Tuesday, January 24, 2012

சம்மாந்துறையில் சிறுவர் பூங்கா ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்பம்


சம்மாந்துறை பொது நூலக வளாகம், மற்றும் அதனை அண்மித்த வெளியில் (நெல்லுப்பிடிச் சந்தி) சிறுவர் பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இதனுடைய ஆரம்ப கட்டமாக ஆசனங்கள் அமைக்கும் வேலைத்திட்டம் தற்போது பூர்த்தியாகியுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.நௌசாத்  அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Monday, January 23, 2012

சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவன் உம்றா பயணம்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் அப்துல் றஹீம் றஷாத் அஹமட் எதிர்வரும் 2012.01.24 அன்று உம்றா கிரிகையை நிறைவேற்ற மக்கா செல்கிறார். இவர் சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலய அதிபர் எம்.ஏ.அப்துல் றஹீம்இ ஆசிரியை எம்.ஏ.றாஷிதா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வர் ஆவார்.

இவர் 2010ம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 9யு பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளார். இதனை கௌரவிக்கும் முகமாக 2011.12.11ல் கொழும்பு ஸாஹிறா கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில்  ஆநுPளு அமைப்பினரால் நடாத்தப்பட்ட பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு சான்றிதழ்கள்இ பரிசில்கள்இ பாராட்டுக்களை பெற்றதோடு புனித உம்றா கிரிகையை நிறைவேற்றுவதற்கான ஏழு நாள் இலவச பிரயாண டிக்கட்டையும் பெற்றுக்கொண்டார்.

மேலும்இ இலங்கையில் இருந்து இவ்விலவச உம்றா பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பினை ஆறு மாணவர்கள் பெற்றதோடு எமது பிரதேசத்தில் இவருக்கு மட்டுமே இவ்வாய்ப்பு கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
 

Saturday, January 21, 2012

வடக்கு கிழக்கு காணி பதிவு உத்தரவு வாபஸ்!

வடக்கு கிழக்கு காணிகளை பதிவு செய்யும் உத்தரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் தங்களை மீள் பதிவுசெய்து கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதிக்கு முன்னதாக இந்த பதிவுநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்யுமாறு தமி;ழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்றில்மனுவொன்றை தக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணைகளில் கலந்து கொண்ட சட்ட மா அதிபர்திணைக்களம்- குறித்த உத்தரவு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் என நீதிமன்றில்அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு காணி உரிமையாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம்சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேன்முறையீட்டு மனு நீதவான் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் நீதவான் தீபாலிவிஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு இந்த சுற்று நிருபத்தை வாபஸ்பெற்றுக் கொள்ள இணங்கியுள்ளது என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில்அறிவித்துள்ளது.(எம்.ரி.-977)

தாமரைக் கோபுரத்துக்கு கடந்த வெள்ளிக் கிழமை அன்று அடிக்கல் நடப்பட்டது!


கிழக்காசியாவின் மிக உயர்ந்த கோபுரத்துக்கான அடிக்கல் இன்று காலை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நடப்பட்டது.

கொழும்பு பேரை வாவியின் அருகில் டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள 3.06 ஏக்கர் நிலத்தில் இந்த பாரிய கோபுரம் அமைக்கப்படவூள்ளது.

இலங்கை தொலைத் தொடர்பாடல் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.


“தாமரைக் கோபுரம”; எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பல நோக்குக் கோபுரம் அமைக்கப்பட்டதும் இதன் மூலம் 50 ஒலிபரப்புச் சேவைகளுக்கும் 50 தொலைக் காட்சிச் சேவைகளுக்கும் 20 தொலைத் தொடர்பாடல் சேவைகளுக்குமான வசதிகளைக் கொண்டிருக்கும்.
அத்துடன் உல்லாசமாக பொழுதைப் போக்கக்கூடிய இடமாகப் பயன்படுத்தக்கூடிய அடிப்படை வசதிகளும் இங்கு அமைக்கப்படவூள்ளன.
இந்த தாமரைக் கோபுரத்துக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ இங்கு உரையாற்றுகையில்:
ஜனாதிபதியினதும் இந்த நாட்டு மக்களினதும் ஒரு பாரிய கனவூ இன்று நனவாகின்றது. இக்கோபுரத்தை கம்பஹ மாவட்டத்தில் அமைக்கவே முதலில் திட்டமிடப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரிலேயே கொழும்பில் இடம் ஒதுக்கப்பட்டது.
உலகின் ஏனைய நாடுகள் அடைந்துள்ள அபிவிருத்திக்கு இணையாக எமது நாடடையூம் முன்னேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே ஜனாதிபதி  இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்றும் கூறினார்.(எம்.ரி.-977)

Thursday, January 19, 2012

"ஓடுற மாட்டில இறைச்சி எடுத்து தின்பவர்கள்"

ஓடுற மாட்டிறைச்சியின் சுவை!!!!!
சம்மாந்துறை அழகிய கிராமம் மக்களில் மடடுமல்ல இறையளித்த இயற்கையின் கொடைகளிலுமே.

அன்றைய மட்டக்களப்பு (இன்றைய சம்மாந்துறை) அராபிய ,இந்திய வெளிநாட்டு வர்த்தகர்களின் பண்டமாற்று சந்தையாகவும், மத்திய நாட்டு மக்களிற்கான வியாபாரப் பாதையாகவும், தவளம் முறை வியாபாரம் நடைபெற்ற புராதன செரண்டீப் இனது முக்கிய தலமாகவும் காணப்பட்டது.
இங்குள்ள மக்கள் வீரத்திலும் விவேகத்திலும் விஞ்சியவர்களே, இவர்களின் உணவுப்பழக்க வழக்கமும் விருந்தோம்பலும் சிறப்பானதே.........
.
சம்மாந்துறை கல்வி, விவசாயத்திலும் மடடுமல்ல கால்நடை வியாபாரத்திற்கும் பெயர்போன இடமாகும்
அந்த வகையில் இங்குள்ள பெரும் மாட்டுப் பண்ணையாளர்களிடம் இறைச்சி வியாபாரிகளும், புனித காலங்களில் தானம் வழங்குபவர்களும் தேவையான மாடுகளை வாங்கினர்.
அதன்போது காலையிலுள்ள (பெருமளவான மாடுகள் தங்கவைக்கப்படும் எல்லைப்படுத்தப்பட் பகுதி அல்லது மாடுகளின் கூட்டம்) மாடுகளிற்கு மத்தியில் மாட்டுக்காரர் நின்று கொண்டு கயிறொன்றை சுழற்றுவார். அப்போது உற்சாகமான ,ஆரோக்கியமான மாடுகள் காலையிலிந்து வெளிறயேறுவதற்காக சுற்றி ஓடும்.
அதன்போது அவற்றில் மிக சிறந்த மாட்டை வாங்கிக் கொள்வார்கள்.அவற்றையே உணவுக்காகவும், தானம் வழங்கவும் பயன்னடுத்தினர்.

இதனாலேயே இவர்கள் "ஓடுற மாட்டில இறைச்சி எடுத்து தின்பவர்கள்" என அழைக்கப்பட்டனர்.
காலப்போக்கில் இது அவர்களை இகழச்சிக்காக அழைக்கும் குறிசொல் எனப்புரியப்பட்டது.
இவர்கள் மக்களை இகழ்வதாக எண்ணிப் புகழ்வது முரண்நகையே....



தகவல்:- மூத்த கால்நடை கிராம வைத்தியர்

சம்மாந்துறை வரலாறு

சம்மாந்துறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்கு என அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம். இது முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியாகும். சம்மாந்துறை இப்பிரதேசத்தின் முக்கிய நகரமாகக் கணிக்கப்படுகின்றது. புவியியல் ரீதியிலும் கேந்திர முக்கியத்துவமான இடத்திலும் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வரலாறு

கண்டி இராச்சியத்தின் கிழக்கின் முக்கிய துறைமுகமாகவும் சம்மாந்துறை விளங்கிய வரலாற்றைக் காண்கின்றோம். சம்மாந்துறையிலிருந்து ஐந்து பாதைகள் மலைநாட்டை நோக்கிச் சென்றுள்ளதாக “மட்டக்களப்புத் தமிழகம்” எனும் நூல் குறிப்பிடுகின்றது. இஸ்லாத்துக்;கு முந்திய காலங்களிலும் பாவா ஆதம் மலையைத் தரிசிப்பதற்கும், வெளிநாட்டார் சம்மாந்துறைத் துறைமுகத்தில் கப்பல்களைக் கட்டிவிட்டுச் சென்றுள்ள தகவலை “காத்தான்குடி வரலாறு” குறிப்பிடுவதையும் அறிகின்றோம்.
டிஒய்லி – Dioyly என்ற பிரித்தானியத் தூதுவர் “போர்த்துக்கீசரின் காலத்தில் சம்மாந்துறை கண்டி இராச்சியத்தின் பிரதான துறைமுகமாக அமைந்திருந்தது” என தனது தினக் குறிப்பில் பதிந்துள்ளார்.
1676இல் ஒல்லாந்து அதிபதியாகக் கடமைபுரிந்த ஜேக்கப் பெர்னாந்து “மட்டக்களப்பு என்ற சம்மாந்துறையையும் கண்டியையும் ஐந்து காட்டுப்பாதைகள் இணைத்தன” என்று கூறிய ஆதாரமும் கிடைக்கின்றன. ஒல்லாந்து தளபதியான ஸ்பில்பேர்க்கன் என்பவர் இந்தியாவில் “மட்டக்களப்பு ஆறு எங்கே உள்ளது” என விசாரித்தறிந்து சம்மாந்துறையை வந்தடைந்த குறிப்பேடுகளும் உண்டு. சம்மாந்துறை முஸ்லிம்களின் உதவியோடு கண்டி அரசன் விமலதர்மசூரியனை சந்திக்கச் சென்றுள்ளான்.
இவ்வாறு வரலாற்று ஆதாரங்கள் சம்மாந்துறைத் துறைமுகத்தையும், வர்த்தக நடவடிக்கைகளையும், கண்டி அரசனுக்குள்ள தொடர்புகளையும் விளக்குவதை அறியலாம். சம்மாந்துறை கடல் சார்ந்த துறைமுகமா? என்ற கேள்வி எழலாம். மட்டக்களப்பு வாவியூடாக அதன் தென்பகுதியின் கரைதான் சம்மாந்துறை. பரந்து விரிந்த இவ்வாவியின் தென்பகுதியைத்தான் மட்டக்களப்பு என பெயர்குறித்து வழங்கப்பட்டு வந்துள்ளது. “புளியந்தீவு” என்ற இடத்தில் 1628இல் போர்த்துக்கீசர் தமது பாதுகாப்புக்காக கோட்டையைக் கட்டிய பின்தான் புளியந்தீவு மட்டக்களப்பாக மாற்றமடைந்தது. இன்றும்கூட சம்மாந்துறையில் மட்டக்களப்புத் தரவை – 01,02 என இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் இருப்பதை அறியலாம்.
இந்தியாவில் இருந்து முக்குகர் வருகை , சோழநாட்டு இளவரசி சீர்பாததேவியின் வருகை, சிந்துபாத்தின் வருகை, அராபியர் , பாரசீகர் வருகை என்பன மட்டக்களப்பு வாவியூடாக சம்மாந்துறை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. வங்காள விரிகுடாவிலிருந்து இலங்கையினுள் பிரவேசிக்கும் பிரயாணப் பாதையாகச் சம்மாந்துறை இருந்து வந்துள்ள வரலாற்று ஆதாரங்கள் இன்னும் பலபல எடுத்துக் காட்டலாம். விரிவஞ்சி விடுகின்றேன்.

பெயர்க்காரணம்

சம்மான் - துறை என இரு பதங்களாக வகுக்கும்போது துறை என்பதற்கான காரண காரியங்களைக் கண்டோம். இந்திய முஸ்லிம் வர்த்தகர்களில் ஒரு பகுதியினர் ‘சம்மான் காரர்’ என அழைக்கப்பட்டனர். கொழும்பு ‘சம்மான் கோட்டுப் பள்ளி’ இந்திய முஸ்லிம்களின் அடையாளச் சின்னம். அத்துடன் சாமான்கள் வந்திறங்கிய ஏற்றுமதி செய்யப்பட்ட துறைமுகமாக இருந்தபடியாலும் சாமான்துறை, சம்மாந்துறையாக பெயர் பெற்றிருக்கலாம். ‘சம்பன்’ என்பது மலாய மொழியில் வர்த்தக நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் வள்ளங்களைக் குறிக்கும் சொல்லாகும். இந்திய முஸ்லிம் வியாபாரிகளும், மலாயர்களும் வர்த்தக நோக்கில் வங்காள விரிகுடாவிலிருந்து மட்டக்களப்பு வாவியூடாக, அதன் தென்பகுதித் துறையில் வந்திறங்கிய படியால் சம்மாந்துறை என பெயராயிற்று எனலாம்.
மிகப் பழைய காலந்தொட்டு சம்மாந்துறை நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கியமைக்கான ஆதாரங்கள் அனேகமுள்ளன. சிந்துபாத்தின் கூற்றில் வயலுக்கு நீர்ப்பாய்ச்சிக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்ததாகவும், அவர் அரபியில் தன்னுடன் பேசியதையும் குறிப்பிட்டுள்ளார். எனவே ‘சம்பா’ என்ற அரிசியை ஏற்றுமதி செய்த துறையாகவும் விளங்கியதால் சம்மாந்துறையாகவும் பெயர்பெற்றிருக்கலாம். இங்குள்ள பழைய உறுதி ஆவணங்களில் ‘சம்பாந்துறை’ எனப் பொறிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சம்மாந்துறையின் முக்கியத்துவத்தினால் இங்கு அமையப்பெற்றிருந்த பாரிய சந்தை (ஆலையடி என்றழைக்கப்பட்ட பழைய மார்க்கட்) யின் அவசியத்தினால் வெளிநாட்டு வர்த்தகர்கள், இறைநல்லடியார்கள் வந்துகொண்டிருந்ததினால் அராபிய முஸ்லிம்களின் வருகையும் தவிர்க்க முடியவில்லை. அதனடிப்படையில் சிறுசிறு அளவில் முஸ்லிம்களின் குடியிருப்புக்களும் இங்கு அமையப்பெறலாயின. துறைமுகமும், சந்தை வசதிகளும் அமையப்பெற்றிருந்த வகையால், உள்ளுர் வாசிகளின் உதவிகளோடு ‘தாவளம்’ என்றழைக்கப்படும் மாடுகளின் மூலம் பொருட்களை கொண்டு செல்வதற்காக சம்மாந்துறையில் தாமதித்துச் செல்லவேண்டியிருந்ததால், வணக்கஸ்தலத்தின் அவசியம் உணரப்பட்டதால் முதன்முதலாக 12ம் நூற்றாண்டளவில் ‘முகையதீன் பள்ளி’ என்ற முதல் பள்ளிவாசல் சம்மாந்துறையில் அமையப்பெறலாயிற்று. முகையதீன் அப்துல் காதிர் ஜீலானி என்ற மார்க்கப் பெரியார் அக்காலத்தில் பிரபல்யமான மார்க்க அறிஞராக விளங்கியமையால், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் ‘முகையதீன்’ என்ற பெயரை இப்பள்ளிக்கு வைத்திருக்கலாம்.
இதைத் தொடர்ந்து 15ஆம் நூற்றாண்டளவில் சம்மாந்துறை துறைமுகத்தில் வந்திறங்கிய சரக்குக் கப்பலில் இருந்து இரண்டு இறைநல்லடியார்களும், அவர்களுடன் ஆறு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றும் இன்றைய பெரியபள்ளியடியில் இருந்த மரத்தடியில் இளைப்பாறினர். இதன் அண்மையிலிருந்த சந்தையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த மக்கள் இவ்நல்லடியார்களின் வருகையைக் கேள்விப்பட்டு அவர்களைத் தரிசிப்பதற்காக கூட்டம் கூட்டமாக ஒன்று கூடினர். அவர்களில் ஒருவர் மத்திய கிழக்கைச் சேர்ந்த சாயலையுடையவராகவும், மற்றவர் தென்னிந்திய சாயலையுடையவராகவும் காணப்பட்டனர். இவ்விருவரையும் அக்குழந்தையையும் அப்போதைய சின்னப்பள்ளியில் தங்குமாறு மக்கள் வேண்டியும் மறுத்த படியால், பெரிய பள்ளி வளவிலேயே அவர்களுக்கான இருப்பிடம் அமைத்துக் கொடுத்தனர். அன்றைய சம்மாந்துறை முஸ்லிம்கள் கோசப்பா, கோஸ்முகையதீன் அப்பா, உம்முகுல்தூம் என இவர்களை அழைத்தனர். இவர்களது மார்க்கப்பிரசங்கம், பேணுதலான நடவடிக்கைகள் ஆகியவற்றால் அப்பிரதேசத்தில் இஸ்லாத்தின் இருப்பும், வளர்ச்சியும் அதிகரிக்கலாயின. முஸ்லிம்கள் மாத்திரமன்றி தமிழ் மக்களும் இந்நல்லடியார்களுக்கு மதிப்பும் மரியாதையும் வழங்கி வரலாயினர். இவ்விறை நல்லடியார்களின் மறைவின் பின்னர் மக்கள் இவர்களை அவுலியாக்கள் என மதிப்பும் மரியாதையும் வழங்கி வந்ததுடன் அவ்விடத்தில் பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்தனர். இதனால் முதலாவது பள்ளிவாசல் “முகையதீன் (சின்னப்பள்ளி) பள்ளிவாசலுடன் இரண்டாவது பள்ளியாக அவுலியாவின் பெயரில் “கோசப்பா பள்ளி”யும் உதயமாயிற்று.
அவர்களுடன் வந்திருந்த பெண் குழந்தை உம்முகுல்தூம் அப்பகுதி முஸ்லிம் குடும்பம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டு வளர்ந்து வாழ்க்கைப்பட்டு குடும்பமாக சீவித்து வரலாயினார். உம்முகுல்தூம் என்ற இப்பெண்னின் வம்சத்தவர்களே இன்று சம்மாந்துறையில் “கோசப்பா குடி”யினர் என்றழைக்கப்படும் வம்சத்தவர்.
1800ஆம் ஆண்டளவில் கோசப்பா பள்ளி என்ற சிறு குடிசை ஓரளவுக்கு கல்லாலும் , சிப்ப்p ஓட்டினாலும் விஸ்தரிக்கப்படுகின்றது. இதன் பிற்பாடு ஜும்ஆத் தினங்கள் முகையதீன் பள்ளியிலும், கோசப்பா பள்ளியிலுமாக மாறி மாறி நடைபெற்று வரலாயிற்று. இவ்விரு பள்ளிகள் தவிர சம்மாந்துறையின் சுற்றாடலில் இறை நல்லடியார்களின் தங்குமிடங்களாக இருந்த இடங்களும் பள்ளிகளாக உருப்பெற்றென. கலந்தரப்பா பள்ளி மல்கம்பிட்டியிலும், குருந்தையடியப்பா குடாவட்டையிலும், காட்டவுலியா சேனைவட்டையிலும், வீரயடியப்பா கொண்டவட்டுவானிலும் கண்கத்தியப்பா சின்னப்பள்ளி ஒழுங்கையிலும் அமையப்பெறலாயின.
சம்மாந்துறையில் முஸ்லீம்களின் குடியிருப்புக்கள் வளர்ந்து வருவதின் அவசியத்தின் காரணமாக 19ஆம் நூற்றாண்டின் இறுதியளவில் தக்கியாப் பள்ளி தோற்றம்பெற்றது. அன்றைய காலக் கட்டத்தின் சிறிய பள்ளியாக இருந்த படியால் “தைக்கியா” எனப் பெயர் பெற்றது. மத்ரஸா நடத்தப்பட்டு வந்த இடத்திலும் பள்ளியொன்று தேவைப்பட்டதால் அவ்விடத்தில் “மத்ரஸாப் பள்ளி” தோற்றம்பெற்றது. 1947ஆம் ஆண்டளவில் இப் பள்ளி அமையப்பெற்றதெனலாம். ஊரில் புதிதாக தோன்றிய பள்ளியாகையால் காலகெதியில் மத்ரஸாப்பள்ளி என்ற பெயர் மாற்றமடைந்து “புதுப்பள்ளி” என வழங்கலாயிற்று. இன்று “மஸ்ஜிதுல் உம்மா” என பெயர் வழங்கப்பட்டு வருகின்றது. சம்மாந்துறையின் அன்றைய மரைக்கார் சபை உறுப்பினராக இருந்த “கண்ணாடி மரைக்கார்” எனும் பெரியார் இவ்வளவை அன்பளிப்புச் செய்திருந்தார் .
சம்மாந்துறையின் குடியிருப்புக்கள் தெற்கு நோக்கி “ஜே புளக்” குடியேற்ற பிரதேசங்களிலும், மேற்கு, கிழக்கு நோக்கியும் விரிவடையத்தொடங்கின. இதன் நிமித்தம் செட்டிட வட்டையில் மஸ்ஜிதுல் ஸலாம், சம்புமடுவில் மஸ்ஜிதுல் அழ்பர், கைகாட்டியடியில் மஸ்ஜிதுல் ஜாரியா, விளினையடியில் மஸ்ஜிதுல் ஜலாலியா, வீரமுனைப் பகுதியில் மஸ்ஜிதுல் கைர், மட்டக்களப்புத் தரவையில் மஸ்ஜிதுல் நகர் என பள்ளிகளின் தொகைகள் விரிவடைந்து செல்லலாயின. இவ்வாறு பள்ளிகளின் தொகை 1980களில் 25 பள்ளிகளாக இருந்த படியால் இவற்றின் நிருவாகத்தை ஒரேயமைப்பில் கொண்டுவரும் முயற்சியில் ஊர் பெரியார்களும், அன்றைய நம்பிக்கையாளர் சபையினரும் எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக “மஜ்லிஸ் அஷ்ஷ{ரா” அமைப்பு 1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ் அமைப்பில் சகல பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளும், குடிமரைக்கார்மார்களும், சமய, சமூக, கலாசார, கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவ்வமைப்பு சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள 44 பள்ளிவாசல்களையும் ஒரு நம்பி;க்கையாளர் சபையூடாக நிருவாகித்து வருகின்றது. மஜ்லிஸ் அஷ்ஷ{ரா ஊராளுமன்றமாகவும், நம்பிக்கையாளர் சபை ஒரு மந்திரிசபை போன்றும,; ஒவ்வொரு ஜமாஅத் நிறுவாகங்களும் மாநில அமைப்பாகவும் செயற்பட்டுவருவதை அவதானிக்கலாம். மஜ்லிஸ் அஷ்ஷுராவின் அமீர் (தலைவர்) சம்மாந்துறையில் அதியுயர் சபையின் அமீர் ஆகையால், இவர் சம்மாந்துறையின் சமூகத் தலைவராகவும் கணிக்கப்படுகின்றார். மஜ்லிஸ் அஷ்ஷ{ரா அமைப்பு நம்பிக்கையாளர் சபையைத் தெரிதல், வரவு செலவுத் திட்டங்களை அங்கீகரித்தல், கணக்காய்வு அறிக்கைகளைப் பரிசீலித்தல், சமய நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லல், சமூகங்களுக்கிடையில் இன நல்லுறவை ஏற்படுத்தல், மிக முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளல் என்பனவாகும்.

சம்மாந்துறை பிரதேசத்திக்கான

Tuesday, January 17, 2012

சுகாதார பணி மனையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்




இன்று சம்மாந்துறை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் சுகாதார பனிமனையின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில்,
M.T.NAAZAR (P.H.I)
M.I.THKKEET (S.D.O)
V.LOKASVARAN (POLICE)
U.L.MAJEET (S.M.O)
A.A.MOHAMED

மற்றும் பிரதேச சபை சிற்றுழியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதில் ஒவ்வொரு மக்களின் வீடுகலையும் பார்வையிட்டு டெங்கை உண்டாக்கும்,பொருட்க்ளை அகற்றப்பட்டது.மேலும் சூழலையும் சுத்தப் படுத்திய வேளைதிட்டமாக இது இடம் பெற்றது.

Monday, January 16, 2012

சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா கொண்டாட்டம்




இன்று சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலயத்தில் தரம்1 இற்காக அனுமதிக்கப்பட்ட புதிய மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா பாடசாலையின் விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஜனாப்M.I.MAHIR அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலையக்கல்வி I.S.A (I.C.T) ஜனாப் M.M.M. JOWFER அவர்கள் கலந்து சிறப்பித்தார். அத்தோடு பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

அங்கு பிரதம அதிதி உரை நிகழ்த்துகையில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்களை வழிகாட்டல்,மாணவர்களை பெற்றோர் கவனிக்கும் மனப்பாங்கு மற்றும் சுய கற்றல் வழிகாட்டல் போன்றவற்றையும் இன்னும் பல விடயங்கலையும் உரையாற்றினார்.








10 வயது சிறுமியின் கற்பை காப்பாற்றிய அல்குர்ஆன் – சவூதியில் சம்பவம்

நன்றி யாழ் முஸ்லிம்
”இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன் 2:2)
சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது. இங்கு அதிகமாக திருமணங்கள் பெரும் ஹால்களில் வாடகைக்கு பிடித்து நடத்தப்படும். அது போல் ஒரு திருமண வைபவத்தில் பெண்கள் பகுதிக்கு ஒரு சவுதி காமுகன் வந்துள்ளான். 10 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தனியாக நிற்கவும் ‘என் காரில் மாப்பிள்ளைக்கு அன்பளிப்பு உள்ளது. எனது கார் வரை வர முடியுமா பெண்ணே!’ என்று அவன் கேட்டுள்ளான்.
திருமணத்துக்கு வந்த உறவினர் என்று நினைத்து அவனுடன் உதவி செய்ய அந்த பெண் சென்றுள்ளாள். வாகனத்துக்கு பக்கத்தில் சென்றவுடன் ‘காரில் ஏறு! பரிசுப் பொருள் வீட்டில் இருக்கிறது. எடுத்துக் கொண்டு வந்து விடலாம்’ என்று சொல்லிக் கொண்டே பின் சீட்டில் அந்த பெண்ணை தள்ளி, வண்டியையும் எடுத்து விட்டான். சாப்பாடு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்ததால் இங்கு நடந்த இந்த களேபரங்கள் பெண்ணின் குடும்பத்தின் கவனத்துக்கு வரவில்லை.
வெளியேற முயற்ச்சித்த அந்த பெண்ணை ‘சத்தம் போடாதே!’ என்று மிரட்டவும் செய்துள்ளான். ‘உனது தகப்பனாரை எனக்குத் தெரியும். நான் போனில் பேசிக் கொள்கிறேன்’ என்று சொல்லவும் சற்று அமைதியாகியிருக்கிறாள் அந்த பெண். அவனின் வீடும் வருகிறது. வீட்டினுள் வந்த அவன் அந்த பெண்ணை அழைத்து சென்று ஒரு அறையில் பூட்டியிருக்கிறான். 10 வயதே ஆன அந்த பெண் என்ன நடக்கிறது என்பதை யூகிப்பதற்குள் எல்லாம் நடந்திருக்கிறது. பிறகு ஹாலில் அமர்ந்த அவன் சீசா குடிக்க ஆரம்பித்துள்ளான். அரபுகள் நீண்ட குழாய் மூலமாக புகையை இழுத்து விடுவது ஒரு வழக்கம். இதற்கு சீசா குடித்தல் என்று சொல்வார்கள். படங்களில் கூட பார்த்திருக்கலாம். சிலர் இதில் போதை மருந்துகளையும் கலந்து குடிப்பது உண்டு. அரசுக்கு தெரிந்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்.
வீட்டில் யாரும் இல்லாததும் அவனுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. சீசா குடித்து முடிந்தவுடன் அந்த பெண்ணின் அருகே நெருங்கி வந்துள்ளான். நடக்கப் போவதை உணர்ந்து கொண்ட அந்த பெண் தனக்கு தெரிந்த குர்ஆன் வசனங்களை மளமளவென்று வேகமாக ஓத ஆரம்பிக்கிறாள். இதனால் கோபம் உண்டான அவன் ‘குர்ஆன் ஓதுவதை நிறுத்து’ என்று கூறி முகத்தில் அடித்திருக்கிறான். இதே போல் பலமுறை முயற்சி செய்தும் ஒவ்வொரு முறையும் அந்த பெண் குர்ஆனை ஓதுவதும் அவன் அடிப்பதுமாக இரவு முழுதும் நடந்திருக்கிறது. “Every time he came closer to me, I started reciting Quran and he would withdraw” she said.
அவனும் அரபி மொழி பேசுபவன். அந்த வசனங்கள் என்ன சொல்கிறது என்பது விளங்கியதால் அந்த பெண்ணிடம் அவன் நெருங்க மனது இடம் தரவில்லை. இதுபோல் பலமுறை முயற்ச்சித்தும் முடியாமல் போக முடிவில் தனது தவறை உணருகிறான். காலையும் நெருங்கியது. அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு எங்கு பிடித்தானோ அந்த இடத்திலேயே அந்த பெண்ணை இறக்கி விட்டு தலைமறைவாகியிருக்கிறான்.
திருமண மண்டபத்தில் காலை நேரமாகையால் யாரும் இல்லை. பிறகு வழியில் சென்ற ஒருவரை நிறுத்தி தனது தகப்பனின் செல் நம்பரை அந்த பெண் கொடுத்துள்ளாள். அந்த நல்ல மனிதர் அந்த பெண்ணின் தகப்பனோடு பேசி அவரை வரவழைத்தார். தனது மகளை கண்டவுடன் தந்தை அழுதது நெகிழ்ச்சியாக இருந்தது.
-நன்றி: அரப் நியூஸ் -
இங்கு நாம் ஒன்றை யோசிக்க வேண்டும். நமது நாட்டை விட இது போன்ற தவறுகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கக் கூடிய நாடுதான் சவுதி. இருந்தும் துணிந்து ஒரு பெண்ணை கடத்தி சென்றவனை சமயோஜிதமாக குர்ஆன் வசனங்களை கொண்டு அவனை ஒரு வழிக்கு கொண்டு வந்துள்ளாள் அந்த பெண். இத்தகைய மன உறுதி ஒரு சில பேருக்குத்தான் வரும். அது இறைவனின் வார்த்தை என்பதை இருவரும் உணர்ந்ததால்தான் ஒரு பெரும் தவறு நடக்கவிருந்தது தவிர்க்கப்பட்டது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
இந்த சம்பவத்தை படித்த போது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னொரு காலத்தில் நடந்த ஒரு சமபவத்தை சொன்னது உடன் ஞாபகம் வந்தது. அதையும் பகிர்ந்துகொள்கிறேன்.
2272. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:” உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் ‘நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!” என்று தமக்குள் கூறினர்.
அவர்களில் ஒருவர் ‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!
மற்றொருவர், ‘இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன்.
அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, ‘முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!” என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமேவிட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.
மூன்றாமவர், ‘இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!” என்று கூறினார்.
‘நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!” என்று கூறினேன். அதற்கவர் ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!” என்றார். ‘நான் உம்மை கேலி செய்யவில்லை!” என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். ‘இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!” என அப்துல்லாஹ்வின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்

Saturday, January 14, 2012

சாந்தி வேண்டிப் பொங்குவோம்.

எத்தனையோ பொங்கல் எங்கள் தமிழ் பண்பாட்டில்
சர்க்கரைப் பொங்கல் சந்தணப் பொங்கல்
பால்ப் பொங்கல் பழப் பொங்கல்
மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல்
இன்னும் எத்தனையோ எம்மிடத்தில் இருந்தும்..... 

மணப்பாற மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயல் காட்டை உழுது பச்சை வயலாக்கி
பருவத்தோடு கதிர்பறிய போடியார் வட்டைக்குள்
வேளாமை வெட்டப்போய் ஊரெல்லாம் சீதேவி
உணவளிக்க உதவிய ஞாயிற்றுக்கு நன்றி சொல்லும்
தமிழ் பொங்கலே...  தைப் பொங்கல் 

பகலவன் கோலம்போட பறவைகள் பண்ணிசைக்க
மலர்கள் மணம் பரப்ப மரங்கள் தலையசைக்க
மட்டக்களப்பு பால்சேத்து யாழ்ப்பாண வெல்லமிட்டு
திருமலை அறுசுவை சேர்து வவுனியா பழமிட்டு
அம்பாரை அரிசு அனைத்தையும் ஒன்றுசேர்த்து 
பொங்குவோம் பொங்கல்
வெள்ளம் மடைதிறந்து வேகமாய்ப் போவதுபோல்
நம் உள்ளத்து வேதனைகள் இல்லாது பொங்குவோம்.. 
இன்னும் எனது நாட்டில் எனது மண்ணில்
தூர விரட்டப்பட்டு தூங்கக்கூட இடமில்லாத
துணியைத் தொட்டிலாக்கி பனியிலும் மழையிலும்
படுத்துறங்கும் எம் இனத்தின் சாந்தி வேண்டிப் பொங்குவோம்.
பண்பாடு பறித்தெறியப்பட்டு சமயம் சபைக்காகாமல்
விழுமியம் வெறுக்கப்பட்டு வெட்கத்தினை விலைகேட்கும்
அநாகரிகம் அழியப் பொங்குவோம்.
இமைமூடிய பொழுதிலும் உன் நினைவுகளை
மூடாமல் மனக்கதிரையில் சிம்மாசனம் தந்து
மரணத்தின் கடைசி மூச்சிலும் உயிரையே
சுவாசிக்கும் காதலரை வாழ்த்திப் பொங்குவோம்.
பசிபோக்கப் பொங்குவோம் பாவம் அழியப் பொங்குவோம்
அநாதைகள் இல்லையென அறைகூவிப் பொங்குவோம்
அன்பை பகிரப் பொங்குவோம் அறிவை ஊட்டப் பொங்குவோம்
துயரில் கைகொடுக்கப் பொங்குவோம் துட்டரை விரட்டப் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல் எங்கும் அன்புப் பொங்கல்.....

ஏ.எல். பரீட்சை - நிபுணர் குழுவின் அறிக்கையை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டது

2011ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுடன் தொடர்புடை பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது. பெறுபேறுகள் தொடர்பாக ஏற்பட்ட தவறுகளை குறுகிய காலத்திற்குள் பரீட்சைகள் திணைக்களம் திருத்தியுள்ளமை தமது நிலைப்பாடென குறித்த குழுவினர் அறிவித்துள்ளனர்.
பரீ்ட்சைப் பெறுபேறுகளை கணிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையின் போதே மாவட்ட தரப்படுத்தல் தொடர்பான குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
திருத்தம் மேற்கொள்ளப்பட்ட, மாவட்ட தரப்படுத்தலுடன் கூடிய பரீட்சைப் பெறுபேறுகள் தவறுகளின்றி உரிய முறையில் வெளியிடப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குளறுபடிகளுக்கு காரணமான விடயங்களை நீக்குவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் போதுமானளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பரீட்சார்த்திகள் தமது பிரச்சினைகளை சமர்ப்பிக்குமாறு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட செய்திகளுக்கு அமைய கிடைத்த மேன்முறையீடுகளை விசாரணை செய்தபோது பெறுபேறுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தொடர்பான தகவல்கள் ஆதாரங்களுடன் நிரூபனமாகவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எதிர்காலத்தில் பல்கலைக்கழக அனுமதிக்கான அறிவித்தலை விடுக்கும் போது அதிகளவிலான புத்திஜீவிகளிடம் தகவல்களை பெற்றுக்கொள்ள பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டுமென நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இதனைத் தவிர இத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக பரீட்சைகள் திணைக்களம் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளையும் ஜனாதிபதி நிபுணர்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் பரீட்சைகள் திணைக்களம் தமது தொழிநுட்ப பிரிவுக்காக முழுநேர தொழிநுட்ப ஆலோசகரின் சேவையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த பரீட்சை நடவடிக்கையின் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தற்கால ஆய்வொன்றை துரித கதியில் மேற்கொள்வதன் மூலம் ஏற்பட்டுள்ள தவறுகள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கு உடனடியாக ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் தாரா விஜதிலக்க தலைமையிலான நிபுணர் குழுவில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் க்ஷனிக்கா ஹிரிம்புரேகம, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்த்தன, ஊவ வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரஞ்ஜித் பிறேமலால் டி சில்வா, றோயல் கல்லூரியின் அதிபர் உபாலி குணசேகர ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

சம்மாந்துறையில் மேலும் ஓர் மாணவன் சட்டக் கல்லூரிக்குத் தேர்வானார்

சம்மாந்துறை மண்னை பிறப்பிடமாக கொண்ட U.L.MOHAMED SAMEEM  என்பவர்2012/01/10  சட்டக் கல்லூரி அனுமதியை பெற்றுள்ளார்.

மேலும் அவருக்கு கிடைத்த சட்டக் கல்லூரி அனுமதியையிட்டு எமது SAMMANTHURAI.TK நிறுவனம் வாழ்த்துகலையும் பாராட்டுகலையும் தெரிவிக்கிரது.

அமைச்சர் மர்ஹும் அப்துல் மஜீட் அவர்களுக்கு நினைவு நிகழ்வு




இன்று சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில்UNIVISON  இன் ஏற்பாட்டில் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் அவர்களின் தலைமையில் மர்ஹீம் அமைச்சர் அப்துல் மஜீட் அவர்கலுக்கான நினைத்தல் நிகழ்ச்சி இன்று இடம் பெற்றது.இதில் துஆ பிராத்தனை,நினைவுரைகள்,போன்ற பல்வேறு நினைவூட்டல் நிகழ்வுகளும் இடம் பெற்றன.இந்த நிகழ்வில், கெளரவ அமைச்சர்  P.THAYRATHNA, பேராசிரியர்                 S.M.ISMAIL   (lexure seusl), தவிசாலர்(str)                     A.M.M. NOWSHADஇதன் போது ஆளுமையின் அடையாளம்  என்ற நூல்  வெளியிடப்பட்டது.




Friday, January 13, 2012

புலிகளின் முத்திரை வெளியிட்ட நபர் மீது பிரான்ஸில் விசாரணை ஆரம்பம்!

ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்ட  புலிகளின் படங்கள் பதித்த அஞ்சல் முத்திரைகளை வெளியிட்டார் என்று அடையாளம் காணப்பட்ட நபர் மீது பிரான்ஸ் சட்டமாதிபர் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன
.
பிரான்ஸின் லா போஸ்ட் நிறுவனத்தின் ஊடாக இலகுவாக யாரும் முத்திரைகளை வெளியிடலாம் என்ற சட்டவிதிகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி முத்திரை வெளியிட்டார் என இவர்மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இவர் பிரான்சின் முன்னணி தமிழ் அமைப்பை சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த முத்திரை விநியோகதினால் பிரான்ஸ்சுக்கான தூதுவர்- இலங்கை அரசிடம் மன்னிப்பு கோர வைகப்பட்டதனால் பிரான்ஸ் தூதுவர் ஆத்திரமடைந்ததன் காரணமாகவே இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த நடவடிக்கை தற்பொழுது பிரான்ஸ் அரசின் தமிழர் மீதான பரிவான போக்கில் மாற்றங்களைஏற்படுத்தும் எனவும் அறியமுடிகிறது. எனத் தெரிய வருகிறது.(எம்.ரி.-977)

Thursday, January 12, 2012

சம்மாந்துறை பிரதேச சபை வாழும் கலை இலக்கிய வட்டம் அங்குரார்பணம்


சம்மாந்துறை பிரதேசத்திக்கான “வாழும் கலை இலக்கிய வட்டம்” (Live Art & Literature  Circle) அதன் அங்குராப்பண நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. சாம்மாந்துறை அமீர் அலி நூலக கேட்போர் கூடத்தில் 2012.01.11 4.00 மணியளவில் நடைபெறற இந்நிகழ்வில் சம்மாந்துறையின் மூத்த இலக்கிய வாதியும் சமூக ஆர்வலருமாகிய கலாபூசணம் மாறன் யூ செயின் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகளினைக் கொண்டு இவ்வமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
                           இதன் போது அமைப்பிற்கான நிர்வாகத் தெரிவும் இடம் பெற்றது இதில் தலைவராக M.M.சமீர் உப தலைவராக M.I.M.அர்ஷத் செயலாளராக M.T.முஜாஹிடீன் உப செயலாளராக U.L.M.ரிபாஜ் பொருளாளராக M.I.M.சாக்கீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
                            அமைப்பின் முதற்கட்ட செயற்பாடாக சம்மாந்துறைக்கான ஆவணங்களை சேகரித்தலும்; ஆவணப்படுத்தலும் எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Wednesday, January 11, 2012

உயர் தர பரீட்சை பெறுபேறு தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை கையளிப்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கல்வி பொது தராதர (உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின் சர்ச்சை தொடர்பில் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய ஆணைக்குவின் அறிக்கை இன்று புதன்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கின் உதயம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கிழக்குமாகானசபை


வடக்கு கிழக்கு உள்ளூராச்சி மேம்படுத்தல் திட்டதின் கீழ் மல்வத்தை புதுநகர் மத்திய வீதிக்கு 1ம் கட்டமாக 525M கொங்ரிட் வீதி அமைப்பதற்கு 4.2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு வேலை ஆரம்பிப்பு பணி பிரதேசசபை தவிசாளர்A.M.M. நொசாட் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிகழ்வில் பிராந்திய உள்ளுராச்சி உதவி ஆனையாளர்A.J.M.  இர்சாட் கலந்து சிற்ப்பித்தார்.

Sunday, January 8, 2012

விசேட தேவை உள்ள மாணவன் பரீட்சையில் சாதனை

சது முஸ்லிம் . வித்தியாலத்தின் உட்படுத்தற்கல்வி பிரிவில் கடந்த கா.பொ. (/ம்) கலைப்பிரிவில் கடந்த அச்சி முஹம்மட் அப்துல் சலாம் brailமுறையைப் பயன்படுத்தி டிஉள B,S,Cபெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமையேற்படுத்தியூள்ளார் இவர் இரண்டுகண்ணும் பார்வை இல்வாதவர் என்பது குறிப்பிடத்தக்கது இஸ்லாம் அரசியல் விஞ்ஞானம் சித்தியூம் பொதுபரீட்சையில் 32புள்ளியூம்  - புள்ளி 0.6553ம் பெற்றுள்ளார்
பல்கலைகழக அனுமதிக்கான ஆகக் குறைந்த jfik 3S அத்துடன் பொதுச்சாதாரன வினாத்தாளில் 30 புள்ளி பெறவேன்டும் என்பது 2010.2011 கல்வியான்டின் தகுதியாயாகும் எனவே இவர் 2011.2012 கல்வியான்டின் விசேட அனுமதியின் கீழ் பல்கலைகழகத்திற்கு தெரிவாகி பாடசாலையின் பெருமையை மேலோங்கச் செய்துள்ளார்
இவரது திறமையை அதிபர் உட்பட பாட ஆசிரியர்கள் வகுப்பாசிரியர்கள் சகமாணவர்கள் ஆகியோர் பாராட்டியூள்ளமை குறிப்பிடத்தக்கது

பிறந்து ஒரு நாளேயான சிசுவை கொலை செய்த பெண் உட்பட இருவர் கைது

சம்மாந்துறை, கல்லரிச்சல் கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு பிறந்த குழந்தையை கொலை செய்து, தனது காதலனுடன் இணைந்து வீட்டின் அருகிலுள்ள சுவர் ஓரமாக புதைத்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாள் வயது மதிக்கத்தக்க சிசுவை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், இரண்டு பிள்ளைகளின் தயாரான சுமார் 35 வயது மதிக்கத்தக்க குறித்த பெண்ணும், 55 வயதான அவருடைய காதலனும் இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிசுவை கொலை செய்து புதைத்த பின்னர், தாய்க்கு ஏற்பட்ட இரத்தப் பெருக்கு காரணமாக அவர் வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் சந்தேகம் கொண்ட அயலவர்கள் சம்மாந்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டள்ளார்.
இதனையடுத்து, புதைக்கப்பட்ட சிசு, சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கணகரத்தினம் ஆனந்தி, கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.என். மென்டீஸ், கல்முனை அஷ்ரப் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் கிரியல்ல உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று பிற்பகல் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Saturday, January 7, 2012

புதிய பரீட்சை ஆணையாளர் பதவியேற்றல்

கடந்த 1 ம் திகதி கல்வி அமைச்சர் மாண்பு மிகு பந்துல குணவர்தனா தலைமையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் புதிய பரீட்சை ஆணையாளராக திரு டப். எம். என். ஜே. புஷ்பகுமார பதவியேற்றார். இலங்கை கல்வி நிர்வாக சேவை முதலாம் வகுப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரியான திரு புஷ்பகுமார புதிய பதவியைப் பொறுப்பேற்கு முன்னர் கல்வி அமைச்சின் கீழுள்ள கல்வி நூல் வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாகப் பதவி வகித்ததுடன் பரீட்சை ஆணையாளர், பிரதிப் பரீட்சை ஆணையாளர் மற்றும் உதவிப் பரீட்சை ஆணையாளராகவும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

சம்மாந்துறை இணையத் தளக் குழுவினர் தற்பொழுது www.strbook.tk இனூடாக பேஸ்புக்கினை ஒத்த ஒரு சமூக வலையமைப்பினை உருவாக்கியுள்ளனர்

சம்மாந்துறை இணையத் தளக் குழுவினர் தற்பொழுது www.strbook.tk இனூடாக  பேஸ்புக்கினை ஒத்த ஒரு சமூக வலையமைப்பினை உருவாக்கியுள்ளனர்.இதில் எமது சகோதரர்களும் இணைந்து தம்து பதிவினையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.இது தொடர்பாக சம்மாந்துறை இணையத்தள தகவல் தொழிநுட்பப் பிரிவுடன் வினவிய போது- இத் திட்டதினூடாக எமது புலம் பெயர் நாடுகளில் உள்ள எமது புலம் பெயர் உறவுகளை இணைத்து எமது தகவல்களை வழங்கும் களமாக அமையும் என தெரிவித்தனர்.

Thursday, January 5, 2012

அட.டாளைச்சேனை தேசிய கல்வியல் கல்லூரி புதிய மாணவர் அனுமதி 2012

அட.டாளைச்சேனை தேசியகல்வியல் கல்லூரியின் புதிய மாணவர் அனுமதி எதிர்வரும் 07.01.2012 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு கல்லூரி ஆராதனை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. விஞ்ஞானம், கணிதம், ஆரம்ப நெறி, முதல் மொழி, இஸ்லாம் மற்றும் விசேட கல்வி ஆகிய பாட நெறிகளை தொடர்வதற்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அனுமதிக் கடிதங்கள் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டள்ளன.

எம். ஐ. எம். நவாஸ்
உப-பீடாதிபதி
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி

Friday, December 30, 2011

பரீட்சை பெறுபேறுகளும் உளவியல் தாக்கங்களும்

எஸ்.எல்.மன்சூர் (கல்விமானி) 

அறிஞர் ஜான் புக்கர் 'இன்றைய உலகத்தில் பல வியாதிகளைக் குணப்படுத்துவதற்கு கல்வி ஒன்றே சிறந்தது' என்று கூறுகின்றார். ஆனால் அந்தக் கல்வியினால் பலர் நோயாளியாக மாறுகின்றார்கள்  என்றால் அந்தக்கல்வியால் என்ன பிரயோசனம். அதனைத்தான் இன்றைய புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் தெளிவு படுத்துகின்றனவா?   

இவ்வாண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் அனைத்தும் வெளியாகியதைத் தொடர்ந்து கூடிய புள்ளிகள் பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் பத்திரிகைகளில் வெளியாவதும், வெற்றியடைந்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிவதும், பாடசாலைக்குப் பாடசாலை போட்டியிட்டு விழாக்கோலம் நடாத்துவதும் கற்பித்த ஆசிரியர்கள், உதவிநின்ற அதிபர்கள் போன்றோருக்கு பரிசுகள் வழங்குவதும் தற்போது வாடிக்கையாகிவிட்ட இன்றைய சூழலில் குறித்த புள்ளிகளை அடைய முடியாத மாணவர்களிளனதும், அவர்களுக்காக இரவு பகலாக கஷ்டப்பட்ட பெற்றோர்களினதும் நிலையையும் சற்று யோசித்துப் பார்த்தோமா? அவர்களது மனசஞ்சலத்தில் பங்குபற்றி ஆறுதல் கூறினோமா? பலர் அவர்களை நினைத்துக்கூட பார்க்கவே இல்லை.

தரம் ஒன்றில் பிள்ளையை பாடசாலைக்குள் விட்ட கையோடு 'என்பிள்ளை தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்து பாராட்டப்படவேண்டும்' என்கிற மனகோட்டை கட்டிய பெற்றோர்களும், அவர்களை நம்பி ஐந்து வருடங்களாக ஏற்றிய மனச்சுமையை கோட்டை விட்ட மாணவர்களினதும் நிலையைப் பற்றி பாடசாலைகளின் அதிபர்களோ, அல்லது சமுதாயமோ, விழா எடுக்கின்ற அரசியல் வாதிகளோ, கற்றறிந்த ஆசிரியர்களோ யாருமே கவனிப்பதாய் இல்லை. இவர்களின் நிலை அந்தோ பரிதாபம் இன்று இவர்கள் கவனிப்பாரற்று தலை தொங்கிய நிலையில் பாடசாலைக்குள் ஏனைய மாணவர்களின் கிண்டலுக்கு உள்ளாகி பாடசாலைக் கல்விக்கு முடிச்சுப்போடுகின்ற ஒரு நிலைமையை இப்பரீட்சையின் பெபேறுகள் தோற்றிவித்துள்ளது என்பதைத்தான் பெற்றோர்களிடமும், குறைவான புள்ளிகள் எடுத்த மாணவர்களிடமும் மனக்கவலையைத் ஏற்படுத்தி, இது பாரிய பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பது அறிஞர்களின் கருத்து.

உண்மையில் அரசாங்கத்தினது ஒரு ஊக்குவிப்புக்காக அதாவது குறித்த வீதமான மாணவர்களை மாவட்ட அடிப்படையில் உதவித் தொகை வழங்குவதற்கும், தேசிய மட்டத்தில் பல்வேறு சிறப்புக்களை உள்ளடக்கிய பாடசாலைகளில் கல்வி கற்பதற்குமுரிய வாய்ப்புக்களை வழங்கும் நோக்குடன் இந்த நாடுதழுவிய பரீட்சை நடாத்தப்படுகிறது. இது கடந்த பலவருடங்களாக பல்வேறு மட்டத்திலும் சில தாக்கங்களை ஏற்படுத்தி வந்தாலும், பாடசாலை மட்டத்திலும் தாய்மாரிடமும் தற்போது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் விளைவு பி;ள்ளைக்கு உணவு உண்பதற்கும், தூhங்குவதற்கும் நேரமற்று பலமாதங்கள் சுமைக்கு மேல் சுமையுடன், எப்படியும் பிள்ளை கூடிய புள்ளியை பெற்றால் தனக்குள்ள குடும்ப கௌரவத்திற்கு கிடைத்த பரிசு என்கிற வேதாந்தத்தை பிள்ளை மூலமாக நிறைவு செய்ய முற்படுபடுகின்ற இந்நடவடிக்கைகள் பாரிய பிழையான நடத்தைக்கு வழிவகுக்கும் என்பதை மறந்துவிடுகின்றனர்.

அண்மையில் புத்தி ஜீவிகள் பலரின் சிபார்சுகள் அடங்கிய ஆய்வு அறிக்கை கல்வியமைச்சரிடம் வழங்கப்பட்டது. தற்போது நடாத்தப்படுகின்ற தரம் 5இல் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்வதற்கு அவர்களது வயது போதாது. எனவே தரம் 7இல் பரீட்சிக்கப்படுவதன் அவசியம் பற்றியும் அக்குழுவின் சிபார்சுகள் அமைந்திருந்தன. பொதுவாகவே மாணவர்களை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தயார் செய்கின்றபோது அவர்களிடம் இயற்கையாக பத்துவயதில் காணப்படுகின்ற பல்வேறு செயற்பாடுகளை மறக்கவைத்து வலிந்து கற்றலில் அவர்களை நெட்டுருப் பண்ணுவதனால் அப்பிஞ்சு உள்ளம் சோபிழந்து கல்வியில் அக்கரையற்று வாழ்க்கையே புஷ்வாணமாகும் சந்தர்பத்தை ஏற்படுத்தியும் சிலவேளை ஏற்படுத்தி விடுகிறது. ஆதலால்தான் வெற்றி, தோல்வி என்ற நிலைக்கும் அப்பால் மாணவரின் கல்வி மீதான பற்றுக்கு அடுத்தபடிக்கட்டாக இப்பரீட்சை அமைய வேண்டுமே ஒழிய மாணவர்களை மனவேதனைக்கு உட்படுவதை தவிர்ப்பதாக அமைய வேண்டும்.

பரீட்சை முடிவுகள் சரியாக அமையாதபோது ஏற்படுத்திவிடும் விபரீதங்கள் மனதை நெகிழவைத்தும் விடுகின்றன. அதற்குதாரணமாக அண்மையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று மனதை தொட்டதனால் இதனை எழுதுகின்றேன். அதாவது பரீட்சை முடிவுகள் வெளியாகியதும் தனது பி;ள்ளையின் முடிவினை கைதொலை பேசியில் ஒரு இளைஞரிடம் பார்க்கும்படி கேட்கிறார்கள். பார்த்த இளைஞன் ஒரு புள்ளி குறைவினால் சித்தியடையவில்லை என்று கூறியதுதான் தாமதம்  படிப்பு வாசனையே இல்லாத அப்பிள்ளையின் பெற்றோர் சித்தியடையவில்லை என்ற காரணத்தினால் மனமுடைந்து அவ்விடத்தில் இருந்து அழ ஆரம்பித்து நாள் முழுவதும் புலம்பியழுது மன அழுத்தத்திற்கு பிள்ளை உட்பட்ட சம்பவம் மனதை உருக்கியே விட்டது. அடுத்தநாள் மாணவனின் ஆசிரியர் அவ்விடம் சென்று ஆறுதல் கூறினாலும் மரணவீடுபோல் காட்சியளித்த பரிதாபத்தை என்னவென்று கூறுவது.

தற்போது உளரீதியான ஆலோசனை வழங்கப்பட்டு ஓரளவு மனமாற்றத்தை ஏற்படுத்தியதன் பிற்பாடு அம்மாணவன் வழமைபோன்று பாடசாலைக்கு செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான சம்பவங்கள் மாணவர்களின் நடத்தைக் கோலத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும் இப்பரீட்சையின் ஊடாக மாணவர்களினது உடல். உளரீதியான அழுத்தங்களுக்கு ஒரு வகையில் பெற்றோரும், சில கற்றோரும் காரணவாதிகளாக அமைந்துவிடுவதுதான் மிகவும் கவலைக்குறிய விடயமாகும். புதிய கல்வி சீர்த்தம் நடைமுறையில் இருந்தாலும் பயன்பாட்டில் இருக்கின்றதா?

கடந்த 1997 இல் கொண்டுவரப்பட்ட ஆரம்பக்கல்வி சீர்திருத்தத்தின் நோக்குக்கு மாற்றமாகவே இப்பரீட்சையின் முடிவுகள் உணரப்படுகின்றன என்பதைத்தான் பலரும் கூறுகின்றனர். அப்போது ஏற்பட்ட பல மாற்றங்கள் தவறுகள் காரணமாக மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 2003இல் தேசிய கல்வி ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மனித விருத்தி பற்றிய தொலைநோக்கை அடைந்து கொள்வதற்காக தேர்ச்சி மைய, பாடத்திட்ட விருத்திப் பிரவேசத்தின் போது மொழிப்பாடவாரியான தேர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்துடன் பொதுத்தேர்ச்சிக் குறிக்கோள்களை அடைவதற்கு மாணவர்கள் எய்த வேண்டிய அடிப்படைத் தேர்ச்சிகளையும் விதந்துரைத்துள்ளது. அதாவது தொடர்பாடல் தேர்ச்சிகள், ஆளுமை விருத்தி தொடர்பான தேர்ச்சிகள், சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகளுக்கான தேர்ச்சிகள், வேலை உலகிற்கு தயார்படுத்தலுக்கான தேர்ச்சிகள், சமயமும் ஒழுகலாறும் தொடர்பான தேர்ச்சிகளும், ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தல், விளையாட்டுப் பற்றிய தேர்ச்சிகள், கற்றலுக்கான கற்றல் தொடர்பான தேர்ச்சிகள் ஆகியன விருத்தியடைந்து செல்லும் விதமாகக் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் அமைதல் சிறப்பானது என்பதைத்தான் இவ்வயது மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றது. 

ஆனால் இது நடைபெறுகின்றதா? என்றுபார்த்தால் வித்தியாசமான ஒரு போக்கைத்தான் இந்த புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புகளுக்கு தயார் செய்யப்படுகின்ற மாணவர்கள் நோக்கப்படுகின்றனர். எனவேதான் இப்படியான உளரீதியான தாக்கங்களுக்கு உள்ளாக்கப்படுகின்ற பரீட்சைக்கு குறைந்த புள்ளிகள் 70க்கு மேல் எடுத்த அனைவருக்கும் கல்வியமைச்சினால் தராதரம் வழங்கப்படும் என்கிற உத்தரவாதத்தையும் மீறி குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்களின் நலனை கவனிக்கும் அதேவேளை குறைவாக எடுத்த மாணவர்களையும் பாராட்டி கௌரவிப்பது அவர்களது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் ஆற்றலை வழங்கும் என்பதைத்தான் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாது ஆரம்ப வகுப்புக்களில் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணியை மாணவர்களுக்கு ஒழுங்கு செய்து கொள்வதுடன், இவர்கள் பிள்ளைவிருத்திப் பருவத்தின் தீர்க்கமான ஒரு கட்டத்தில் காணப்படுவதால் அவர்களிடம் ஆக்கச்சிந்தனையையும், சமூகத்திறன்களும், ஆளுமைப்பண்புகளும் விருத்தியடைந்து இசைவடையும். ஆதலால் பாடசாலைப்பருவத்தில் மாணவர்கள் கற்றலுக்காக சூழலுடன் இடைத் தொழிற்பாடுகளை நடத்துவது மிக முக்கியமாகும். அதற்காகவேண்டியே ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி ஆசிரியர்களுக் வழங்கப்படுகிறது. அதனை முற்று முழுதாக வாசித்தறிந்து அவற்றிலுள்ள விடயங்களை சூழலுடன் இயைபாக்கி கற்றலை மேற்கொள்கின்றபோது இலகுவாகவே மாணவர்கள் கற்றலின்பால் ஈடுபாடுடையவர்களாக தோற்றம் பெறுவார்கள். இம்முறை பரீட்சைக்கு உள்வாங்கப்பட்ட பல வினாக்கள் நேரடியாக பாடத்திட்டத்திற்குள் உட்பட்டவாறே மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பாடசாலையின் ஆசிரியர் இதனை அழுத்தமாக பிரயோகிக்காமல் சாதாரணமாக கற்பிக்கின்றபோது இலகுவாக மாணவர்களினதும், பெற்றோர்களினதும் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

இதனை மையமாகக் கொண்டே பரீட்சை முடிவுகள் வெளியான கையுடன் தேசிய பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் தலையங்கத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. 'வெற்றி பெற்றவர்கள் ஆனந்தக்களிப்பு, கற்பித்த ஆசிரியர் தொடக்கம் உறவினர்கள் வீடுவரை இனிப்புப்பண்டம் வழங்குதல், சித்தியடைந்த மாணவர்களின் கட்அவுட் காட்சிப்படுத்துதல், பத்திரிகையில் மாணவர்களின் போட்டோ இவ்வாறு பெற்றோர் ஆசிரியர் படாதபாடு படுத்துகின்றனர். இன்னொருபுறம் குறைவாக புள்ளி பெற்ற மாணவர்களை கவனியாது விடுகின்றனர். அவனது மனவேதனை அவனது உளப்பாதிப்பினால் விளையப்போகும் எதிர்காலத்தாக்கங்கள் குறித்து கல்விச் சமுதாயம் கவனம் கொள்ளத் தவறிவிடுகிறது. 

அத்துடன் தன்னை முற்றாக புறந்தள்ளிவிட்டார்கள் என்கிற மனவேதனையில் அப்பிஞ்சு உள்ளத்தின் குமுறலையும் நாம் கவனிக்கவேண்டும். விளையாட்டை மறந்து சதா கற்றல் என்ற நிலையில் புள்ளிகள் குறைவான காரணத்தினால் ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்கள், உற்றார் உறவினர் ஏன் அதிபர்கூட இவனை நச்சரிப்பதனால் மொத்தத்தில் குழந்தைப் பருவத்தையே மறந்து விடுகின்றான். அத்துடன் புலமைப் பரீட்சையின் பின்னர் பெற்றோர்கள் பலர் உளமருத்துவரிடம் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்கின்ற ஒருநிலைக்கு இப்பரீட்சை அமையுமானால் எதிர்கால புத்திஜீவிகளை எங்கே தேடுவது. ஆதலால்தான் இப்பரீட்சை தேவையான ஒன்றா என்பதை சிந்தித்துப்பார்க்கின்ற கடப்பாடு அனைவருக்கும் உண்டு' என்கிற கருத்தை தெளிவுபடுத்தி விரிவாக எழுதப்பட்டிருந்தது. 

உண்மையில் ஆய்ந்து அறிந்து பார்க்கின்றபோது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இத்தகைய புலமைப்பரிசில் பரீட்சையினால் தாக்குண்ட பிள்ளைகளைப் பற்றிய அறிக்கை ஒன்றில் இவ்வாறு காணப்படுகிறது. இப்பரீட்சை எழுதிய பிள்ளைகள் பலர் பல்வேறு நோய்களுக்குள்ளாகி வைத்திய உதவியை நாடுகின்றனர். அதிகமான மாணவர்களிடம் இந்தநோய்கள் பரீட்சைக்குத் தயாராகும் போதும், பரீட்சையின் பின்னரும் ஏற்பட்டவை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. இப்பரீட்சை காரணமாக இப்பிள்ளை அனுபவித்து வரும் மன அழுத்தக்காரணிகளை மதிப்பீடு செய்தபோது தலைவலி, பார்வை மங்குதல், தலை சுற்றல், நாற்பட்ட வயி;ற்றுவலி, மூட்டு வலி, தசை வலி, மூர்ச்சையடைத்தல், வலிப்பு, மூச்சுத் திணறல், தூக்கமின்மை போன்ற மனவேதனைகளை இப்பருவத்தின் பிள்ளைகளுக்கு இப்பரீட்சை முடிவுகளும், ஆரம்பமும் ஏற்படுத்திவிடுகின்றன. என்கிற விடயத்தை ஆய்வுகள் தொட்டிக்காட்டி நிற்கின்றன.

அதேவேளை கற்ற பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து பல அண்பளிப்புக்கள் பெறப்பட்டு மாணவர்களின் பெற்றோர்களால் பாராட்டுப் பெறவைக்கின்ற முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் குறைவான புள்ளிகள் பெற்ற மாணவர்களையும் இணைத்து பாடசாலைகள் போட்டி குரோத மனப்பாண்மையை விடுத்து பாடசாலைக்கு பெயரைப் பெற்றுத்தந்த மாணவர்களை பாடசாலை சமுதாயமே பாராட்டவேண்டும். அதை விடுத்து பலமாதங்களாக டியூஷன் என்றும், புத்தங்கள், சஞ்சிகைகள், கருத்தரங்குகள் என்கிற பல்வேறு கோணத்தில் பணத்தை பிடிங்கிய நிலையில் மீண்டும் பல ஆயிரங்கள் மாணவர்களின் பெற்றோர்கள் மூலமாக கறக்கப்பட்டு விழா எடுப்பது சிலருக்கு சந்தோசமாக இருப்பினும் குறிப்பாக அரசாங்க உத்தியோகத்தர்களது பிள்ளைகளுக்கு எந்தவிதமான கொடுப்பனவுகளும் இன்மையானது அவர்களது உரிமை சாதாரணமான சம்பளத்திற்காக மறுக்கப்படுவது கவலைக்குறிய விடயமாகும்.

எனவே, பரீட்சைக்குப்பிந்திய காலகட்டத்தில் மாணவர்களினது மன அழுத்தங்கள் அவனது கல்விக்கு வேட்டுவைக்கின்ற நிலையிலிருந்து பிள்ளை விரும்பும் இடமாக பாடசாலையும், உன்னதமான கல்வியும் எதிர்கால நல்வாழ்வுக்கு அடித்தளமாக இப்பரீட்சையும் அமைய வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கௌ;ளும் நிலை எப்போது உருவாகின்றதோ அப்போதுதான் இப்புலமைப் பரிசில் பரீட்சைக்கு உண்மையான பெறுமதி உண்டு என்பதை கற்றறிந்தோரும், பெற்றோரும் உணர்தல் வேண்டும். அத்துடன் இப்பரீட்சையின் ஆரம்பம் உயர்வகுப்பில் சித்தியடைவதற்கு எவ்விதமான தடையாகவும் இருக்கக்கூடாது என்பதைகூறி கற்பதற்கான தடைகள் அகற்றப்பட்டு சாதனை புரியும் ஆற்றலை வழங்கவேண்டிய கடப்பாடு பாடசாலைக்கு உண்டு என்பதை சமுதாயத்தின் முன் உணர்த்துதல் அவசியமாகும்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்க ஏற்பாடு, உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக பணிப்பு, விசேட பேட்டியில் உபவேந்தர் தெரிவிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்ப  பீடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே வேளை இப்பல்கலைகழகத்தின் அபிவிருத்திக்கு குவைத் அரசாங்கம் மேலும் 1200 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு முன்வந்துள்ளது என்று உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில் தெரிவித்தார்.

உபவேந்தர் இஸ்மாயில் அவர்களது பேட்டியின் சில பகுதிகளை இங்கு தருகின்றோம்

கேள்வி:
நீங்கள் உபவேந்தராகப் பதவியேற்ற பின்னர் இப்பல்கலையில் இடம்பெற்றுள்ள அபிவிருத்தி மற்றும் கல்வி மேம்பாடு தொடர்பில் குறிப்பிட முடியுமா?

2009 ஜுன்  மாதமளவில் நான் பதவியேற்றேன். எனது காலப்பகுதியில்   பல்கலை அபிவிருத்தியிலும் மாணவர் கல்வி மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது குறிக்கோள்:

நான் உபவேந்தர் பதவியை ஏற்பதற்கு  முன்னரே என்னிடம் ஒரு தூரநோக்கு சிந்தனை இருந்து வந்தது. அதாவது இதனை ஒரு சர்வதேச தரத்திலான ஒரு பல்கலைகழகமாக தரமுயர்த்த வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும்admin

இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையை நான் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறேன். என்றாலும் ஒரு சில மாதங்களில் எமது இலக்கை அடைந்து விட முடியாது. நான் வரும்போது 10 ஏக்கர் பரப்பிலேயே பல்கலைகழகத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.ஆனால் அதனை நாம் 200 ஏக்கர் பகுதிக்கு விஸ்தரிப்புச் செய்து கற்றல் செயற்பாடுகளுக்கான சூழலாக மாற்றி அழகு படுத்தியுள்ளோம்.

அபிவிருத்தி என்பது தானாக வருவதில்லை. கற்றல்-கற்பித்தல்-ஆய்வு நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்கின்ற  போதே அதனை அடைந்து கொள்ள முடியும். எனினும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னே ற்றம்  கண்டு வந்த போதிலும் ஆய்வு சம்பந்தமான நடவடிக்கைகள் எதிர்பார்த்தளவு இருக்கவில்லை. அதற்காக இரண்டு முறை சர்வதேச ஆய்வு மாநாடுகளை எமது பல்கலையில் வெற்றிகரமாக நடாத்தியுள்ளோம். இதன் மூலம் தேசிய, சர்வதேச ரீதியிலான கவனத்தை ஈர்த்து பல்வேறு தரப்பினருடன் தொடர்புகளும் நல்லுறவும் ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளன.

அத்துடன் போருக்கு பின்னரான எமது நாட்டின் அபிவிருத்தி பற்றியும் சமாதான சூழ்நிலை பற்றியும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்  அரசின் செயற்பாடுகள், உண்மையான நிலைவரம் தொடர்பிலும் எமது நாடு பற்றி சர்வதேச மட்டத்தில் நிலவும் தப்பபிப்பிராயங்ககளை நிவர்த்திப்பதற்கும் இவ்விரு ஆய்வு மாநாடுகளும் பெரிதும் உதவியுள்ளன

கேள்வி:  
அபிவிருத்தி தொடர்பில் உயர் கல்விஅமைச்சரின் முழுமையான  ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கிறதா?

அமைச்சர் எஸ். பி.திசாநாயக்க அவர்கள் உயர் கல்வி அமைச்சைப் பொறுப்பேற்ற பின்னர் பல்கலைகழக கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பல்கலை மாணவர்களை தொழில் தேடி வரும் வகையில் அவர்களுடைய கல்வித்தகைமை அமைந்திருக்க வேண்டும் என்பதே அமைச்சரின் முக்கிய குறிக்கோளாகும்.

பல்கலைகழக கல்வியை பூர்த்தி செய்து விட்டு தொழில் வாய்ப்புக்காக போர்க்கொடி தூக்குபவர்களாக இருக்கக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் அவர்கள் இம்மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.அதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.DSC06469
அத்துடன் பல்கலை அபிவிருத்திக்கு கூடுதல் நிதியை கொடுத்து பின்னர் அப்பல்கலைகழகமே சம்பாதித்து தமது தேவையை நிறைவு செய்து கொள்ளும் நிறுவனமாக மாற  வேண்டும்  என்பதே அவரின் தூரநோக்க சிந்தனைகளாகும்.

எமது பல்கலைக்கழக அபிவிருத்தியில் அமைச்சர் கூடிய அக்கறை செலுத்தி வருகின்றார். அவர்கள் பதவியேற்று முதன் முறையாக எமது பல்கலைக்கழகத்திற்கே விஜயம் செய்தார். இது வரை 3  தடவைகள் வருகை தந்துள்ளார்
கடைசியாக வருகை தந்த போது எமது பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழிநுட்ப பீடத்தை ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு என்னை பணித்துள்ளார் அது எமக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியாகும்

கேள்வி:  
வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்குதல் பற்றி?

எமது நாட்டு பல்கலைகழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்குவதன் மூலம் அவற்றை சர்வதேச தரத்திற்கு உயர்த்த முடியும் என்ற நோக்கமும் அவரிடம் உள்ளது.இவற்றுக்கேல்லாம் நாம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.


பகிடிவதை:  ஒழிப்பு

எமது பல்கலைக்கழகத்தில் பகிடிவதை ஒழிக்கும் நடவடிக்கை முழு வெற்றி அடைந்துள்ளது  கடந்த 2 வருடங்களில்  பகிடிவதை செயற்பாடுகள் பெருமளவு குறைந்துள்ளது. அவற்றை முடியுமானவரை தடுத்து ள்ளோம். மாணவர்களின் ஒழுக்கம் மேம்பட்ட நிலையில் உள்ளது  ஏனைய பல்கலைக்கழகங்களைப் போன்று போராட்டங்கள் மற்றும் ஒழுங்கீனமான செயற்பாடுகளை  நீங்கள் இங்கு  காண முடியாது. இங்கு நல்லதொரு கற்றல் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இன்னுமொரு பெருமைக்குரிய விடயம் என்னவென்றால்  குவைத்   அரசின் நிதி உதவியுடன் பாரிய அபிவிருத்திப்பணிகள் மேற்ற்கொள்ளப்பட்டு வருகின்றன. தான் உபவேந்தராகப் பதவியேற்ற பின் முதலாவது  கையொப்பமிட்டு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் மேலும் 1200 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்து தருவதற்கு குவைத்  முன்வந்துள்ளது


மாணவர்களுக்கு அதி சிறந்த முறையில் சகல வகையான வசதிகளையும் உட்கட்டமைப்புகளையும் செய்து கொடுத்து வருகின்றோம். அவை நிறைவடையும் நிலையில் DSC06517உள்ளன.இவ்வேலைத்திட்டங்கள் முழுமையடையும் பட்சத்தில் நிச்சயமாக இப்பல்கலைக்கழகம் ஒரு சிறந்த நிறுவனமாக திகழும் என்பதில் சந்தேகம் கிடையாது.


அதேவேளை மூவின மாணவர்களும் வந்து கற்கக்கூடிய வசதிகளையும் சமய கலாசார விழுமியங்களை பேனுவதற்கான ஏற்பாடுகளையும் இங்கு செய்து கொடுத்துள்ளோம். அந்த வகையில் முஸ்லிம், சிங்கள மற்றும்  இந்து மாணவர்களின் நலன் கருதி மதவழிபாட்டுத் தளங்களை  அமைத்துக் கொடுத்துள்ளோம். அதற்கு  மேலாக சர்வதேச ரீதியாகவும் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பல இனங்கள் பல கலாசரங்கள் பல மொழிகள் கொண்ட ஒரு பல்கலைக்கழகமாக இது மாற்றமடைவதன் மூலமே சர்வதேச தர கணிப்பீட்டுக்கு எமது பல்கலைக்கழகத்தை உட்படுத்த முடியும்.

விசேட கற்கை நெறிகள்

அத்துடன் விஞ்ஞான பீடத்தில் கணணி,புள்ளிவிபரவியல்,பௌதீகவியல் இரசாயனவியல் உயிரியல் துறைகளில் விசேட கற்கை நெறிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் உயர் கல்விக்காக நாட்டம் கொண்டவர்களின் அபிலாசையை பூர்த்தி செய்வதற்காக MBA கற்கை நெறியை ஆரம்பித்து - மிகவும் சிறந்த முறையில் இயங்கி வருகிறது. இவை தவிர சமுகத்தை சிறந்த முறையில் வழிநடத்தவும் DSC08120திறமைசாலிகளை வளர்த்து விடுவதற்காகவும் விரிவாக்கல் கற்கை நிலையத்தின் மூலம் குறுகிய கால டிப்ளோமா கற்கை நெறிகளை நடாத்தி வருகின்றோம்.

சமுக உறவுகளை வளர்பதற்காக பல்வேறு தரப்பினரையும் உள்வாங்கி  சமுக பொருளாதார அரசியல்  ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு வகையான கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றோம்.

அத்துடன் எமது பல்கலையில் இருந்து அதிக விரிவுரையாளர்களை கலாநிதி மற்றும் முதுமாணி நெறிகளை பயில்வதற்காக சர்வதேச ரீதியில் ல் அங்கிகாரம் பெற்ற பல்கலைகலகங்களுக்கு அனுப்பியுள்ளோம்.

பல்கலை கட்டுமான பணிகளுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனக்களின் உதவிகளை பெற்று வருகிறோம். இப்பல்களைக்கலகத்தை வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் நவீன வடிகாலமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அண்மையில் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற அம்பாறை DCC கூட்டத்தில் இவ்வேலை திட்டத்திற்கென  நிதி ஒதுக்கீட்டிற்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.