Friday, February 24, 2012

பிரதான பாதை திடீர் என வெடிப்புகுள்ளாகியது


சம்மாந்துறையில் பதுர் ஜும்மா பள்ளிவாசள் அறுகாமையில் பிரதான பாதை ஒன்று திடீர் என உடைவுக்குட்பட்டுள்ளது .                                          

Wednesday, February 22, 2012

அரசின் எரிபொருள் மாணியம் வழங்கும் தேசிய வேலைத்திட்டம்


அரசாங்கத்தின் எரிபொருள் மாணியம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்திலுள்ள வருமானம் குறைந்த மண்ணெண்னை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு  மாணிய அட்டை வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் கலந்து கொண்டார் கௌரவ அதிதிகளாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், ஜனாதிபதி கூட்டிணைப்பு உத்தியோகத்தர் எம்.எம்.ஏ.காதர்,முன்னாள் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.தம்பிக்கண்டு, சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்திஅத்தியோகத்தர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1700க்கு அதிகமான குடும்பங்களுக்கு மண்ணெண்னை எரிபொருள் மாணியம் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
.metromirror.lk (pohoto)

Tuesday, February 21, 2012

சம்மாந்துறை VTC யில் புதிய COURSE ஆரம்பம்

சம்மாந்துறை VTC  இல் BAKER எனும் COURSE ஆரம்பிக்கப்பட்ட்டுள்ளது தற்போது அத்ற்கான பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்(மட்டுப்படுத்த்ப்பட்ட மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்)
                                                                      
தகமை -தரம் 9 வரை கல்வி கற்றிறுந்தால் போதும்.

பதிவுகள் முடிவுத்திகதி  2012/02/27

தொடர்புகளுக்கு -075238444

இப்பயிற்ச்சி நெறி HOTEL MANAGMENT இன் அடிப்படை என்பதும் குறிப்பிடதக்கது.

Sunday, February 19, 2012

கடந்தவருடம் A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் கவனத்திற்கு..!


உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீள்திருத்தத்திற்காக விண்ணப்பித்த மாணவர்கள் அம் முடிவுகளை பெறும்வரை காலதாமதம் செய்யாது பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

மீள் திருத்தத்தின் மூலமாக மாணவர்களது பெறுபேறுகளில் மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில், அம் மாணவரது விருப்பத்தின் படி பாடநெறி தெரிவில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2012ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இம்மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. 

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலம் மேலும் நீடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு 40,000இற்கும் அதிகமான விண்ணப்ப படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவிக்கிறது. 

விண்ணப்ப படிவங்களை நிரப்புவதில் தெளிவின்மை காணப்படுமாயின் மாணவர்கள் எந்தவொரு பல்கலைக்கழகத்துடனும் தொடர்பு கொண்டு தகவல்கலைப் பெறமுடியும் என அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

மண்ணெண்ணெய் நிவாரண திட்டம் !

நாளை மறுதினம் நாடு முழுவதும் ஆரம்பம்  -

மின்சாரக் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மண்ணெண்ணெய் நிவாரண திட்டம் நாளை மறுதினம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

மின்சாரம் இல்லாத அனைத்து வீடுகளுக்கும் மாதம் ஒன்றுக்கு 200 ரூபா பெறுமதியான மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானத்து உள்ளது.

ஆதற்கமைய நாட்டின் தோட்டப்புறங்கள் உள்ளிட்ட சுமார் ஐந்து இலட்சம் குடும்பங்களுக்கு தற்போது அந்த நிவாரண உரிமை கிடைத்துள்ளது.

25 மாவட்டங்களின் 330 பிரதேச செய லக பிரிவுகளையும் உள்ளடக்கி மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் இந்த வேலைத் திட்டம் பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஆரம்பிக் கப்படும் என சமுர்த்தி ஆணையாளர் நாயக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார். news.lk

வடக்கு கிழக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வேலைத்திட்டம்.

நவடக்கு - கிழக்கு மாகாண பிரதேசங்களுக்கிடையிலான கிராமிய சிறு நகர அபிவிருத்தி முனைப்பு எனும் தொனிப் பொருளின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்லரிச்சல் 1ம்ää2ம் வீதிக்கான கொங்ரீட் பாதையும் வடிகான் அமைப்பத் திட்டத்தம் அன்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக ரூபா: 1.5மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ் வேலைத்திட்டம் பிரதேச சபை தவிசாளர்: ஏ.எம்.எம். நௌஷாத் அவர்களின் தலையில் இடம் பெற்றது. இதில் உதவிஉள்ளுராட்சி ஆனையாளர்: ஏ.ஜே.எம். இர்ஷாத் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
 kiyas jee

Saturday, February 18, 2012

பால்மா விலை அதிகரிக்கும் வாய்ப்பு

பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் பால்மா விநியோக நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன.
இந்த அனுமதி வழங்கப்பட்டால் 400 கிராம் பால்மாவின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கர், நெஸ்பிறே, மெலிபன், டயமன்ட் முதலான வர்த்தக நாமங்கள் கொண்ட பால்மாவை விநியோகிக்கும் நிறுவனங்கள், இறக்குமதி, உற்பத்தி, விநியோக செலவுகளை காரணம் காட்டி, விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி கோரியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று தெரிவித்தது.
விலைகள் அதிகரிக்கப்படாவிட்டால் தமது தொழிற்துறை நெருக்கடியை எதிர்நோக்கும் எனத் தெரிவித்துள்ளதுடன் இது குறித்து வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் அவகாசத்தையும் இந்நிறுவனங்கள் கோரியுள்ளன்.
2012 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூபாவின் மதிப்பை 3 சதவீதத்தால் குறைத்தமையானது, பால்மா இறக்குமதியில்  எதிர்மாறான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 120 ரூபாவாக வீழ்ச்சியடைந்தமை இந்நிலைமை மிக மோசமடைந்ததாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Wednesday, February 15, 2012

வேற்று கிரக மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்தாரா

வேற்று கிரகங்களில் வாழும் மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்த செய்தி தற்பொழுது வெளியாகி உள்ளது.உலகம் முழுவதும் நம்பப்படும் செய்தி வேற்று கிரகத்தில் மனிதர்கள் உள்ளனர் என்பதுதான். உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே வேற்று கிரக மனிதர்களோ அல்லது அவர்கள் பறந்து செல்லும் தட்டு தென்பட்டதாக செய்திகள் வரும். ஆனால் இன்று வரை அந்த செய்திகள் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில் பிபிசி 2 கரண்ட் அபையர்ஸ் இல் பங்கேற்று, அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினரும் பென்டகனின் ஆலேசாகருமான பணிபுரிந்த குட் பேசுகையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிவைட் டி ஐசனோவர் வேற்று கிரக மனிதர்களை மூன்று முறை சந்தித்தார் என்று கூறினார். எப்பிஐ அதிகாரிகள் டெலிபதி தகவல் பரிமாற்ற முறை மூலம் வேற்று கிரக மனிதர்களை தொடர்பு கொண்டதாகவும், அதனை ஏற்ற வேற்று கிரக மனிதர்கள் அமெரிக்காவின் அன்றைய அதிபர் டிவைட் டி ஐசனோவரை கடந்த 1954ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஹோல்மென் ராணுவ விமான தளத்தில் மூன்றுமுறை சந்தித்தனர் என கூறினார். இந்த சந்திப்பை கண்டதற்கான பல சாட்சிகள் உள்ளன எனவும் கூறியுள்ளார். வேற்று கிரக மனிதர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மனிதர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்த தகவல் இதுவரை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறினார். ஆனால் குட் இன் இந்த பேச்சை அமெரிக்க அதிகாரிகள் இதுவரை மறுக்கவில்லை. இதன்மூலம் வேற்று கிரக வாசிகள் உள்ளனர் என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.
srilankamirror.com

மின்சாரப் பட்டியலுக்கு மேலதிக எரிபொருள் கட்டணம் அறவீடு


எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து இன்று முதல் மின் பாவனையாளர்களுக்கான மின்சாரக் கட்டணத்தில் எரிபொருளுக்கான மேலதிக கட்டணம் விதிக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்படுகளுக்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி வீடுகளுக்கான மின் பாவனையில் 1 – 30 அலகுகளுக்கு 25 சதவீதமும் 31 – 60 அலகுகளுக்கு 35 சதவீதமும் 61க்கு மேற்பட்ட அலகுகளுக்கு 40 சதவீதமும் வீடுகளில் மேலதிக எரிபொருள் கட்டணமாக அறவிடப்படவுள்ளது.  இதேவேளை, கைத்தொழில் துறைக்கு 15 சதவீத மேலதிக கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகளுக்கான ஆணைக்குழு கூறியுள்ளது        tamilmirror.lk

Monday, February 13, 2012

மாபெரும் எழுச்சிச் சூறாவளி!...எதிர்பாருங்கள்!..

பொது மக்களிடையே ஈரான் சுதந்திரதின உரையாற்றிய  அதிபர் அஹ்மத் நஜாத் கூறினார்.‘மார்க்சிஸமும், முதலாளித்துவமும் மனித வரலாற்றில் மிகவும் சர்வாதிகார தன்மைகொண்ட ஆட்சி முறைகளாகும். மார்க்ஸிசம் முடிந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடித்தளம் ஆட்டம் காணும் சப்தம் உலகம் முழுவதும் கேட்கிறது’ – எனவும் நஜாத் கூறினார்.

அணுசக்தி தொடர்பாக ஈரான் எடுத்த வேலைத்திட்டம் மேலும் ஒரு சில தினங்களில் முடிவடைய இருப்பதாக அறிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டம் சிறகு விரித்து பறக்கப்போவதை காணப்போகிறீர்கள் என்று கூறிய அவர் மேலை நாடுகளின் அச்சுறுத்தலுக்கு ஈரான் ஒருபோதும் அடி பணியாது   மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் – அமெரிக்காவின் அச்சுறுத்தல் செல்லாக்காசு விவகாரம் என்பதையும் சுட்டிக்காட்டினார். 

மேலும் அவர் கூறும்போது பொருளாதார தடைகளை விதித்து, தாக்குதல் அச்சுறுத்தல்களை காட்டி மேலை நாடுகள் நாடகமாடுகின்றன. ஒரு பக்க நீதிக்கே எல்லோரும் தலை சாய்க்க வேண்டுமென கருதுகிறார்கள். ஆனால் அணு சக்தி விவகாரத்தில் ஈரானுக்கு ஓர் உரிமை இருக்கிறது. அதை மதித்து நடக்க வேண்டிய தார்மீக பொறுப்பு உலக நாடுகளுக்கு இருக்கிறது. அதைவிடுத்து பயமுறுத்தலில் குதிக்கக் கூடாது.

மேலை நாடுகள் உலகத்தை காலனித்துவ நாடுகளாக வைத்திருக்க விரும்புகின்றன. இஸ்ரேலிய மோசாட்டுடன் சேர்ந்து சுதந்திரமற்ற உலகத்தை உருவாக்க இவர்கள் ஆசைப்படுகிறார்கள். அது வெறும் பகல் கனவாகும் . மானிடப் படுகொலைகளை செய்யும் மேலை நாடுகளிடமிருந்து உலகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு நவீன ஈரானுக்கு இருக்கிறதென்று ஆயிரக்கணக்கான மக்களிடையே பேசும்போது அவர் தெரிவித்தார். 
 qahtaninfo.blogspot.com

ஐந்து பிரி வினருக்கு எரிபொருள் மானியம் !

மக்கள் மீதான சுமையை குறைக்க விசேட நடவடிக்கை  -
எரிபொருள் விலையேற்றத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்டாமல் இருக்க ஐந்து பிரிவினருக்கு எரிபொருள் மானியம் வழங்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தனியார் பஸ் உரிமையாளர்கள்  பாடசாலை  வேன் உரிமையாளர்கள்  முச்சக்கரவண்டி உரிமையாளர்கள்  கடற்றொழிலாளர்கள்  மின்சார வசதி இல்லாத கிராமங்களில் மண்ணெண்ணையை பாவிக்கின்ற சமுர்த்தி உதவி பெறுபவர்கள் ஆகிய ஐந்து பிரி வினருக்கும் இந்த முறை மூலம் மானியம் வழங்கப்படவிருப்பதாக திறைசேரியின் பிரதி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல நேற்றுத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு இன்று (13ம் திகதி) முதல் முற்கொடுப்பனவு பணம் வைப்பிலிடப்படும் எனவும் அவர் கூறினார்.

எரிபொருள் விலை மறுசீரமைப்பு காரணமாகப் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் விசேட எரிபொருள் மானியமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நீண்ட மற்றும் குறுகிய தூரபயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ் வண்டிகளின் விபரங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் நாம் கேட்டுள்ளோம். அவர்கள் அவ்விபரங்களை இன்று 13ம் திகதி எமக்கு வழங்குவதாகக் கூறியுள்ளனர். அந்த விபரம் கிடைக்கப்பெற்றதும் பயணிகள் பஸ் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் நடாத்திய பேச்சுவார்த்தையில் காணப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு ஏற்ப பஸ் உரிமை யாளர்களின் வங்கிக் கணக்கு முற்கொடுப்பனவு பணம் வைப்பிலிடப் படும் என அவர் மேலும் தெரிவித்தார்.  NWES.LK

சேலைகட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

தெற்காசிய பெண்களின் கலாசார ஆடையாக கூறப்படும் சேலையை அணிவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவ இதழிலொன்றில், மும்பாயிலுள்ள கிராண்ட் மருத்துவ கல்லூரியின் வைத்தியர்கள் தாம் கண்டறிந்த புற்றுநோய் வகையொன்று குறித்து தெரிவித்துள்ளனர். அப்புற்றுநோயை 'சாறி புற்றுநோய்' என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
'நாங்கள் கடந்த இரண்டு வருடங்களில் 3 பெண்களுக்கு இடைப் புற்றுநோய் அல்லது சாறி புற்றுநோய்க்காக மருத்துவ சிகிச்சையளித்துள்ளோம்' என வைத்தியர் ஜி.டி பாக்ஷி தெரிவித்துள்ளார்.  இவர்களில் இரு பெண்கள் கடந்த இருவடங்களுக்கு முன்பாக மேற்படி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
'அப்பெண்களில் 3 ஆவது பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இவ்வாறான நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் கண்டறிந்துள்ளோம். இவர்கள் அனைவருமே 40 வயதிற்குட்பட்டவர்கள்.
இடுப்பில் ஒரே இடத்தில் சேலைக்கான பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டும்போது அது நாளாடைவில் எரிச்சிலை ஏற்படுத்தக் கூடும்.  இது நிலையான எரிச்சல் அல்லது நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதிகமான சேலை கட்டும் பெண்கள் நீண்டகால நோயாக மாறும்வரை அதை அவதானிப்பதில்லை' என்று வைத்தியர் பாக்ஷி தெரிவித்துள்ளார்.
டாக்டர் அசோக் டி பொரைஸா மற்றும் டாக்டர் முகுந்த் பீ. டயேட் ஆகியோருடன் இணைந்து அவர் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.
பெண்கள் இவ்விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இடை தழும்புகள் நோயாக மாறும் வாய்ப்பு உள்ளது.  இதுவே இந்த 3 பெண்களுக்கும் சிகிச்சையை பெறுவதற்கு காரணமாக அமைந்தது' என அவர் தெரிவித்துள்ளார்.
சேலை கட்டும் பெண்கள் இடைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாத வண்ணம் உள்பாவாடையின் நாடாவை இறுக்கமில்லாமல் கட்டவேண்டும். அல்லது அதற்கு வழக்கமான கயிறுபோன்ற நாடாவுக்கு பதிலாக அகலமான பட்டியின் மூலம் அழுத்தத்தை குறைக்கலாம்  என டாக்டர் பாக்ஷி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வகையான புற்றுநோய்களானது காற்சட்டைகள் மற்றும் இடைப்பட்டிகளினால் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவற்றின் மூலமான அழுத்தம்  ஒரே இடத்தில் இல்லாமல் பரவலாகக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
'இந்நோயிக்கான சிகிச்சையானது அதனை கண்டறியும் பருவத்தில் தங்கியுள்ளது. இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து விட்டால் அதனை சீரமைப்பு அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால் இது நிணநீர் பகுதி முழுதும் பரந்துவிட்டால் எமக்கு அதனை வேகமாக பரவுவதற்கு முன் அகற்ற வேண்டிய தேவையேற்படும்' என அவர் கூறினார்.

சென்னையை தளமாகக் கொண்டு இயங்குபவரான தோல் நோய் மருத்துவர் வைத்தியர் மாயா வேதமூர்த்தி இது தொடர்பில் தெரிவிக்கையில், 'சேலை அணியும் பெண்களில் 3 வீதமானோர் தோல் எரிச்சலுக்காக சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வருகின்றனர். ஆனால் இந்த எரிச்சல் நோயாக மாறியதை நான் கண்டறிந்ததில்லை. அப்பெண்களுக்கு பாவாடை நாடாவை மென்மையாக கட்டவேண்டும்.  அல்லது ஒரு அகலமான பட்டியை அணிய வேண்டும் என நான் அறிவுறுத்துவேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Saturday, February 11, 2012

ஈரான் மீது பொருளாதாரத் தடை, இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு

எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைவிதித்துள்ளதன் காரணமாகவே இலங்கையில் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 
இதன்படிஇன்று நள்ளிரவு முதல் அமுல் படுத்தப்படவுள்ள எரிபொருட்களின் விலை, பெற்றோல் ஒரு லீற்றர் 12 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 31 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பெற்றோலியத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை 70 சதவீதமான மசகு எண்ணெய்யை ஈரானிலிருந்தே இறக்குமதி செய்கின்றது. இதற்கு ஈரான் அரசு மூன்று மாதகால கடன் நிவாரணத்தை இலங்கைக்கு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் மீளமைப்பு செய்யப்படவுள்ளபோதும் தனியார் பொதுப் போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறையினருக்கு விலை நிவாரணம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.    meelparvai

Friday, February 10, 2012

சம்மாந்துறை தேசிய பாடசாலையின் மீலாத்துன் நபி விழா 2012







சம்மாந்துறை தேசிய பாடசாலையில் மீலாத்துன் நபி விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது இதற்கு பிரதம அதிதியாக கல்வி அமைச்சின் விழிமியக்கல்வி மற்றும் சமைய விவகார பிரிவின் கல்விப்பணிப்பாளர் A.M Ahamedஅவர்களும் சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர்M.K.M Mansoor அவர்களும் சிறப்புசொற்பெளிவாளராக சிறுவர் நன்னடத்தை அதிகாரி மௌலவி  N.G.M Kamal அவர்களும் சிறப்பித்தனர் தலைமை அதிபர் அல்ஹாஐ;S.Aboobucker

Thursday, February 9, 2012

இயற்கையோடு இலக்கிய வட்ட மூன்றாவது அமர்வு

சம்மாந்துறை வாழும் கலை இலக்கிய வட்ட மூன்றாவது அமர்வு இயற்கை எழில் கொஞ்ச சம்மாந்துறை அமீர் அலி பொது நூலக வளாகத்தில் இடம்பெற்றது.
                 இதன் போது செய்தி ஊடகச் செயலாளராக கலைஞர் யு.று.ஆ.ஹிஷாம் நியமிக்கப்பட்டார் மேலும் சம்மாந்துறை எனும்; பெயர் வந்த வரலாறுகள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அது ஆவணமாக்கப்படல் வேண்டும் என்றும் வாழும் கலை இலக்கிய வட்டத்தால் முடிவெடுக்கப்பட்டது.

Wednesday, February 8, 2012

சம்மாந்துறை வலய சத்துணவுத்திட்ட ஆரம்ப வைபவம்

மஹிந்த சிந்தனையின் கீழ் கல்வியமைச்சு பாடசாலை மாணவர்களுக்கு தேசிய சத்துணவுத்திட்டத்தை திங்களன்று ஆரம்பித்துவைத்தது.;சம்மாந்துறை வலயத்திற்கான பிரதான வைபவம் சம்மாந்துறை மபாஸா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் எம். மன்சூர்

தலைமையில் நடைபெற்றபோது பிரமத அதிதியாகக்க கலந்துகொண்ட சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தேசியக்கொடி ஏற்றிவைத்து நிகழ்வில் ப ங்கேற்பதையும் பொதுமக்கள் மாணவர்கள் பங்கேற்பதையும் படங்களில் காணலாம்       battinews



Sunday, February 5, 2012

வாழும் கலை இலக்கிய வட்டத்தின் 64வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

இலங்கைத் திருநாட்டின் 64 வது சுதந்திர தின வாழ்த்துக்களை இலங்கையர் அனைவருக்கம் தெரிவிப்பதில் 
வாழும் கலை இலக்கிய வட்டம் பெருமகிழ்சிசியடைகிறது.
கடந்த 1948-02-04 ஆம் திகதி ஆங்கிலேயரிடமிருந்து எமது நாடு சுதந்திரம் பெற்றது.
பெறப்பட்ட சுதந்திரத்தின் மூலம் நாட்டினது அபிவிருத்திக்கும், இன நல்லுறவுக்கும், நாட்டின் வளங்களைப் பேணவும் வழி செய்வதுடன்
புரிந்துணர்வுடனான எதிர்கால திட்டமிடல்களை மேற்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு உதவவும் அனைவரும் உறுதி கொள்வோமாக.

Saturday, February 4, 2012

64வது சுதந்திர தின வாழ்த்துக்கள்


சம்மாந்துறையில் 64வது சுதந்திரதின கொண்டாட்டம்


இன்று இலங்கை ஜனநாயக சேஷலிச குடியரசின் 64வது சுதந்நிர தின வைபவம் மிகவூம் விமர்சையாக சம்மாந்துறையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது சம்மாந்துறையின் மத்திய மையம் என குறிப்பிடப்படும் ஹிஜ்ரா  சந்தியில் சந்தைக் கட்டிட தொகுதியின் மேல் மாடியில் இடம்பெற்றது.

மேலும் இந் நிகழ்வில் தேசியகொடி ஏற்றியபின், தேசிய கீதம் இசைக்கப்பட்டது அதனையடுத்து சமய அனுஷ்டானமும், அதிதிகள் உரையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் உட்பட இன்னும் பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வவுகளை YN Travers  நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

Thursday, February 2, 2012

CSS அமைப்பின் www.sammanthurai.tk இற்கு சிறப்பு சான்றிதழ்.

சென்ற வருடம் (2011) தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தினால் நடாத்தப்பட்ட மேம்பாட்டிற்கான கட்டுரைஇ கவிதை போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள்இ சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வூ 2012.01.27ம் திகதி சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் மிகவூம் விமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 2011.ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற நூல் கண்காட்சியில் பங்குபற்றிய நிறுவனங்கள்இ பாடசாலைகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதில் சிறந்த கலையகமாக இயங்கிய CSS அமைப்பின்  www.sammanthurai.tk  இற்கு சான்றிதலும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சம்மாந்துறை MECSO அமைப்பின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் MECSO  அமைப்பின் ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம் 29.01.2012 அன்று நடைபெற்றது.

கண்களில் வெண்படலம் உள்ளவர்களுக்கு இலவச சத்திரசிகிச்சை மற்றும் கண்வில்லைகள் பொருத்தக் கூடியவர்களை இனங்காண்பதற்கான முன்னோடி பிராந்திய நடவடிக்கையாகவே சம்மாந்துறையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

இதேவேளைஇ சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அபிவிருத்தி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினாலும்  இலங்கை ஜம்யஜயதுல் ஷபாப் அமைப்பின் ஏற்பாட்டிலும்  காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.  எதிர்வரும் பெப்ரவரி  முதலாம்  திகதி தொடக்கம் 05ஆம் திகதிவரை இவ் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

கனரக இயந்திரம் தடம்புரழ்வு


இன்று சம்மாந்துறை ஆண்டியடி  சந்தியில்  பாரிய கனரக இயந்திரம் (கௌன்டி) ஒன்று தடம்புரண்டு விழுந்துள்ளது. இதன் காரணமாக மின்சார ஒழுக்குகளில் சேதமும் ஏற்படடுள்ளது.

Monday, January 30, 2012

பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:37)

நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும் பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்இருக்கின்றதோ அத்தகயவன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)

1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளதுஎன்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி,
கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்)

4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனiவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.

5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கித் தற வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்.

7.தெரியாத எண்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளாச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள்.

ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர் அன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்பக்களோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்பததினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன் , பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை தராதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நன்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்னிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

11. தோழிகள் துனைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுடன் நீங்கள் வெளியே செலவதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெரிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் - இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முiறாயன ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்ஸியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.

15. வட்டிக்கு வாங்குவது. தவணை முறையில் வாங்குவது (பைனான்ஸ்போன்வற்றை தவிருங்கள்)

புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 1. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.





புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .

புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.

வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்

புல் மேய்ந்து கொண்டிருந்தது மாடு.
மரத்தில் இருந்த குருவிக்குஞ்சு தாயைக் கேட்டது:-
‘ஏனம்மா மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு இல்லை?”
தாய்க்குருவி சிரித்தது……

‘மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு தேவையில்லை’
என்றது தாய்.

தாய்க்குருவி சொன்னது:-
‘வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்’
-ஈழத்து கவிஞர் காசியானந்தனின் கதை இது-
(புலிகளின் ஆத்மார்த்த கவிஞரும் இவரே ! இவரை கிழக்கின் பிறந்த ஒரு கவிஞராக மட்டுமே பார்க்கிறேன்)

அன்மைய புலம்பெயர் ஈழத்தவர் போராடங்களிலும் இந்திய தமிழர் போராடங்களிலும் கையாளப்படும் ஒரு வாசகம் இன அழிப்பு அல்லது இனச் சுத்திகரிப்பு என்பதாகும் புலிகளின் ஆதரவாளர்கள் பெரிதும் இந்த வாசகத்தை கையாள்வதை பார்க்கும் போது காசி அண்ணாவின் வரிகள்தான் என் ஞாபகத்திற்கு வருகின்றன

“வியர்வை சிந்தாத உன்னாலும், மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்துவிட முடியாது”

எனவே எனது பேனாவை திறக்கின்றேன் கொஞ்சம் மையை சிந்த விட…..!

அன்மையில் தமிழ் உணர்வாளர் சீமான் தமிழ் நாட்டில் ஆற்றிய உரையில் தமிழ் நாட்டில் புலிகளுக்கு ஆதரவாக தாங்கள் நாடாத்தும் போராட்டங்களுக்கு இஸ்லாமியர்கள் ஆதரவு தரவில்லை என சாடியதோடு “முஸ்லீம்களை கொலை செய்தவன் கருணா அவனை தலைவர் விசாரைனைக்கு அழைத்தபோது சிங்களனோடுபோய் ஒட்டிக்கொண்டான்.! எங்கள் அண்ணனிடம்(பிரபாகரணிடம்) இம்ரான் பாண்டியன் என படையனியே உண்டுடா” என்று தனது கண்டுபிடிப்பை உணர்ச்சிவசப்படச் சொன்னார்

ஆகவே பாதிக்கப்பட்ட கிழக்கில் பிறந்த இஸ்லாமியர்கள் உலகங்கும் தூங்கிக் கொண்டிருக்கவில்லை என்பதை சீமான் புரிந்துகொள்ள வேண்டும்..!
புலிகளின் தங்களுக்குள் வாழ்ந்த சொந்த இனத்தின் மீதான இனச் சுத்திகரிப்பையும் அது முழுமையாக வெற்றியளித்ததா என்பதை ஆய்வதே எனது நோக்கம்.

அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழர் போராட்டம் மிகப் புனிதாமான தமிழ் இன விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் ஏகபோக உரிமத்தை தனதாக அறிவித்துக் கொண்ட விடுதலைப் புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.

அப்படி வடக்கு-கிழக்குவாழ் சகோதர மக்கள் மீது புலிகள் என்ன செய்தார்கள் என்பதையும் அதன் பாதிபுகள் என்ன என்பதையும் சுருக்கமாகத் தருகின்றேன்.

1987ம் ஆண்டு ஜுன் மாதம் இரண்டாம் திகதி புலிகளின் ரக் வண்டிகள் யாழ்பாணத் தெருக்களில் நிறுத்தப்பட்டு அங்கு வாழ்ந்துவந்த முஸ்லீம்களை உடனடியாக றஹ்மானியா கல்லூரியில் ஒன்று கூடுமாறு கேட்கப்பட்டனர்

ஒன்று கூடிய மூஸ்லீம்கள் அனைவரும் இரண்டு மணிநேர அவகாசத்தில் தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பூர்வீக பூமியை விட்டு வெளியேறுமாறு கேட்கப் பட்டதுடன் அவர்கள் உடுத்திருந்த உடுப்பை தவிர ஐம்பது ரூபாய் பணம் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கபட்டனர்.

முஸ்லிம் மக்களின் வீடுகள் ,வியாபார ஸ்தலங்கள் மற்றும் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் முஸ்லிம் பெண்கள் அணிந்திருந்த நகைகள் (கையில், காதில் மூக்கில், கழுத்தில் அணிந்திருந்த சிறு சிறு நகைகள் உட்பட) அனைத்துமே பயங்கரவாத விடுதலைப்புலிகளினால் கொள்ளையடிக்கப்பட்டன

இது குறித்து அண்மையில் யாழ்பாணத்தில் வாழ்ந்த யஹ்யா வாஸித் என்ற சகோதரர் இவ்வாறு எழுதியிருந்தார்.

“இன்றைய பல மாத வன்னிநகர்வையும், அன்றைய அந்த யாழ் வாழ் முஸ்லீம்களான எங்களது ஒரு நாள் நகர்வையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.

வாப்பாவின் சைக்கிளில் மார்ட்டின் றோட்டிலுள்ள எனது தமிழ் நண்பர்களுடன் சுற்றித் திரிந்து விட்டு வீட்டுக்கு வருகின்றேன். மொத்தமுஸ்லீம்களும் றஹ்மானியா கொலோஜ், ஐந்து சந்தி, பள்ளிவாசலடி போன்ற இடங்களில் குழுமியிருந்தனர் (இதை உணர்ச்சி வசப்பட்டு வை.கோபால்சாமியின் பாணியில் சொல்வதானால் அங்கே மொத்த சோனியும் குய்யோ முறையோ என அலறிக் கொண்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார்கள்) .

வாப்பா சொல்கின்றார் “மகன் நம்மள போகச் சொல்லி விட்டார்கள்”. யார் வாப்பா போகச் சொன்னது? ஏன் போகச் சொன்னார்கள்? எதற்காகப் போகச் சொன்னார்கள்? யாரும் யாரிடமும் இந்தக் கேள்வியை கேட்கவில்லை! கேட்க நேரமுமில்லை!! கேட்க நாதியுமில்லை!!

“எஸ் வீ ஓள் ஆர் பாஸ்ட்ரட்”. “திஸ் ஓடர் புறம் ஒன் மேன் ஆமி”………………………………………..”

அத்துடன் சாவகச்சேரி, கிளிநோச்சி, மன்னார் முஸ்லீம்கள் என அனைவரும் வட மாகாணத்தை விட்டு முற்றாக 1990 ம் ஆண்டு வெளியேற்றப் பட்டனர்.

இவ்வாறு மொத்தம் 75,000 முஸ்லீம்கள் எந்த நாதியுமற்றவர்களாக எதையும் செய்ய துப்பற்றவர்களாக அமைதியாக வெளியேறினார்கள்

புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றிவளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை


• 1985 ம் ஆண்டு மட்டகளப்பில் அமைந்திருந்த உன்னிச்சை என்ற கிராமத்தை சேர்ந்த முஸ்லீம் மக்கள் புலிகளுடன் சேர்ந்த செயற்பட்ட ஆயுத குழுக்களினால் வாழ்விடங்களை விட்டு விரட்டியடிக்கப் பட்டனர்.

1983 ம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கையின் சிங்கள காடையர்களால் தமிழ்பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அது எப்படி உலகெங்குமுள்ள தமிழர்களால் கருப்பு ஜுலையென நினைவு கூறப்படுகிறதோ அதேபோல் 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையின் கிழக்குவாழ் முஸ்லீம்களின் கருப்பு ஆகஸ்டாக நினைவுகூறப்படுகிறது.


• 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் நாள் கிழக்கின் அக்கரைப்பற்று கிராமத்தில் 40 முஸ்லீம் தொழிலாளிகள் பின்னால் கைகளைக் கட்டி பின்தலையில் புலிகளால் சுடப்பட்டார்கள்.

• இரண்டாம்,மூன்றாம் திகதிகளில் மதவாச்சி மஜீட்புரத்தில் 15 மூஸ்லீம்கள் புலிகளால் படுகொலைச் செய்யப்பட்டார்கள்.

• மூன்றாம் திகதி காத்தான்குடி மீரா ஜும்மாப் பள்ளிவாயலில் இரவுத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது பள்ளிவாயலுக்குள் புகுந்த புலிகள் துப்பாக்கிச்சுடு நடத்தி 103 பேரைக் சுட்டுக் கொன்றனர்

• இதில் 25 பேர் சிறுவர்கள் அத்துடன் அதே நேரம் மற்றோரு பள்ளிவாயலான ஹுசைனியா தைக்காவில் இரவுத்தொழுகையில் இருந்த மக்களை கைக் குண்டு வீசிக் கொன்றனர் இதில் 37 முஸ்லீம்கள் தொழுது கொண்டிருக்கும்போது கொல்லப்பட்டனர்.

காத்தான்குடி ஏறாவூர் இனச் சுத்திகரிப்பானது புலிகளின் தலைவரின் ஆலோசனையின் பெயரில் புலிகளின் உளவுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மானின் நெறிப்படுத்தலில் அப்போதைய புலிகளின் கிழக்குப் தளபதிகளான ரஞ்சித், நியூட்டன், கரிகாலன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.

கரிகாலன் என்பவர் கிழக்கின் களஞவாஞ்சிக்குடியை சேர்ந்தவர் என்பதும் இவர் முஸ்லீம்களால் நன்றாக முஸ்லீம்களுக்கு எதிரி என அப்போது அறியப்பட்டவருமாவார்.

இது தோடர்பான விபரங்கள் Philp Reesயின் Dining with the terrorists என்ற நூலின் ஒரு பந்தியின் கானப்படுகிறது.

இந்த தாக்குதல் தொடர்பாக புலிகளின் உறுப்பினர் சீதா என்பவர் கூறுகையில் “தான் பள்ளிவாயலுக்குள் புகுந்து முப்பத்தி மூன்று தொழுகையில் இருந்தவர்களை சுட்டுக் கொன்றதாக கூறியுள்ளார்.

இந்த சீதா மட்டகளப்பு கோட்டமுனையைச் சேர்ந்தவர் இவர் அதன் பின் இந்திய அமைதிப் படையினரால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டபோது ஐரோப்பா தப்பிச் சென்றுவிட்டார்.


• ஒன்பதாம் திகதி புலிகளால் சியம்பலாகஸ்கந்தயில் வசித்த முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்த புலிகள் புகுந்த போது இலங்கை இராணுவம் சுற்றி வளைக்கவே மக்களை விட்டுவிட்டு புலிகள் தப்பிச் சென்றனர்.

• பதினெட்டாம் திகதி கிழக்கில் ஏறாவுறில் அமைந்துள்ள சதாம் ஹூசைன் கிராமத்தில் நடுநிசியில் தூங்கிக் கொண்டிருந்த முஸ்லீம் மக்களை ஊருக்குள் புகுந்து வெட்டியும் சுட்டும் கொன்றனர்

• இதில் 31 சிறார்கள், 27 தாய்மார்கள் 115 ஆண்களும் அடங்குவர்.

• இச் சம்பவத்தின்போது ஒரு கற்பிணித் தாயின் வயிற்றைக் கிழித்து அதனுள்ளிருந்த குழந்தையை வெளியெடுத்து அதையும் வெட்டியதுடன் தாயின் வயிற்றில் அம்மிக் குழவியை வைத்திருந்தனர்.

புலிகளின் ஊது குழல்களே! சீமான் அவர்களே! இதுதான் சர்வதேச யுத்த விதிகளின் படி நீங்கள் நடத்திய விடுதலைப் போரா?

எந்த சர்வதேச யுத்த விதியில் ஆயுதம் எந்தாத அப்பாவி மக்களை கொல்வது அனுமதிக்கப் பட்டுள்ளதன நீங்கள் சொன்னால் நாங்கள் தெரிந்து கொள்வோம்!

• பதினாலாம் திகதி ஜூலை மாதம் கிழக்கில் உள்ள ஒன்தாச்சிமடம் என்ற இடத்தில் வைத்து புனித ஹஜ் கடமையை முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த ஹாஜிகள் 69 பேரை புலிகள் கடத்தி கொலைசெய்தனர்.

• பத்தொன்பதாம் திகதி ஜுலை மாதம் கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையில் இருந்து காத்தான்குடிநோக்கி வந்து கொண்டிருந்த வாகனங்களை அம்பலாந்துரை என்ற இடத்தில் வைத்து கடத்தி அதில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லீம் ஆண் பெண்கள் அனைவரையும் தேனீரில் சைனட்டைக் கலந்து குடிக்குமாறு கொடுத்து புலிகள் கொலை செய்தனர்

• இதில் அவ்வருடம் ஹஜ் கடமையை நிறவேற்றித் திரும்பிய ஹாஜிகள், பெண்கள், குழந்தைகள் அடக்கம்

• மற்றும் இதே காலப்பகுதியில் கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுமாறு வேண்டிக் கொண்டதும் அதற்கு மறுத்த மக்கள் மீது பல முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதும் அந்த மக்களுக்கான போக்குவரத்தை தடைசெய்ததன் மூலம் பல நாட்கள் பட்டினியில் வாடவிட்டதுடன் ஊர்களை விட்டு வெளியேசெல்ல விடாமல் தடுக்கப்பட்டார்கள்.

இன்னும் சொல்வதானால் ! 1990ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் கிழக்கிலுள்ள முஸ்லீம்கள் முழுவீச்சில் புலிகளால் தங்கள் வாழ்விடங்களை விட்ட வெளியேற வேண்டும் என்பதற்காக தாக்கப்பட்டார்கள் எனலாம்.

• கிழக்கிலுள்ள சம்மாத்துரையில் ஜாரியா மஸ்ஜிதில் உற்கார்ந்திருந்த மக்கள் மீது புலிகளால் துப்பாக்கிச் சுடு நடத்தப்பட்டது இதில் 05பேர் கொல்லப்பட்டு 03பேர் காயமந்தனர் இது 23ம் திகதி ஜுன் மாதம்
அதே மாதம் 29ம் திகதி ஓட்டமாவயில் ஆறு முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர் இதில் ஒட்டமாவடி ஹிஜார் மஸ்ஜிதின் தலைமை நம்பிக்கை பொறுப்பாளரும் அடக்கம்

இரண்டாம் திகதி ஜுலை மாதம் அக்கரைப்பற்றில் பதினான்கு இஸ்லாமிய விபசாயிகள் புலிகளால் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர்

12ம் திகதி ஆகஸட் மாதம் நெற்காணிகளில் வேலை செய்து கொண்டிருந்த முஸ்லீம் விபசாயிகள் நால்வர் சம்மாந்துரையில் வைத்து புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஆகஸ்ட் மாதம் இன்னும் எட்டு முஸ்லீம்கள் அக்கரைப்பற்று டவுனில் வைத்து புலிகளால் சுடப்பட்டனர்.

இவ்வாறு புலிகளின் இன சுத்திகரிப்பு பற்றி எழுதிக் கொண்டே போகலாம்….

• ஏப்ரல் மாதம் 1992ம் ஆண்டு பொலநறுவையில் அமைந்துள்ள எல்லைக் கிராமமான அழிஞ்சிப்பொத்தானையில் வசித்துவந்த 69 மூஸ்லீம் மக்களை கொலை செய்யப்பட்டனர்.

• 15ம் திகதி ஏப்ரல் மாதம் 1992ம் ஆண்டு பொலநறுவையின் எல்லைக் கிராமங்களான பள்ளியகோடல, அக்பர் புரம், அகமட் புரம், பங்குரான ஆகிய கிராமங்களில் வாழ்ந்த விவசாயிகளான மூஸ்லீம் மக்கள் 187 பேரைக் கொலைசெய்தனர் இதில் கற்பினித் தாய்மார்கள் உள்ளடக்கம்.

இந்த தாக்குதல் தொடர்பான செய்தியை அவுஸ்ரேலியாவில் வெளிவரும் முஸ்லீம் டைம்ஸ் ஆங்கில பத்திரிகை தனது முதல் பக்கத்தில் 30திகதி ஒக்டோபர் மாதம் 1992 ஆண்டு பிரசுரித்தது.

• மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லீம்களின் பூர்விகச் சொத்தான வயல் நிலங்கள் பறிக்கப்பட்டதும் கிழக்கு மாகாண முஸ்லீம்களின் பொருளாதாரம் திட்டமிடப்பட்டு முடக்கப்பட்டதும் வழைச்சேனை, மட்டக்களப்பு, காத்தான்குடி, கல்முனை மற்றும் பல ஊர்களில் உள்ள முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகள் உடைத்து கொள்ளையிடப்பட்டதுடன் தீவைத்து எரிக்கப்பட்டதும்.

இவ்வாறு பல வழிகளில் தன்னுடன் சகோதரர்களாக வாழும் சக மக்களை இனச் சுத்திகரிப்பு செய்ய முனைந்து வடக்கைபோல கிழக்கையும் கைப்பற்ற புலிகள் பிராயத்தனம் எடுத்தனர்

அது தோல்வியை தழுவிக் கொள்ளவே முஸ்லீம்களின் அரசியல் எழுச்சியை தடுக்க தங்களால் ஆன முழுப்பலத்தையும் பிரயோகித்தனர் ஆயுதப்போராட்டத்தில் நம்பிகையில்லாத இலங்கை முஸ்லீம்கள் மீதும் அவர்களின் அரசியல் தலைவர்கள் மீதும் பல தாக்குதல்களை மேற்கொண்டனர்

இதில் பல தலைவர்களை, சமூக சேவையாளர்களை, சிந்தனை வாதிகளை முஸ்லீம்கள் இழந்தனர் இதில் முஸ்லீம்களுக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்த்து சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபகரும் தலைவரும் இலங்கை முஸ்லீம்களின் தேசிய தலைவருமான மர்ஹும் ஏம்.எச்.எம். அஸ்ரப் அவர்ளின் இழப்பே.

அரசியல்துரை, கல்வித்துரை ரீதியாக முஸ்லீம்களின் வளர்சியையும் அகிம்சை வழியில் அரசியல் ரீதியாக போராடி தங்களது உரிமைகளை கௌரவமாக பெற்று முஸ்லீம்கள் முன்னேறுவதை புலிகளின் தலைமைகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை

தங்களின் ஏக பிரதிநிதி வாதம் சக தமிழ் பேசும் மக்களாள் ஏற்றுக் கொள்ளப் படாததையும் புலிகளின் தந்தோராபாய நகர்வுகள் பயமுறுத்தல்கள் தொடர் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களுக்கு முஸ்லீம்கள் அடிபணிய மறுத்தது புலித் தலைமை பீடத்தால் பொறுத்துக் கொள்ள முடியாமல் போனது

எனவே முஸ்லீம் சமூகத்தின் தலைமையை ஒழிக்க முடிவெடுத்து காய்கள் புலிகளின் தலைமையால் நகர்தப்பட்டு இலங்கை முஸ்லீம்களின் தன்னிகரில்லா தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக அம்பாறை மாவட்டத்திற்கு ஹெலிக்கப்டர் மூலம் செல்லும் போது அவருடம் பத்திரிகையாளர் என்ற பெயரில் சென்ற தற்கொலையாளி மூலம் நடு வானில் குண்டை வெடிக்கவைத்து முஸ்லீம்களின் தலைமை அழிக்கப்பட்டது.

இதன் மூலம் கிழக்கில் மிகப் பலமான முஸ்லீம் சமூகத்தை அடக்கி அடிபணிய வைக்க வேண்டும் என்பதுடன் உடற் பிறப்புக்களாக வாழும் தமிழ், முஸ்லிம் உறவையும் சீர் குலைத்து ஏக பிரதிநிதியாக மாற பிரபாகரன் பகல் கனவு கண்டார்.

பாரத பிரதமரின் கொலையை புலிகள் நேரடியாக ஏற்காதது போலவே இதையும் அவர்கள் ஏற்கவில்லை என்றாலும் அந்த தற்கொலையாளியை மாவீர்ர் அந்தஸ்து வழங்கி பின்னாலில் கௌரவித்ததன் மூலம் அதை புலிகள் ஏற்றுக் கொண்டனர்.

இது போல புலிகள் சக இன மக்கள் மீதும் தங்கள் இனத்தில் புலிகளை ஏற்றுக் கொள்ளாத மக்களுக்கும் இழைத்த கொடுமைகள் எழுதில் வடிக்க முடியாதவை விரிவு கருதி அவற்றை நான் தொட வில்லை.

இன்னும் தாயகத்தில் வட கிழக்கு மண்னில் பூர்விகமாக வாழ்ந்த சிங்கள மக்கள் இப்போது எங்கே? அவர்களை புலிகள் ஏற்றுக் கொண்டு சமமாக வாழ சந்தர்பம் அளித்தார்களா? அல்லது இன சுத்திகரிப்பு செய்தார்களா?

1990ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள மக்கள் வாழ்ந்த கிராமங்களான தாந்தாமலை,வெளிஓயா, பதவியா ஆகிய இடங்களில் வாழ்ந்த சிங்கள் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் மிகுதி மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு விரட்டப் பட்டனர்.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் நாள் கோனகல என்ற இடத்தில் வாழ்ந்த 52 சிங்கள மக்கள் புலிகளால் கொல்லப்பட்டனர் இதில் அதிகமாக மிகச் சிறிய வயதான குழந்தைகளும் அடங்குவர்.

கிழக்கில் வாழ்ந்த சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களில் மிகவும் மோசமானது இரண்டாம் திகதி ஜுன் மாதம் 1987ல் அம்பாறை மாவட்டத்திலுள்ள அறுந்தலாவ எனும் இடத்தில் புத்த பிக்குகளாக பயின்று கொண்டிருந்த 7 முதல் 13 வயதையொத்த புத்த துறவி சிறார்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலாகும் இதில் 33 புத்த துறவி சிறார்கள் மற்றும் அவர்களின் குருவும் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்டனர்.

1982 ஆண்டு ஆயுத போராட்டத்தை ஆரம்பித்த புலிகள் 1990 ஆண்டு காலப்பகுதியை சிறுபான்மையில் மற்தொரு தனிப்பட்ட கலாச்சார விழுமியங்களை கொண்ட இனமான முஸ்லீம் மக்களை அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் தமிழ் ஈழ மண்ணிலிருந்து இன அழிப்புச்செய்து ஒழித்துவிடவே பெரும் தாக்குதல்களைத் தொடுத்தனர்

அத்துடன் ஈழத்தில் பரம்பரையாக வாழ்ந்துவந்த சிங்கள பாமர மக்களையும் இனச் சுத்திகரிப்பு செய்தனர் இதில் சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள் ஒரளவு வெற்றியளித்தாலும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் படுதோல்வியை அளித்தது மட்டுமல்லாது புலிகளை சர்வதேசப் பயங்கரவாதிகள் என்ற புனிதமான இடத்துக்கு கொண்டு சென்றது என்பதே உண்மை.

இதற்குக் காரணம் முஸ்லீம்கள் அரசியல் ரீதியான போராட்ங்களை தங்களுக்குள் முன்னெடுத்து தங்கள் நிலையை உலக அரங்கிக்கு அமைதியாய் கொண்டு சென்றதாகும்.

இவற்றையெல்லாம் புலிகளின் ஊதுகுழல்களால் மறுக்க முடியுமா?

அல்லது சர்வதேசத்திடம் பதியப் பட்டுள்ள இச் சம்பவங்களை அழிக்கத்தான் முடியுமா?

சீமான் அண்ணா? இவைகள் புலிகளின் தலைவரான உங்களின் அண்ணனால் செய்யப்படவில்லை என்றால்!! ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் உங்கள் அண்ணன் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..

சீமான் மற்றும் புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் சகோதரர்களே…!
இனச் சுத்திகரிப்பு என் பொருள்படும் சொல்லை நீங்கள் புலிகளுக்கு ஆதரவாக பிரயோகிக்க உங்களுக்கோ அல்லது புலிகளுக்கோ தகுதியிருக்கிறதா?

இதுரை காலமும் புலிகள் தங்களுடன் வாழ்ந்த மக்கள் மீது செய்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் யாருக்கும் தெரியாதா?
ஆகவே! புலிகளுக்கு ஆதரவாக் கோசம் போடாமல் யுத்ததிற்குள் சிக்குண்டு தவிக்கும் எம் மக்களுக்காக் கோசம் போடுங்கள் நாங்களும் உங்களுடன் இருப்போம்!

புலி ஆதரவுக் கோசங்களை யாரும் கணக்கெடுக்கப் போவதில்லை!
சீக்கியர்களின் பொற்கோயில் மீதான இந்திய இரானுவத்தின் தாக்குதலை சீக்கியர்கள் எவ்வாறு மன்னிக்க வில்லையோ .!

ஈழத்தில் இந்தியப் படையினரின் தாக்குதலை நீங்கள் எவ்வாறு மன்னிக்க வில்லையோ…!

இந்தியா! பிரதமர் ராஜிவ் காந்தி மீதான புலிகளின் தாக்குதலை எவ்வாறு மன்னிக்கவில்லையோ..!

அதே போன்றே……..! உலக வாழ் முஸ்லீம்களும் புலிகள் இலங்கை வாழ் முஸ்லீம்கள் மீது மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பு தாக்குதல்களை மன்னிக்க மாட்டார்கள்…. என்பதுடன்

புலிகளை எந்தக் காலத்திலும் இலங்கை வாழ் முஸ்லீம்கள் தங்களது ஒரு பிரதிநிதியாக்க் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உலகத்திற்கு தெரியும்.

மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டுக் கோடரியும் கயிறும் விறகு வெட்டிக்குப்பக்கத்தில் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்தன.
காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களைத் தன் அலகால் கொத்திவிட்டுப் பறந்து போனது.

இந்த மரங்கொத்தியைப் பார்த்தாயா? நான்கு மரங்களை மாறி மாறித் தன் அலகால் வெட்டியது – ஒரு மரத்தையாவது அதனால் உருப்படியாக வீழ்த்த முடிந்ததா?” என்று கயிற்றைப் பார்த்துக் கேட்டது கோடரி.

‘மரங்கொத்தியால் அது முடியாது” என்றது கயிறு.

‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

கயிறு சொன்னது:-
‘நாலு மரத்தையும் வெட்டுகிறவன் ஒரு மரத்தையும் விழுத்துவதில்லை”


SOURCE: kizhakkan

தேசத்துக்கு மகுடம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள தந்திரிமலை  ஓயாமடு பிரதேசத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள இவ்வருடத்துக்கான  ‘தேசத்திற்கு மகுடம்’ தேசிய அபிவிருத்தி கண்காட்சியை   உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

600 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெறவுள்ள இக் கண்காட்சியில் அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புக்களுடன் ஆயிரத்திற்கும் அதிகமான காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெப்ரவரி மாதம் 4ம் திகதி மாலை ஜனாதிபதி அவர்களினால் இக்கண்காட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன்  பெப்ரவரி மாதம் 5ம் திகதி முதல் 10 ம் திகதி வரையிலான காலப்பகுதியில் காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை பொது மக்களின் பார்வைக்காக கண்காட்சி கூடங்கள் திறந்திருக்கும்.

இலங்கையின் பாரிய கண்காட்சியான தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு அநுராதபுரம் மாவட்டத்தில் 25 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பாடசாலை மாணவர்களும்இ ஆசிரியர்களும் கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம். தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி சீட்டை பெற்று ஏனையோர் கண்காட்சியைப் பார்வையிடலாம்.  WWW.NEWS.LK

Saturday, January 28, 2012

வாசிப்பு மேம்பாட்டு விழா - 2011


சென்ற வருடம்; வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சம்மாந்துறை அமீர் அலி நூலகத்தினால் நடாத்தப்பட்ட வாசிப்பு மேம்பாட்டிற்கான கட்டுரை கவிதை போட்டிகளில் பங்குபற்றி வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 2012.01.27ம் திகதி சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் 2011 ஒக்டோபர் மாதம் இடம் பெற்ற புத்தகக் கண்காட்சியில் பங்குபற்றிய நிறுவனங்கள் ற்றும் பாடசாலைகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வுக்கு அதிதிகளாக

உதவி உள்ளூராட்சி ஆணையாளர்- ஏ.ஜே.எம்.இர்ஷாட்
பிரதேச செயலாளர் - ஏ.மன்சூர்
பிரதேச சபைத் தவிசாளர் - ஏ.எம்.எம்.நௌஷாத்

பிரதேச சபை உதவி தவிசாளர் - ஏ.கே.கலீலுர் ரஹ்மான் ஆகிய பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Thursday, January 26, 2012

இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகாரிக்க முடியாது என சவூதி அரசு கை விரிப்பு!

இலங்கைக்கான ஹஜ் யாத்திரிகர்களின் கோட்டாவை அதிகாரிக்குமாறு சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி சவூதி அரேபியாவின் ஹஜ் விவகார அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.


தற்போது மினாவிலுள்ள வசதிகளை கருத்தில் கொள்ளும்போது இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என சவூதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜித்தாவிலுள்ள ஹஜ் அமைச்சர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை சந்தித்தபோதே அமைச்சர பௌசி இந்த வேண்டுகோளை விடுத்தார். சென்ற வருடம் ஹஜ் யாத்திரிகர்களின் கோட்டா 2800 பேராக இருந்தது. இது இறுதி நேரத்தில் 3800 ஆக அதிகரிக்கப்பட்டபோது இந்த அவசர நிலைமையை பயன்படுத்தி ஹஜ் யாத்திரை ஒழுங்கு செய்யும் முகவர்கள் கூடிய இலாபமீட்டினர் என அமைச்சர் பௌஸி இதன்போது விளக்கினார்.

எனினும் இம்முறை ஒரே தடவையில் கோட்டா வழங்கப்படுமென சவூதி அமைச்சர் கூறியதாக அமைச்சர் பௌஸி தெரிவித்தார். 2010 இல் வழங்கப்பட்ட கோட்டாவான 5800 பேரை இம்முறையும் வழங்கும்படி கேட்டு கொண்டதாக அமைச்சர் பௌஸி மேலும் கூறினார். இந்த சந்திப்பில் சவூதி அரேபியாவுக்கான இலங்கை கௌன்ஸல் டாக்டர் ஏ.உதுமாலெப்பையும் கலந்து கொண்டார். METROMIROR.COM

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்தம்


அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனமும் அனைத்து பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களின் சம்மேளனமும் இனைந்து கூட்டுக் குழு இன்று 26.01.2012 ஆம் திகதி வியாழக்கிழமை முழு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்ற தீர்மானத்துக்கமைவாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இவ் அடையாள வேலை நி று த்ததில் ஈடுபட்டுள்ளது இதன் காரணமாக அலுவலக வேலைகள் அனைத்தும் இஸ்தம்மிதம் அடைந்து காணப்படுகின்றது.

இவ்அடையாள வேலை நிறுத்தமானது சகல பல்கலைக்கழகங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது

Tuesday, January 24, 2012

சம்மாந்துறையில் சிறுவர் பூங்கா ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்பம்


சம்மாந்துறை பொது நூலக வளாகம், மற்றும் அதனை அண்மித்த வெளியில் (நெல்லுப்பிடிச் சந்தி) சிறுவர் பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இதனுடைய ஆரம்ப கட்டமாக ஆசனங்கள் அமைக்கும் வேலைத்திட்டம் தற்போது பூர்த்தியாகியுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.நௌசாத்  அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Monday, January 23, 2012

சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவன் உம்றா பயணம்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் அப்துல் றஹீம் றஷாத் அஹமட் எதிர்வரும் 2012.01.24 அன்று உம்றா கிரிகையை நிறைவேற்ற மக்கா செல்கிறார். இவர் சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலய அதிபர் எம்.ஏ.அப்துல் றஹீம்இ ஆசிரியை எம்.ஏ.றாஷிதா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வர் ஆவார்.

இவர் 2010ம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 9யு பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளார். இதனை கௌரவிக்கும் முகமாக 2011.12.11ல் கொழும்பு ஸாஹிறா கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில்  ஆநுPளு அமைப்பினரால் நடாத்தப்பட்ட பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு சான்றிதழ்கள்இ பரிசில்கள்இ பாராட்டுக்களை பெற்றதோடு புனித உம்றா கிரிகையை நிறைவேற்றுவதற்கான ஏழு நாள் இலவச பிரயாண டிக்கட்டையும் பெற்றுக்கொண்டார்.

மேலும்இ இலங்கையில் இருந்து இவ்விலவச உம்றா பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பினை ஆறு மாணவர்கள் பெற்றதோடு எமது பிரதேசத்தில் இவருக்கு மட்டுமே இவ்வாய்ப்பு கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
 

Saturday, January 21, 2012

வடக்கு கிழக்கு காணி பதிவு உத்தரவு வாபஸ்!

வடக்கு கிழக்கு காணிகளை பதிவு செய்யும் உத்தரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் தங்களை மீள் பதிவுசெய்து கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதிக்கு முன்னதாக இந்த பதிவுநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்யுமாறு தமி;ழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்றில்மனுவொன்றை தக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணைகளில் கலந்து கொண்ட சட்ட மா அதிபர்திணைக்களம்- குறித்த உத்தரவு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் என நீதிமன்றில்அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு காணி உரிமையாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம்சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேன்முறையீட்டு மனு நீதவான் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் நீதவான் தீபாலிவிஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு இந்த சுற்று நிருபத்தை வாபஸ்பெற்றுக் கொள்ள இணங்கியுள்ளது என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில்அறிவித்துள்ளது.(எம்.ரி.-977)

தாமரைக் கோபுரத்துக்கு கடந்த வெள்ளிக் கிழமை அன்று அடிக்கல் நடப்பட்டது!


கிழக்காசியாவின் மிக உயர்ந்த கோபுரத்துக்கான அடிக்கல் இன்று காலை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நடப்பட்டது.

கொழும்பு பேரை வாவியின் அருகில் டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள 3.06 ஏக்கர் நிலத்தில் இந்த பாரிய கோபுரம் அமைக்கப்படவூள்ளது.

இலங்கை தொலைத் தொடர்பாடல் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.


“தாமரைக் கோபுரம”; எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பல நோக்குக் கோபுரம் அமைக்கப்பட்டதும் இதன் மூலம் 50 ஒலிபரப்புச் சேவைகளுக்கும் 50 தொலைக் காட்சிச் சேவைகளுக்கும் 20 தொலைத் தொடர்பாடல் சேவைகளுக்குமான வசதிகளைக் கொண்டிருக்கும்.
அத்துடன் உல்லாசமாக பொழுதைப் போக்கக்கூடிய இடமாகப் பயன்படுத்தக்கூடிய அடிப்படை வசதிகளும் இங்கு அமைக்கப்படவூள்ளன.
இந்த தாமரைக் கோபுரத்துக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ இங்கு உரையாற்றுகையில்:
ஜனாதிபதியினதும் இந்த நாட்டு மக்களினதும் ஒரு பாரிய கனவூ இன்று நனவாகின்றது. இக்கோபுரத்தை கம்பஹ மாவட்டத்தில் அமைக்கவே முதலில் திட்டமிடப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரிலேயே கொழும்பில் இடம் ஒதுக்கப்பட்டது.
உலகின் ஏனைய நாடுகள் அடைந்துள்ள அபிவிருத்திக்கு இணையாக எமது நாடடையூம் முன்னேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே ஜனாதிபதி  இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்றும் கூறினார்.(எம்.ரி.-977)

Thursday, January 19, 2012

"ஓடுற மாட்டில இறைச்சி எடுத்து தின்பவர்கள்"

ஓடுற மாட்டிறைச்சியின் சுவை!!!!!
சம்மாந்துறை அழகிய கிராமம் மக்களில் மடடுமல்ல இறையளித்த இயற்கையின் கொடைகளிலுமே.

அன்றைய மட்டக்களப்பு (இன்றைய சம்மாந்துறை) அராபிய ,இந்திய வெளிநாட்டு வர்த்தகர்களின் பண்டமாற்று சந்தையாகவும், மத்திய நாட்டு மக்களிற்கான வியாபாரப் பாதையாகவும், தவளம் முறை வியாபாரம் நடைபெற்ற புராதன செரண்டீப் இனது முக்கிய தலமாகவும் காணப்பட்டது.
இங்குள்ள மக்கள் வீரத்திலும் விவேகத்திலும் விஞ்சியவர்களே, இவர்களின் உணவுப்பழக்க வழக்கமும் விருந்தோம்பலும் சிறப்பானதே.........
.
சம்மாந்துறை கல்வி, விவசாயத்திலும் மடடுமல்ல கால்நடை வியாபாரத்திற்கும் பெயர்போன இடமாகும்
அந்த வகையில் இங்குள்ள பெரும் மாட்டுப் பண்ணையாளர்களிடம் இறைச்சி வியாபாரிகளும், புனித காலங்களில் தானம் வழங்குபவர்களும் தேவையான மாடுகளை வாங்கினர்.
அதன்போது காலையிலுள்ள (பெருமளவான மாடுகள் தங்கவைக்கப்படும் எல்லைப்படுத்தப்பட் பகுதி அல்லது மாடுகளின் கூட்டம்) மாடுகளிற்கு மத்தியில் மாட்டுக்காரர் நின்று கொண்டு கயிறொன்றை சுழற்றுவார். அப்போது உற்சாகமான ,ஆரோக்கியமான மாடுகள் காலையிலிந்து வெளிறயேறுவதற்காக சுற்றி ஓடும்.
அதன்போது அவற்றில் மிக சிறந்த மாட்டை வாங்கிக் கொள்வார்கள்.அவற்றையே உணவுக்காகவும், தானம் வழங்கவும் பயன்னடுத்தினர்.

இதனாலேயே இவர்கள் "ஓடுற மாட்டில இறைச்சி எடுத்து தின்பவர்கள்" என அழைக்கப்பட்டனர்.
காலப்போக்கில் இது அவர்களை இகழச்சிக்காக அழைக்கும் குறிசொல் எனப்புரியப்பட்டது.
இவர்கள் மக்களை இகழ்வதாக எண்ணிப் புகழ்வது முரண்நகையே....



தகவல்:- மூத்த கால்நடை கிராம வைத்தியர்

சம்மாந்துறை வரலாறு

சம்மாந்துறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்கு என அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம். இது முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியாகும். சம்மாந்துறை இப்பிரதேசத்தின் முக்கிய நகரமாகக் கணிக்கப்படுகின்றது. புவியியல் ரீதியிலும் கேந்திர முக்கியத்துவமான இடத்திலும் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வரலாறு

கண்டி இராச்சியத்தின் கிழக்கின் முக்கிய துறைமுகமாகவும் சம்மாந்துறை விளங்கிய வரலாற்றைக் காண்கின்றோம். சம்மாந்துறையிலிருந்து ஐந்து பாதைகள் மலைநாட்டை நோக்கிச் சென்றுள்ளதாக “மட்டக்களப்புத் தமிழகம்” எனும் நூல் குறிப்பிடுகின்றது. இஸ்லாத்துக்;கு முந்திய காலங்களிலும் பாவா ஆதம் மலையைத் தரிசிப்பதற்கும், வெளிநாட்டார் சம்மாந்துறைத் துறைமுகத்தில் கப்பல்களைக் கட்டிவிட்டுச் சென்றுள்ள தகவலை “காத்தான்குடி வரலாறு” குறிப்பிடுவதையும் அறிகின்றோம்.
டிஒய்லி – Dioyly என்ற பிரித்தானியத் தூதுவர் “போர்த்துக்கீசரின் காலத்தில் சம்மாந்துறை கண்டி இராச்சியத்தின் பிரதான துறைமுகமாக அமைந்திருந்தது” என தனது தினக் குறிப்பில் பதிந்துள்ளார்.
1676இல் ஒல்லாந்து அதிபதியாகக் கடமைபுரிந்த ஜேக்கப் பெர்னாந்து “மட்டக்களப்பு என்ற சம்மாந்துறையையும் கண்டியையும் ஐந்து காட்டுப்பாதைகள் இணைத்தன” என்று கூறிய ஆதாரமும் கிடைக்கின்றன. ஒல்லாந்து தளபதியான ஸ்பில்பேர்க்கன் என்பவர் இந்தியாவில் “மட்டக்களப்பு ஆறு எங்கே உள்ளது” என விசாரித்தறிந்து சம்மாந்துறையை வந்தடைந்த குறிப்பேடுகளும் உண்டு. சம்மாந்துறை முஸ்லிம்களின் உதவியோடு கண்டி அரசன் விமலதர்மசூரியனை சந்திக்கச் சென்றுள்ளான்.
இவ்வாறு வரலாற்று ஆதாரங்கள் சம்மாந்துறைத் துறைமுகத்தையும், வர்த்தக நடவடிக்கைகளையும், கண்டி அரசனுக்குள்ள தொடர்புகளையும் விளக்குவதை அறியலாம். சம்மாந்துறை கடல் சார்ந்த துறைமுகமா? என்ற கேள்வி எழலாம். மட்டக்களப்பு வாவியூடாக அதன் தென்பகுதியின் கரைதான் சம்மாந்துறை. பரந்து விரிந்த இவ்வாவியின் தென்பகுதியைத்தான் மட்டக்களப்பு என பெயர்குறித்து வழங்கப்பட்டு வந்துள்ளது. “புளியந்தீவு” என்ற இடத்தில் 1628இல் போர்த்துக்கீசர் தமது பாதுகாப்புக்காக கோட்டையைக் கட்டிய பின்தான் புளியந்தீவு மட்டக்களப்பாக மாற்றமடைந்தது. இன்றும்கூட சம்மாந்துறையில் மட்டக்களப்புத் தரவை – 01,02 என இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் இருப்பதை அறியலாம்.
இந்தியாவில் இருந்து முக்குகர் வருகை , சோழநாட்டு இளவரசி சீர்பாததேவியின் வருகை, சிந்துபாத்தின் வருகை, அராபியர் , பாரசீகர் வருகை என்பன மட்டக்களப்பு வாவியூடாக சம்மாந்துறை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. வங்காள விரிகுடாவிலிருந்து இலங்கையினுள் பிரவேசிக்கும் பிரயாணப் பாதையாகச் சம்மாந்துறை இருந்து வந்துள்ள வரலாற்று ஆதாரங்கள் இன்னும் பலபல எடுத்துக் காட்டலாம். விரிவஞ்சி விடுகின்றேன்.

பெயர்க்காரணம்

சம்மான் - துறை என இரு பதங்களாக வகுக்கும்போது துறை என்பதற்கான காரண காரியங்களைக் கண்டோம். இந்திய முஸ்லிம் வர்த்தகர்களில் ஒரு பகுதியினர் ‘சம்மான் காரர்’ என அழைக்கப்பட்டனர். கொழும்பு ‘சம்மான் கோட்டுப் பள்ளி’ இந்திய முஸ்லிம்களின் அடையாளச் சின்னம். அத்துடன் சாமான்கள் வந்திறங்கிய ஏற்றுமதி செய்யப்பட்ட துறைமுகமாக இருந்தபடியாலும் சாமான்துறை, சம்மாந்துறையாக பெயர் பெற்றிருக்கலாம். ‘சம்பன்’ என்பது மலாய மொழியில் வர்த்தக நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் வள்ளங்களைக் குறிக்கும் சொல்லாகும். இந்திய முஸ்லிம் வியாபாரிகளும், மலாயர்களும் வர்த்தக நோக்கில் வங்காள விரிகுடாவிலிருந்து மட்டக்களப்பு வாவியூடாக, அதன் தென்பகுதித் துறையில் வந்திறங்கிய படியால் சம்மாந்துறை என பெயராயிற்று எனலாம்.
மிகப் பழைய காலந்தொட்டு சம்மாந்துறை நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கியமைக்கான ஆதாரங்கள் அனேகமுள்ளன. சிந்துபாத்தின் கூற்றில் வயலுக்கு நீர்ப்பாய்ச்சிக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்ததாகவும், அவர் அரபியில் தன்னுடன் பேசியதையும் குறிப்பிட்டுள்ளார். எனவே ‘சம்பா’ என்ற அரிசியை ஏற்றுமதி செய்த துறையாகவும் விளங்கியதால் சம்மாந்துறையாகவும் பெயர்பெற்றிருக்கலாம். இங்குள்ள பழைய உறுதி ஆவணங்களில் ‘சம்பாந்துறை’ எனப் பொறிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சம்மாந்துறையின் முக்கியத்துவத்தினால் இங்கு அமையப்பெற்றிருந்த பாரிய சந்தை (ஆலையடி என்றழைக்கப்பட்ட பழைய மார்க்கட்) யின் அவசியத்தினால் வெளிநாட்டு வர்த்தகர்கள், இறைநல்லடியார்கள் வந்துகொண்டிருந்ததினால் அராபிய முஸ்லிம்களின் வருகையும் தவிர்க்க முடியவில்லை. அதனடிப்படையில் சிறுசிறு அளவில் முஸ்லிம்களின் குடியிருப்புக்களும் இங்கு அமையப்பெறலாயின. துறைமுகமும், சந்தை வசதிகளும் அமையப்பெற்றிருந்த வகையால், உள்ளுர் வாசிகளின் உதவிகளோடு ‘தாவளம்’ என்றழைக்கப்படும் மாடுகளின் மூலம் பொருட்களை கொண்டு செல்வதற்காக சம்மாந்துறையில் தாமதித்துச் செல்லவேண்டியிருந்ததால், வணக்கஸ்தலத்தின் அவசியம் உணரப்பட்டதால் முதன்முதலாக 12ம் நூற்றாண்டளவில் ‘முகையதீன் பள்ளி’ என்ற முதல் பள்ளிவாசல் சம்மாந்துறையில் அமையப்பெறலாயிற்று. முகையதீன் அப்துல் காதிர் ஜீலானி என்ற மார்க்கப் பெரியார் அக்காலத்தில் பிரபல்யமான மார்க்க அறிஞராக விளங்கியமையால், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் ‘முகையதீன்’ என்ற பெயரை இப்பள்ளிக்கு வைத்திருக்கலாம்.
இதைத் தொடர்ந்து 15ஆம் நூற்றாண்டளவில் சம்மாந்துறை துறைமுகத்தில் வந்திறங்கிய சரக்குக் கப்பலில் இருந்து இரண்டு இறைநல்லடியார்களும், அவர்களுடன் ஆறு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றும் இன்றைய பெரியபள்ளியடியில் இருந்த மரத்தடியில் இளைப்பாறினர். இதன் அண்மையிலிருந்த சந்தையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த மக்கள் இவ்நல்லடியார்களின் வருகையைக் கேள்விப்பட்டு அவர்களைத் தரிசிப்பதற்காக கூட்டம் கூட்டமாக ஒன்று கூடினர். அவர்களில் ஒருவர் மத்திய கிழக்கைச் சேர்ந்த சாயலையுடையவராகவும், மற்றவர் தென்னிந்திய சாயலையுடையவராகவும் காணப்பட்டனர். இவ்விருவரையும் அக்குழந்தையையும் அப்போதைய சின்னப்பள்ளியில் தங்குமாறு மக்கள் வேண்டியும் மறுத்த படியால், பெரிய பள்ளி வளவிலேயே அவர்களுக்கான இருப்பிடம் அமைத்துக் கொடுத்தனர். அன்றைய சம்மாந்துறை முஸ்லிம்கள் கோசப்பா, கோஸ்முகையதீன் அப்பா, உம்முகுல்தூம் என இவர்களை அழைத்தனர். இவர்களது மார்க்கப்பிரசங்கம், பேணுதலான நடவடிக்கைகள் ஆகியவற்றால் அப்பிரதேசத்தில் இஸ்லாத்தின் இருப்பும், வளர்ச்சியும் அதிகரிக்கலாயின. முஸ்லிம்கள் மாத்திரமன்றி தமிழ் மக்களும் இந்நல்லடியார்களுக்கு மதிப்பும் மரியாதையும் வழங்கி வரலாயினர். இவ்விறை நல்லடியார்களின் மறைவின் பின்னர் மக்கள் இவர்களை அவுலியாக்கள் என மதிப்பும் மரியாதையும் வழங்கி வந்ததுடன் அவ்விடத்தில் பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்தனர். இதனால் முதலாவது பள்ளிவாசல் “முகையதீன் (சின்னப்பள்ளி) பள்ளிவாசலுடன் இரண்டாவது பள்ளியாக அவுலியாவின் பெயரில் “கோசப்பா பள்ளி”யும் உதயமாயிற்று.
அவர்களுடன் வந்திருந்த பெண் குழந்தை உம்முகுல்தூம் அப்பகுதி முஸ்லிம் குடும்பம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டு வளர்ந்து வாழ்க்கைப்பட்டு குடும்பமாக சீவித்து வரலாயினார். உம்முகுல்தூம் என்ற இப்பெண்னின் வம்சத்தவர்களே இன்று சம்மாந்துறையில் “கோசப்பா குடி”யினர் என்றழைக்கப்படும் வம்சத்தவர்.
1800ஆம் ஆண்டளவில் கோசப்பா பள்ளி என்ற சிறு குடிசை ஓரளவுக்கு கல்லாலும் , சிப்ப்p ஓட்டினாலும் விஸ்தரிக்கப்படுகின்றது. இதன் பிற்பாடு ஜும்ஆத் தினங்கள் முகையதீன் பள்ளியிலும், கோசப்பா பள்ளியிலுமாக மாறி மாறி நடைபெற்று வரலாயிற்று. இவ்விரு பள்ளிகள் தவிர சம்மாந்துறையின் சுற்றாடலில் இறை நல்லடியார்களின் தங்குமிடங்களாக இருந்த இடங்களும் பள்ளிகளாக உருப்பெற்றென. கலந்தரப்பா பள்ளி மல்கம்பிட்டியிலும், குருந்தையடியப்பா குடாவட்டையிலும், காட்டவுலியா சேனைவட்டையிலும், வீரயடியப்பா கொண்டவட்டுவானிலும் கண்கத்தியப்பா சின்னப்பள்ளி ஒழுங்கையிலும் அமையப்பெறலாயின.
சம்மாந்துறையில் முஸ்லீம்களின் குடியிருப்புக்கள் வளர்ந்து வருவதின் அவசியத்தின் காரணமாக 19ஆம் நூற்றாண்டின் இறுதியளவில் தக்கியாப் பள்ளி தோற்றம்பெற்றது. அன்றைய காலக் கட்டத்தின் சிறிய பள்ளியாக இருந்த படியால் “தைக்கியா” எனப் பெயர் பெற்றது. மத்ரஸா நடத்தப்பட்டு வந்த இடத்திலும் பள்ளியொன்று தேவைப்பட்டதால் அவ்விடத்தில் “மத்ரஸாப் பள்ளி” தோற்றம்பெற்றது. 1947ஆம் ஆண்டளவில் இப் பள்ளி அமையப்பெற்றதெனலாம். ஊரில் புதிதாக தோன்றிய பள்ளியாகையால் காலகெதியில் மத்ரஸாப்பள்ளி என்ற பெயர் மாற்றமடைந்து “புதுப்பள்ளி” என வழங்கலாயிற்று. இன்று “மஸ்ஜிதுல் உம்மா” என பெயர் வழங்கப்பட்டு வருகின்றது. சம்மாந்துறையின் அன்றைய மரைக்கார் சபை உறுப்பினராக இருந்த “கண்ணாடி மரைக்கார்” எனும் பெரியார் இவ்வளவை அன்பளிப்புச் செய்திருந்தார் .
சம்மாந்துறையின் குடியிருப்புக்கள் தெற்கு நோக்கி “ஜே புளக்” குடியேற்ற பிரதேசங்களிலும், மேற்கு, கிழக்கு நோக்கியும் விரிவடையத்தொடங்கின. இதன் நிமித்தம் செட்டிட வட்டையில் மஸ்ஜிதுல் ஸலாம், சம்புமடுவில் மஸ்ஜிதுல் அழ்பர், கைகாட்டியடியில் மஸ்ஜிதுல் ஜாரியா, விளினையடியில் மஸ்ஜிதுல் ஜலாலியா, வீரமுனைப் பகுதியில் மஸ்ஜிதுல் கைர், மட்டக்களப்புத் தரவையில் மஸ்ஜிதுல் நகர் என பள்ளிகளின் தொகைகள் விரிவடைந்து செல்லலாயின. இவ்வாறு பள்ளிகளின் தொகை 1980களில் 25 பள்ளிகளாக இருந்த படியால் இவற்றின் நிருவாகத்தை ஒரேயமைப்பில் கொண்டுவரும் முயற்சியில் ஊர் பெரியார்களும், அன்றைய நம்பிக்கையாளர் சபையினரும் எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக “மஜ்லிஸ் அஷ்ஷ{ரா” அமைப்பு 1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ் அமைப்பில் சகல பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளும், குடிமரைக்கார்மார்களும், சமய, சமூக, கலாசார, கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவ்வமைப்பு சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள 44 பள்ளிவாசல்களையும் ஒரு நம்பி;க்கையாளர் சபையூடாக நிருவாகித்து வருகின்றது. மஜ்லிஸ் அஷ்ஷ{ரா ஊராளுமன்றமாகவும், நம்பிக்கையாளர் சபை ஒரு மந்திரிசபை போன்றும,; ஒவ்வொரு ஜமாஅத் நிறுவாகங்களும் மாநில அமைப்பாகவும் செயற்பட்டுவருவதை அவதானிக்கலாம். மஜ்லிஸ் அஷ்ஷுராவின் அமீர் (தலைவர்) சம்மாந்துறையில் அதியுயர் சபையின் அமீர் ஆகையால், இவர் சம்மாந்துறையின் சமூகத் தலைவராகவும் கணிக்கப்படுகின்றார். மஜ்லிஸ் அஷ்ஷ{ரா அமைப்பு நம்பிக்கையாளர் சபையைத் தெரிதல், வரவு செலவுத் திட்டங்களை அங்கீகரித்தல், கணக்காய்வு அறிக்கைகளைப் பரிசீலித்தல், சமய நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லல், சமூகங்களுக்கிடையில் இன நல்லுறவை ஏற்படுத்தல், மிக முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளல் என்பனவாகும்.

சம்மாந்துறை பிரதேசத்திக்கான

Tuesday, January 17, 2012

சுகாதார பணி மனையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்




இன்று சம்மாந்துறை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் சுகாதார பனிமனையின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில்,
M.T.NAAZAR (P.H.I)
M.I.THKKEET (S.D.O)
V.LOKASVARAN (POLICE)
U.L.MAJEET (S.M.O)
A.A.MOHAMED

மற்றும் பிரதேச சபை சிற்றுழியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதில் ஒவ்வொரு மக்களின் வீடுகலையும் பார்வையிட்டு டெங்கை உண்டாக்கும்,பொருட்க்ளை அகற்றப்பட்டது.மேலும் சூழலையும் சுத்தப் படுத்திய வேளைதிட்டமாக இது இடம் பெற்றது.

Monday, January 16, 2012

சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா கொண்டாட்டம்




இன்று சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலயத்தில் தரம்1 இற்காக அனுமதிக்கப்பட்ட புதிய மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா பாடசாலையின் விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஜனாப்M.I.MAHIR அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலையக்கல்வி I.S.A (I.C.T) ஜனாப் M.M.M. JOWFER அவர்கள் கலந்து சிறப்பித்தார். அத்தோடு பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

அங்கு பிரதம அதிதி உரை நிகழ்த்துகையில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்களை வழிகாட்டல்,மாணவர்களை பெற்றோர் கவனிக்கும் மனப்பாங்கு மற்றும் சுய கற்றல் வழிகாட்டல் போன்றவற்றையும் இன்னும் பல விடயங்கலையும் உரையாற்றினார்.








Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.