர்த்தங்களின் காலவரையறைகளை ஒப்பிட்டே இம்முடிவை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சவூதி , அபுதாபியிலிருந்து எண்ணெய் கொள்வனவுக்கு இலங்கை முயற்சி
ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதால் இலங்கைக்கான மசகு எண்ணெய் மற்றும் சுத்திரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்குமாறு சவூதி அரேபியா, அபுதாபி ஆகிய நாடுகளை சம்மதிக்கச் செய்ய முடியுமென இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது.
சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட சர்வதேச பெற்றோலிய நிறுவனமான ஆரம்கோ மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் கம்பனி ஆகியனவற்றுடன் மேலதிக விநியோகம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக பெற்றோலிய கைத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். இப்பேச்சுவார்த்தைகளுக்காக பெற்றோலிய கைத்தொழில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவும் அடுத்தவாரம் இவ்விரு நாடுகளுக்கும் செல்லக்கூடும் என மேற்படி அதிகாரி தெரிவித்தார்.
ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் அளவு இவ்வருடம் குறைந்தபட்சம் 10 சதவீதத்தால் குறைவடையும் எனவும் இதனால் சர்வதேச சந்தையிலிருந்து சுத்திரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதிக்குமதிக்கான சாத்தியத்தை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த வருடம், 1.7 பில்லியன் டொலர் செலவில் 2 மில்லியன் தொன் மசகு எண்ணெயை இலங்கை இறக்குமதி செய்தது. அவற்றில் 1.93 மில்லியன் தொன் எண்ணெய் ஈரானிலிருந்து 1.6 பில்லியன் டொலர் செலவில் இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது உலக சந்தையின் கேள்விப்பத்திரங்களுக்கூடாக இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து சுத்திரிக்கப்பட்ட எண்ணெயை இலங்கை இறக்குமதி செய்கிறது. இந்நிலையில் எண்ணெயை இறக்குமதிக்கான கடன் எல்லையை விஸ்தரிக்குமாறு அந்நிறுவனத்தை கோருவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஓமானிடமிருந்தும் இலங்கை உதவிகளை கோரியுள்ளபோதிலும் அந்நாட்டிடமிருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை என அவ்வதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, ஈரானிய எண்ணெய் நெருக்கடியானது எல்.ஐ.ஓ.சி. நிறுவனத்தை பாதிக்கவில்லை என அதன் நிர்வாக இயக்குநர் கே.ஆர். சுரேஷ் குமார் தெரிவித்தார்.
இந்நிறுவனத்துக்கான எண்ணெய் விநியோகம் ரிலையன்ஸ் மற்றும் ஏனைய வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் நேரடியாக மேற்கொள்ளப்படுவதாகவும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தமது நிறுவனம் மிக அதிகமாக தங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறினார். 40,000 தொன் எண்ணெய் கையிருப்பில் உள்ளதாகவும் எல்.ஐ.ஓ.சி. நிறுவனத்தை பொறுத்தவரை தட்டுப்பாடு இல்லை எனவும் அவர்கூறினார்.
tamilmirror
சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட சர்வதேச பெற்றோலிய நிறுவனமான ஆரம்கோ மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் கம்பனி ஆகியனவற்றுடன் மேலதிக விநியோகம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக பெற்றோலிய கைத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். இப்பேச்சுவார்த்தைகளுக்காக பெற்றோலிய கைத்தொழில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவும் அடுத்தவாரம் இவ்விரு நாடுகளுக்கும் செல்லக்கூடும் என மேற்படி அதிகாரி தெரிவித்தார்.
ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் அளவு இவ்வருடம் குறைந்தபட்சம் 10 சதவீதத்தால் குறைவடையும் எனவும் இதனால் சர்வதேச சந்தையிலிருந்து சுத்திரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதிக்குமதிக்கான சாத்தியத்தை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த வருடம், 1.7 பில்லியன் டொலர் செலவில் 2 மில்லியன் தொன் மசகு எண்ணெயை இலங்கை இறக்குமதி செய்தது. அவற்றில் 1.93 மில்லியன் தொன் எண்ணெய் ஈரானிலிருந்து 1.6 பில்லியன் டொலர் செலவில் இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது உலக சந்தையின் கேள்விப்பத்திரங்களுக்கூடாக இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து சுத்திரிக்கப்பட்ட எண்ணெயை இலங்கை இறக்குமதி செய்கிறது. இந்நிலையில் எண்ணெயை இறக்குமதிக்கான கடன் எல்லையை விஸ்தரிக்குமாறு அந்நிறுவனத்தை கோருவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஓமானிடமிருந்தும் இலங்கை உதவிகளை கோரியுள்ளபோதிலும் அந்நாட்டிடமிருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை என அவ்வதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, ஈரானிய எண்ணெய் நெருக்கடியானது எல்.ஐ.ஓ.சி. நிறுவனத்தை பாதிக்கவில்லை என அதன் நிர்வாக இயக்குநர் கே.ஆர். சுரேஷ் குமார் தெரிவித்தார்.
இந்நிறுவனத்துக்கான எண்ணெய் விநியோகம் ரிலையன்ஸ் மற்றும் ஏனைய வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் நேரடியாக மேற்கொள்ளப்படுவதாகவும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தமது நிறுவனம் மிக அதிகமாக தங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறினார். 40,000 தொன் எண்ணெய் கையிருப்பில் உள்ளதாகவும் எல்.ஐ.ஓ.சி. நிறுவனத்தை பொறுத்தவரை தட்டுப்பாடு இல்லை எனவும் அவர்கூறினார்.
tamilmirror
Wednesday, February 29, 2012
சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டனப் பேரணி!
இலங்கைக்கு எதிராக ஜெனீவா மாநாட்டில் அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டை கண்டித்தும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஊர்வலம் இன்று புதன்கிழமை சம்மாந்துறை ஹிஜ்றா ஜூம்மா பள்ளிவாசலிலிருந்து ஹிஜ்றா சந்திவரை இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹறூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் உட்பட சகல பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு தமது எதிப்பை தெரிவித்தனர்.
Monday, February 27, 2012
நபி(ஸல்) அவர்களின் வருகைபற்றி முன்னறிவிக்கும்1500வருடங்கள் பழமைவாயந்த பைபிள் துருக்கியில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.
1500வருடங்கள் பழமைவாய்ந்த இரகசியபைபிள் துருக்கியில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.இந்நூலில் நபி(ஸல்) அவர்களின் வருகைபற்றி முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இயேசுகடவுள் அல்ல, மாறாக மனிதர் என்றே இன்ஜீல் வேதம் கருதுவதாக இஸ்லாமியநம்பிக்கை கூறுகின்றதுடன்,இப்பழமைவாய்ந்த நூலானது திருத்துவக் கொள்கையை முற்றாக நிராகரிப்பதுடன் நபி(ஸல்) அவர்களின் வருகையைப்பற்றி இயேசு முன்னறிவிப்புசெய்வதாகவும் துருக்கியின் கலாச்சார மற்றும் உல்லாசத்துறை அமைச்சரான எட்துகுரல் குனாய் செய்தி நிறுவனமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.1500 வருடங்கள் பழமைவாய்ந்த இவ்வேதநூலானது பர்னாபஸ் கிறிஸ்தவநூலாக இருக்கும் என நம்பப்படுகின்றதுடன்,முஸ்லிம்களால் இது உண்மையான இன்ஜீல் வேதம் என நம்பப்படுகின்றது. சென்.பர்னாபஸ் சைப்ரஸ் கிறிஸ்தவ தேவாலயத்தின் ஸ்தகபராக பராம்பரிய முறையில் அடையாளப் படுத்தப்படுகின்றார்.விலங்குகளின் தோலில் எழுதப்பட்டுள்ள இப்பைபிள்ளானது உண்மையான பதிப்பாக இருக்க முடியமானதுடன், இஸ்லாத்தோடு இது உடன்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிறிஸ்தவ உலகின் பிரதான தளமான வத்திக்கானினால் 1500வருடங்கள்
பழமைவாயந்த பைபிள் நூலை கையளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.துருக்கியின் தலைநகர் அங்காரவில் அமைந்திருக்கும் அங்காரா இனஅமைப்பியல் அருங்காட்சியகத்தில் இப்பைளிலானது தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன்,
இப்பழiவாய்ந்த பைபிளின் பெறுமதி 28மில்லியன்(40மில்லியன் லீரா) அமெரிக்கடொலருக்கும் அதிகமானதாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ உலகின் பிரதான தளமான வத்திக்கானினால் 1500வருடங்கள்
பழமைவாயந்த பைபிள் நூலை கையளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.துருக்கியின் தலைநகர் அங்காரவில் அமைந்திருக்கும் அங்காரா இனஅமைப்பியல் அருங்காட்சியகத்தில் இப்பைளிலானது தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன்,
இப்பழiவாய்ந்த பைபிளின் பெறுமதி 28மில்லியன்(40மில்லியன் லீரா) அமெரிக்கடொலருக்கும் அதிகமானதாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கின் பல பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம்; தமிழ் மக்களும் பங்கேற்பு!
ஐ.நாவின் மனித உரிமை 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றுள்ளன.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் சிங்கள, தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில பரவலாக நடைபெற்றன.
அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று நிந்தவூர் சம்மாந்துறை போன்ற இடங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் காத்தான்குடி ஓட்டமாவடி மற்றும் மட்டக்களப்பு நகரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றன.
ஏறாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஏறாவூர் நகர முதல்வர் அலி சாகிர் மௌலானா உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அதே வேளை திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பியசேன தலைமையில் ஆலையடிவேம்பில் இடம்பெற்ற ஆர்ப்பாடத்தில் அதிகளவு தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது இலங்கை அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கும் வகையிலும் அமெரிக்கா பிரித்தானியா உட்பட பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளுக்கு எதிராக பல்வேறு வாசக அட்டைகளை ஏந்நியவாறு கோஷங்களையும் எழுப்பினார்கள்.
சில பிரதேசங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களும் கலந்து கொண்டதையும் காணக் கூடியதாகவிருந்தது.
ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்ற தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று வழமைநிலை ஸ்தம்பிதமடைந்திருந்தது.
இந்த ஆர்ப்பாட்டங்களின்போது சில இடங்களில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒமாமாவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் சிங்கள, தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில பரவலாக நடைபெற்றன.
அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று நிந்தவூர் சம்மாந்துறை போன்ற இடங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் காத்தான்குடி ஓட்டமாவடி மற்றும் மட்டக்களப்பு நகரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றன.
ஏறாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஏறாவூர் நகர முதல்வர் அலி சாகிர் மௌலானா உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அதே வேளை திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பியசேன தலைமையில் ஆலையடிவேம்பில் இடம்பெற்ற ஆர்ப்பாடத்தில் அதிகளவு தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது இலங்கை அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கும் வகையிலும் அமெரிக்கா பிரித்தானியா உட்பட பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளுக்கு எதிராக பல்வேறு வாசக அட்டைகளை ஏந்நியவாறு கோஷங்களையும் எழுப்பினார்கள்.
சில பிரதேசங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களும் கலந்து கொண்டதையும் காணக் கூடியதாகவிருந்தது.
ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்ற தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று வழமைநிலை ஸ்தம்பிதமடைந்திருந்தது.
இந்த ஆர்ப்பாட்டங்களின்போது சில இடங்களில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒமாமாவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது.
Saturday, February 25, 2012
சம்மாந்துறை சனாதிபதி கலாச்சார விளையாட்டு மத்திய நிலையம் உத்தியோக ரீதியில் கையளிப்பு.
நீண்ட காலமாக கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சின் நிர்வாகத்தின்; கீழ் இருந்த சம்மாந்துறை சனாதிபதி கலாச்சார விளையாட்டு மத்திய நிலையம் பிரதேச சபை தவிசாளர்: ஏ.எம்.எம். நௌஷாத் அவர்களின் வேண்டுகோளுக்கமையஇ கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் ஆலோசனைக்கினங்கஇ விளைட்டு அமைச்சரினால் உத்தியோக ப+ர்வமாக கையளிக்கப்பட்து.
Friday, February 24, 2012
Wednesday, February 22, 2012
அரசின் எரிபொருள் மாணியம் வழங்கும் தேசிய வேலைத்திட்டம்
அரசாங்கத்தின் எரிபொருள் மாணியம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்திலுள்ள வருமானம் குறைந்த மண்ணெண்னை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு மாணிய அட்டை வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் கலந்து கொண்டார் கௌரவ அதிதிகளாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், ஜனாதிபதி கூட்டிணைப்பு உத்தியோகத்தர் எம்.எம்.ஏ.காதர்,முன்னாள் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.தம்பிக்கண்டு, சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்திஅத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
1700க்கு அதிகமான குடும்பங்களுக்கு மண்ணெண்னை எரிபொருள் மாணியம் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
.metromirror.lk (pohoto)
Tuesday, February 21, 2012
சம்மாந்துறை VTC யில் புதிய COURSE ஆரம்பம்
சம்மாந்துறை VTC இல் BAKER எனும் COURSE ஆரம்பிக்கப்பட்ட்டுள்ளது தற்போது அத்ற்கான பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்(மட்டுப்படுத்த்ப்பட்ட மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்)
தகமை -தரம் 9 வரை கல்வி கற்றிறுந்தால் போதும்.
பதிவுகள் முடிவுத்திகதி 2012/02/27
தொடர்புகளுக்கு -075238444
இப்பயிற்ச்சி நெறி HOTEL MANAGMENT இன் அடிப்படை என்பதும் குறிப்பிடதக்கது.
தகமை -தரம் 9 வரை கல்வி கற்றிறுந்தால் போதும்.
பதிவுகள் முடிவுத்திகதி 2012/02/27
தொடர்புகளுக்கு -075238444
இப்பயிற்ச்சி நெறி HOTEL MANAGMENT இன் அடிப்படை என்பதும் குறிப்பிடதக்கது.
Sunday, February 19, 2012
கடந்தவருடம் A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் கவனத்திற்கு..!
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீள்திருத்தத்திற்காக விண்ணப்பித்த மாணவர்கள் அம் முடிவுகளை பெறும்வரை காலதாமதம் செய்யாது பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மீள் திருத்தத்தின் மூலமாக மாணவர்களது பெறுபேறுகளில் மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில், அம் மாணவரது விருப்பத்தின் படி பாடநெறி தெரிவில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இம்மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலம் மேலும் நீடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு 40,000இற்கும் அதிகமான விண்ணப்ப படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவிக்கிறது.
விண்ணப்ப படிவங்களை நிரப்புவதில் தெளிவின்மை காணப்படுமாயின் மாணவர்கள் எந்தவொரு பல்கலைக்கழகத்துடனும் தொடர்பு கொண்டு தகவல்கலைப் பெறமுடியும் என அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மண்ணெண்ணெய் நிவாரண திட்டம் !
நாளை மறுதினம் நாடு முழுவதும் ஆரம்பம் -
மின்சாரக் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மண்ணெண்ணெய் நிவாரண திட்டம் நாளை மறுதினம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட உள்ளது.
மின்சாரம் இல்லாத அனைத்து வீடுகளுக்கும் மாதம் ஒன்றுக்கு 200 ரூபா பெறுமதியான மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானத்து உள்ளது.
ஆதற்கமைய நாட்டின் தோட்டப்புறங்கள் உள்ளிட்ட சுமார் ஐந்து இலட்சம் குடும்பங்களுக்கு தற்போது அந்த நிவாரண உரிமை கிடைத்துள்ளது.
25 மாவட்டங்களின் 330 பிரதேச செய லக பிரிவுகளையும் உள்ளடக்கி மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் இந்த வேலைத் திட்டம் பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஆரம்பிக் கப்படும் என சமுர்த்தி ஆணையாளர் நாயக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார். news.lk
வடக்கு கிழக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வேலைத்திட்டம்.
நவடக்கு - கிழக்கு மாகாண பிரதேசங்களுக்கிடையிலான கிராமிய சிறு நகர அபிவிருத்தி முனைப்பு எனும் தொனிப் பொருளின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்லரிச்சல் 1ம்ää2ம் வீதிக்கான கொங்ரீட் பாதையும் வடிகான் அமைப்பத் திட்டத்தம் அன்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்திட்டத்திற்காக ரூபா: 1.5மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ் வேலைத்திட்டம் பிரதேச சபை தவிசாளர்: ஏ.எம்.எம். நௌஷாத் அவர்களின் தலையில் இடம் பெற்றது. இதில் உதவிஉள்ளுராட்சி ஆனையாளர்: ஏ.ஜே.எம். இர்ஷாத் அவர்களும் கலந்து சிறப்பித்தார். kiyas jee
இத்திட்டத்திற்காக ரூபா: 1.5மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ் வேலைத்திட்டம் பிரதேச சபை தவிசாளர்: ஏ.எம்.எம். நௌஷாத் அவர்களின் தலையில் இடம் பெற்றது. இதில் உதவிஉள்ளுராட்சி ஆனையாளர்: ஏ.ஜே.எம். இர்ஷாத் அவர்களும் கலந்து சிறப்பித்தார். kiyas jee
Saturday, February 18, 2012
பால்மா விலை அதிகரிக்கும் வாய்ப்பு
பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் பால்மா விநியோக நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன.
இந்த அனுமதி வழங்கப்பட்டால் 400 கிராம் பால்மாவின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கர், நெஸ்பிறே, மெலிபன், டயமன்ட் முதலான வர்த்தக நாமங்கள் கொண்ட பால்மாவை விநியோகிக்கும் நிறுவனங்கள், இறக்குமதி, உற்பத்தி, விநியோக செலவுகளை காரணம் காட்டி, விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி கோரியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று தெரிவித்தது.
விலைகள் அதிகரிக்கப்படாவிட்டால் தமது தொழிற்துறை நெருக்கடியை எதிர்நோக்கும் எனத் தெரிவித்துள்ளதுடன் இது குறித்து வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் அவகாசத்தையும் இந்நிறுவனங்கள் கோரியுள்ளன்.
2012 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூபாவின் மதிப்பை 3 சதவீதத்தால் குறைத்தமையானது, பால்மா இறக்குமதியில் எதிர்மாறான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 120 ரூபாவாக வீழ்ச்சியடைந்தமை இந்நிலைமை மிக மோசமடைந்ததாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த அனுமதி வழங்கப்பட்டால் 400 கிராம் பால்மாவின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கர், நெஸ்பிறே, மெலிபன், டயமன்ட் முதலான வர்த்தக நாமங்கள் கொண்ட பால்மாவை விநியோகிக்கும் நிறுவனங்கள், இறக்குமதி, உற்பத்தி, விநியோக செலவுகளை காரணம் காட்டி, விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி கோரியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று தெரிவித்தது.
விலைகள் அதிகரிக்கப்படாவிட்டால் தமது தொழிற்துறை நெருக்கடியை எதிர்நோக்கும் எனத் தெரிவித்துள்ளதுடன் இது குறித்து வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் அவகாசத்தையும் இந்நிறுவனங்கள் கோரியுள்ளன்.
2012 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூபாவின் மதிப்பை 3 சதவீதத்தால் குறைத்தமையானது, பால்மா இறக்குமதியில் எதிர்மாறான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 120 ரூபாவாக வீழ்ச்சியடைந்தமை இந்நிலைமை மிக மோசமடைந்ததாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Wednesday, February 15, 2012
வேற்று கிரக மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்தாரா
வேற்று கிரகங்களில் வாழும் மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்த செய்தி தற்பொழுது வெளியாகி உள்ளது.உலகம் முழுவதும் நம்பப்படும் செய்தி வேற்று கிரகத்தில் மனிதர்கள் உள்ளனர் என்பதுதான். உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே வேற்று கிரக மனிதர்களோ அல்லது அவர்கள் பறந்து செல்லும் தட்டு தென்பட்டதாக செய்திகள் வரும். ஆனால் இன்று வரை அந்த செய்திகள் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில் பிபிசி 2 கரண்ட் அபையர்ஸ் இல் பங்கேற்று, அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினரும் பென்டகனின் ஆலேசாகருமான பணிபுரிந்த குட் பேசுகையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிவைட் டி ஐசனோவர் வேற்று கிரக மனிதர்களை மூன்று முறை சந்தித்தார் என்று கூறினார். எப்பிஐ அதிகாரிகள் டெலிபதி தகவல் பரிமாற்ற முறை மூலம் வேற்று கிரக மனிதர்களை தொடர்பு கொண்டதாகவும், அதனை ஏற்ற வேற்று கிரக மனிதர்கள் அமெரிக்காவின் அன்றைய அதிபர் டிவைட் டி ஐசனோவரை கடந்த 1954ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஹோல்மென் ராணுவ விமான தளத்தில் மூன்றுமுறை சந்தித்தனர் என கூறினார். இந்த சந்திப்பை கண்டதற்கான பல சாட்சிகள் உள்ளன எனவும் கூறியுள்ளார். வேற்று கிரக மனிதர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மனிதர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்த தகவல் இதுவரை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறினார். ஆனால் குட் இன் இந்த பேச்சை அமெரிக்க அதிகாரிகள் இதுவரை மறுக்கவில்லை. இதன்மூலம் வேற்று கிரக வாசிகள் உள்ளனர் என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.
srilankamirror.com
srilankamirror.com
மின்சாரப் பட்டியலுக்கு மேலதிக எரிபொருள் கட்டணம் அறவீடு
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து இன்று முதல் மின் பாவனையாளர்களுக்கான மின்சாரக் கட்டணத்தில் எரிபொருளுக்கான மேலதிக கட்டணம் விதிக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்படுகளுக்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி வீடுகளுக்கான மின் பாவனையில் 1 – 30 அலகுகளுக்கு 25 சதவீதமும் 31 – 60 அலகுகளுக்கு 35 சதவீதமும் 61க்கு மேற்பட்ட அலகுகளுக்கு 40 சதவீதமும் வீடுகளில் மேலதிக எரிபொருள் கட்டணமாக அறவிடப்படவுள்ளது. இதேவேளை, கைத்தொழில் துறைக்கு 15 சதவீத மேலதிக கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகளுக்கான ஆணைக்குழு கூறியுள்ளது tamilmirror.lk
Monday, February 13, 2012
மாபெரும் எழுச்சிச் சூறாவளி!...எதிர்பாருங்கள்!..
பொது மக்களிடையே ஈரான் சுதந்திரதின உரையாற்றிய அதிபர் அஹ்மத் நஜாத் கூறினார்.‘மார்க்சிஸமும், முதலாளித்துவமும் மனித வரலாற்றில் மிகவும் சர்வாதிகார தன்மைகொண்ட ஆட்சி முறைகளாகும். மார்க்ஸிசம் முடிந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடித்தளம் ஆட்டம் காணும் சப்தம் உலகம் முழுவதும் கேட்கிறது’ – எனவும் நஜாத் கூறினார்.
அணுசக்தி தொடர்பாக ஈரான் எடுத்த வேலைத்திட்டம் மேலும் ஒரு சில தினங்களில் முடிவடைய இருப்பதாக அறிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டம் சிறகு விரித்து பறக்கப்போவதை காணப்போகிறீர்கள் என்று கூறிய அவர் மேலை நாடுகளின் அச்சுறுத்தலுக்கு ஈரான் ஒருபோதும் அடி பணியாது மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் – அமெரிக்காவின் அச்சுறுத்தல் செல்லாக்காசு விவகாரம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் கூறும்போது பொருளாதார தடைகளை விதித்து, தாக்குதல் அச்சுறுத்தல்களை காட்டி மேலை நாடுகள் நாடகமாடுகின்றன. ஒரு பக்க நீதிக்கே எல்லோரும் தலை சாய்க்க வேண்டுமென கருதுகிறார்கள். ஆனால் அணு சக்தி விவகாரத்தில் ஈரானுக்கு ஓர் உரிமை இருக்கிறது. அதை மதித்து நடக்க வேண்டிய தார்மீக பொறுப்பு உலக நாடுகளுக்கு இருக்கிறது. அதைவிடுத்து பயமுறுத்தலில் குதிக்கக் கூடாது.
மேலை நாடுகள் உலகத்தை காலனித்துவ நாடுகளாக வைத்திருக்க விரும்புகின்றன. இஸ்ரேலிய மோசாட்டுடன் சேர்ந்து சுதந்திரமற்ற உலகத்தை உருவாக்க இவர்கள் ஆசைப்படுகிறார்கள். அது வெறும் பகல் கனவாகும் . மானிடப் படுகொலைகளை செய்யும் மேலை நாடுகளிடமிருந்து உலகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு நவீன ஈரானுக்கு இருக்கிறதென்று ஆயிரக்கணக்கான மக்களிடையே பேசும்போது அவர் தெரிவித்தார்.
qahtaninfo.blogspot.com
ஐந்து பிரி வினருக்கு எரிபொருள் மானியம் !
மக்கள் மீதான சுமையை குறைக்க விசேட நடவடிக்கை -
எரிபொருள் விலையேற்றத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்டாமல் இருக்க ஐந்து பிரிவினருக்கு எரிபொருள் மானியம் வழங்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தனியார் பஸ் உரிமையாளர்கள் பாடசாலை வேன் உரிமையாளர்கள் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கடற்றொழிலாளர்கள் மின்சார வசதி இல்லாத கிராமங்களில் மண்ணெண்ணையை பாவிக்கின்ற சமுர்த்தி உதவி பெறுபவர்கள் ஆகிய ஐந்து பிரி வினருக்கும் இந்த முறை மூலம் மானியம் வழங்கப்படவிருப்பதாக திறைசேரியின் பிரதி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல நேற்றுத் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு இன்று (13ம் திகதி) முதல் முற்கொடுப்பனவு பணம் வைப்பிலிடப்படும் எனவும் அவர் கூறினார்.
எரிபொருள் விலை மறுசீரமைப்பு காரணமாகப் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் விசேட எரிபொருள் மானியமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நீண்ட மற்றும் குறுகிய தூரபயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ் வண்டிகளின் விபரங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் நாம் கேட்டுள்ளோம். அவர்கள் அவ்விபரங்களை இன்று 13ம் திகதி எமக்கு வழங்குவதாகக் கூறியுள்ளனர். அந்த விபரம் கிடைக்கப்பெற்றதும் பயணிகள் பஸ் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் நடாத்திய பேச்சுவார்த்தையில் காணப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு ஏற்ப பஸ் உரிமை யாளர்களின் வங்கிக் கணக்கு முற்கொடுப்பனவு பணம் வைப்பிலிடப் படும் என அவர் மேலும் தெரிவித்தார். NWES.LK
சேலைகட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை
தெற்காசிய பெண்களின் கலாசார ஆடையாக கூறப்படும் சேலையை அணிவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவ இதழிலொன்றில், மும்பாயிலுள்ள கிராண்ட் மருத்துவ கல்லூரியின் வைத்தியர்கள் தாம் கண்டறிந்த புற்றுநோய் வகையொன்று குறித்து தெரிவித்துள்ளனர். அப்புற்றுநோயை 'சாறி புற்றுநோய்' என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
'நாங்கள் கடந்த இரண்டு வருடங்களில் 3 பெண்களுக்கு இடைப் புற்றுநோய் அல்லது சாறி புற்றுநோய்க்காக மருத்துவ சிகிச்சையளித்துள்ளோம்' என வைத்தியர் ஜி.டி பாக்ஷி தெரிவித்துள்ளார். இவர்களில் இரு பெண்கள் கடந்த இருவடங்களுக்கு முன்பாக மேற்படி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
'அப்பெண்களில் 3 ஆவது பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இவ்வாறான நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் கண்டறிந்துள்ளோம். இவர்கள் அனைவருமே 40 வயதிற்குட்பட்டவர்கள்.
இடுப்பில் ஒரே இடத்தில் சேலைக்கான பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டும்போது அது நாளாடைவில் எரிச்சிலை ஏற்படுத்தக் கூடும். இது நிலையான எரிச்சல் அல்லது நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதிகமான சேலை கட்டும் பெண்கள் நீண்டகால நோயாக மாறும்வரை அதை அவதானிப்பதில்லை' என்று வைத்தியர் பாக்ஷி தெரிவித்துள்ளார்.
டாக்டர் அசோக் டி பொரைஸா மற்றும் டாக்டர் முகுந்த் பீ. டயேட் ஆகியோருடன் இணைந்து அவர் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.
பெண்கள் இவ்விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இடை தழும்புகள் நோயாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதுவே இந்த 3 பெண்களுக்கும் சிகிச்சையை பெறுவதற்கு காரணமாக அமைந்தது' என அவர் தெரிவித்துள்ளார்.
சேலை கட்டும் பெண்கள் இடைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாத வண்ணம் உள்பாவாடையின் நாடாவை இறுக்கமில்லாமல் கட்டவேண்டும். அல்லது அதற்கு வழக்கமான கயிறுபோன்ற நாடாவுக்கு பதிலாக அகலமான பட்டியின் மூலம் அழுத்தத்தை குறைக்கலாம் என டாக்டர் பாக்ஷி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வகையான புற்றுநோய்களானது காற்சட்டைகள் மற்றும் இடைப்பட்டிகளினால் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவற்றின் மூலமான அழுத்தம் ஒரே இடத்தில் இல்லாமல் பரவலாகக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
'இந்நோயிக்கான சிகிச்சையானது அதனை கண்டறியும் பருவத்தில் தங்கியுள்ளது. இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து விட்டால் அதனை சீரமைப்பு அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால் இது நிணநீர் பகுதி முழுதும் பரந்துவிட்டால் எமக்கு அதனை வேகமாக பரவுவதற்கு முன் அகற்ற வேண்டிய தேவையேற்படும்' என அவர் கூறினார்.
சென்னையை தளமாகக் கொண்டு இயங்குபவரான தோல் நோய் மருத்துவர் வைத்தியர் மாயா வேதமூர்த்தி இது தொடர்பில் தெரிவிக்கையில், 'சேலை அணியும் பெண்களில் 3 வீதமானோர் தோல் எரிச்சலுக்காக சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வருகின்றனர். ஆனால் இந்த எரிச்சல் நோயாக மாறியதை நான் கண்டறிந்ததில்லை. அப்பெண்களுக்கு பாவாடை நாடாவை மென்மையாக கட்டவேண்டும். அல்லது ஒரு அகலமான பட்டியை அணிய வேண்டும் என நான் அறிவுறுத்துவேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவ இதழிலொன்றில், மும்பாயிலுள்ள கிராண்ட் மருத்துவ கல்லூரியின் வைத்தியர்கள் தாம் கண்டறிந்த புற்றுநோய் வகையொன்று குறித்து தெரிவித்துள்ளனர். அப்புற்றுநோயை 'சாறி புற்றுநோய்' என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
'நாங்கள் கடந்த இரண்டு வருடங்களில் 3 பெண்களுக்கு இடைப் புற்றுநோய் அல்லது சாறி புற்றுநோய்க்காக மருத்துவ சிகிச்சையளித்துள்ளோம்' என வைத்தியர் ஜி.டி பாக்ஷி தெரிவித்துள்ளார். இவர்களில் இரு பெண்கள் கடந்த இருவடங்களுக்கு முன்பாக மேற்படி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
'அப்பெண்களில் 3 ஆவது பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இவ்வாறான நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் கண்டறிந்துள்ளோம். இவர்கள் அனைவருமே 40 வயதிற்குட்பட்டவர்கள்.
இடுப்பில் ஒரே இடத்தில் சேலைக்கான பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டும்போது அது நாளாடைவில் எரிச்சிலை ஏற்படுத்தக் கூடும். இது நிலையான எரிச்சல் அல்லது நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதிகமான சேலை கட்டும் பெண்கள் நீண்டகால நோயாக மாறும்வரை அதை அவதானிப்பதில்லை' என்று வைத்தியர் பாக்ஷி தெரிவித்துள்ளார்.
டாக்டர் அசோக் டி பொரைஸா மற்றும் டாக்டர் முகுந்த் பீ. டயேட் ஆகியோருடன் இணைந்து அவர் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.
பெண்கள் இவ்விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இடை தழும்புகள் நோயாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதுவே இந்த 3 பெண்களுக்கும் சிகிச்சையை பெறுவதற்கு காரணமாக அமைந்தது' என அவர் தெரிவித்துள்ளார்.
சேலை கட்டும் பெண்கள் இடைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாத வண்ணம் உள்பாவாடையின் நாடாவை இறுக்கமில்லாமல் கட்டவேண்டும். அல்லது அதற்கு வழக்கமான கயிறுபோன்ற நாடாவுக்கு பதிலாக அகலமான பட்டியின் மூலம் அழுத்தத்தை குறைக்கலாம் என டாக்டர் பாக்ஷி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வகையான புற்றுநோய்களானது காற்சட்டைகள் மற்றும் இடைப்பட்டிகளினால் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவற்றின் மூலமான அழுத்தம் ஒரே இடத்தில் இல்லாமல் பரவலாகக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
'இந்நோயிக்கான சிகிச்சையானது அதனை கண்டறியும் பருவத்தில் தங்கியுள்ளது. இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து விட்டால் அதனை சீரமைப்பு அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால் இது நிணநீர் பகுதி முழுதும் பரந்துவிட்டால் எமக்கு அதனை வேகமாக பரவுவதற்கு முன் அகற்ற வேண்டிய தேவையேற்படும்' என அவர் கூறினார்.
சென்னையை தளமாகக் கொண்டு இயங்குபவரான தோல் நோய் மருத்துவர் வைத்தியர் மாயா வேதமூர்த்தி இது தொடர்பில் தெரிவிக்கையில், 'சேலை அணியும் பெண்களில் 3 வீதமானோர் தோல் எரிச்சலுக்காக சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வருகின்றனர். ஆனால் இந்த எரிச்சல் நோயாக மாறியதை நான் கண்டறிந்ததில்லை. அப்பெண்களுக்கு பாவாடை நாடாவை மென்மையாக கட்டவேண்டும். அல்லது ஒரு அகலமான பட்டியை அணிய வேண்டும் என நான் அறிவுறுத்துவேன்' எனத் தெரிவித்துள்ளார்.
Saturday, February 11, 2012
ஈரான் மீது பொருளாதாரத் தடை, இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு
எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைவிதித்துள்ளதன் காரணமாகவே இலங்கையில் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுல் படுத்தப்படவுள்ள எரிபொருட்களின் விலை, பெற்றோல் ஒரு லீற்றர் 12 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 31 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பெற்றோலியத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுல் படுத்தப்படவுள்ள எரிபொருட்களின் விலை, பெற்றோல் ஒரு லீற்றர் 12 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 31 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பெற்றோலியத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை 70 சதவீதமான மசகு எண்ணெய்யை ஈரானிலிருந்தே இறக்குமதி செய்கின்றது. இதற்கு ஈரான் அரசு மூன்று மாதகால கடன் நிவாரணத்தை இலங்கைக்கு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் மீளமைப்பு செய்யப்படவுள்ளபோதும் தனியார் பொதுப் போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறையினருக்கு விலை நிவாரணம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. meelparvaiFriday, February 10, 2012
சம்மாந்துறை தேசிய பாடசாலையின் மீலாத்துன் நபி விழா 2012

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் மீலாத்துன் நபி விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது இதற்கு பிரதம அதிதியாக கல்வி அமைச்சின் விழிமியக்கல்வி மற்றும் சமைய விவகார பிரிவின் கல்விப்பணிப்பாளர் A.M Ahamedஅவர்களும் சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர்M.K.M Mansoor அவர்களும் சிறப்புசொற்பெளிவாளராக சிறுவர் நன்னடத்தை அதிகாரி மௌலவி N.G.M Kamal அவர்களும் சிறப்பித்தனர் தலைமை அதிபர் அல்ஹாஐ;S.Aboobucker
Thursday, February 9, 2012
இயற்கையோடு இலக்கிய வட்ட மூன்றாவது அமர்வு
சம்மாந்துறை வாழும் கலை இலக்கிய வட்ட மூன்றாவது அமர்வு இயற்கை எழில் கொஞ்ச சம்மாந்துறை அமீர் அலி பொது நூலக வளாகத்தில் இடம்பெற்றது.
இதன் போது செய்தி ஊடகச் செயலாளராக கலைஞர் யு.று.ஆ.ஹிஷாம் நியமிக்கப்பட்டார் மேலும் சம்மாந்துறை எனும்; பெயர் வந்த வரலாறுகள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அது ஆவணமாக்கப்படல் வேண்டும் என்றும் வாழும் கலை இலக்கிய வட்டத்தால் முடிவெடுக்கப்பட்டது.
இதன் போது செய்தி ஊடகச் செயலாளராக கலைஞர் யு.று.ஆ.ஹிஷாம் நியமிக்கப்பட்டார் மேலும் சம்மாந்துறை எனும்; பெயர் வந்த வரலாறுகள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அது ஆவணமாக்கப்படல் வேண்டும் என்றும் வாழும் கலை இலக்கிய வட்டத்தால் முடிவெடுக்கப்பட்டது.
Wednesday, February 8, 2012
சம்மாந்துறை வலய சத்துணவுத்திட்ட ஆரம்ப வைபவம்
தலைமையில் நடைபெற்றபோது பிரமத அதிதியாகக்க கலந்துகொண்ட சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தேசியக்கொடி ஏற்றிவைத்து நிகழ்வில் ப ங்கேற்பதையும் பொதுமக்கள் மாணவர்கள் பங்கேற்பதையும் படங்களில் காணலாம் battinews
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
feature content slider
Content right
.
.
.


































