Tuesday, December 20, 2011

தென்கிழக்கு பல்கலையும் BCAS நிறுவனமும் இணைந்து உயர்கல்வி பயிற்சிப் பட்டறை



இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் கலை காலாச்சார பீட மாணவர்களுக்கான பிரதித்தானிய பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறை கலை கலாச்சார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

தொழில் வழிகாட்டல் ஆலோசகர் ஏ. பாறுக் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறைக்கு  வீகாஸ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவ ஆலோசகர் ஏ.எம். நியாஸ் அதே பல்கலைக்கழகத்தின் மாணவ ஆலோசகர் அஸாம் ஏ. காதர் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்தினர்.

இந்நிகழ்வானது இலங்கை தென்கிழக்கு பல்கலைக்க கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டிலும் வீகாஸ் பல்கலைக்கழகத்தின் அனுசரனையிலும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் செயலாளர் திரு. என்.ஏ.ஏ. புஸ்பகுமார

தற்போது கிழக்கு மாகாணப் பாடசாலைகளிலிருந்து ஆசிரியர் சமன்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடன் செய்யப்பட்டு வருகின்ற ஆசிரியர்களது இடமாற்றம் முறையற்ற விதத்தில் நடைபெற்றுள்ளது என்று பரவலாக ஆர்ப்பாட்டங்களும், கோசங்களும் எழுப்பட்டுவரும் நிலையில் உரிய ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அவர்கள் மேன்முறையீடு செய்திருப்பார்களாயின் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.


குறிப்பாக தூரப்பிரதேசங்களுக்கு பெண் ஆசிரியைகள் இடமாற்றம் பெற்றுள்ளனர். இவர்களது இடமாற்றம் சம்பந்தமாக உரிய பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும், இவ்வாறு அதிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள பெண் ஆசிரியைகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளானவர்கள் என்பதால் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் அதேவேளை திருமணமாகாத ஆசிரியைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த இடமாற்றதிற்கு உட்படுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சகல ஆசிரியர் தொழில் சங்கங்களையும் எதிர்வரும் 22ஆந்திகதி சந்திக்கவிருப்பதாகவும் தெரியவருகிறது.

Monday, December 19, 2011

Community Policing வேலைத்திட்டம் அங்குரார்ப்பனம்.


GAFSO நிறுவனத்தின் ஏற்பாட்டில்Asia Foundation  இன் அனுசரனையில் 2011.12.16ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்தில் முதன்முறையாக Community Policing வேலைத்திட்டம் ஆரம்பமானது.

இந் நிகழ்வின் ஆரம்ப கட்டமாக சம்மாந்துறை மலையடிக்கிரமம் - 01 இல் உள்ள பொது மக்களையும் மற்றும் கிராம நிலாதாரி, சமுரத்தி உத்தியோகத்தர் போன்றேரின் உதவியுடன் சமூக பொலிஸ் சேவை எனும் இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்பக் கூட்டம் இடம் பெற்றது.

மேலும் இந்நிகழ்வு ,
GAFSO நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் A.J.Kamil Imthath அவர்களின் தலைமையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் அதிதிகளாக,
GAFSO நிறுவன பணிப்பாளர் :  Al- Haj  I.Abdul Jabbar
சம்மாந்துறை பிரதேச செயலாளர் : A. Mansoor
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி : Mr.Jayantha Thahanaka

GAFSO நிறுவன திட்டப் பணிப்பாளர் : A.J.Kamil Imthath
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.















மேலும் இவ்வேலைத்திட்டம் நிந்தவூர், காரைதீவு போன்ற பிரதேசங்களிலும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.



இவ் வேலைத்திட்டத்தில் இனைந்து செயற்படும் சம்மாந்துறை மக்கள் குழுவும், திட்டப் பணிப்பாளரையும்படத்தில் காணலாம்.


Saturday, December 17, 2011

இரத்த தான நிகழ்வு




இன்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவின் ஏற்பாட்டின் கீழ் இரத்த தான நிகழ்வு சம்மாந்துறை அப்துல் மஜீPட் மண்டபத்தில் இடம் பெற்றது.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சை நிலையத்தை ஆரம்பிக்கும் பொருட்டு அதற்கு தேவையான இரத்தங்களை பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நிகழ்வாக இது இடம் பெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பலரும் இரத்த தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்நிகழ்வில்
Dr. KKS.  பெரேரா (இரத்த வங்கி பொறுப்பதிபாரி) 
Dr. இப்றாலெப்பை (மாகாண சுகாதார பணிப்பாளர்)
Dr இஸ்ஸடீன் (MS)   

AMM. நௌஷாத் (பிரதேச சபை தவிசாளர்ää சம்மாந்துறை.)

ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.  

Friday, December 16, 2011

300 கோடி ரூபா செலவில் மலர்ந்தது தாமரைத் தடாகம்!





சீன அரசின் உதவியுடன் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நெலும் பொகுன எனும் தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கு நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. சீனாவின் பிரதிப் பிரதமர் தலைமையிலான சீனத் தூதுக் குழுவொன்றும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டது.

இலங்கையில் இவ்வாறானதொரு கலையரங்கம் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். 3.08பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கலையரங்கு சகல வசதிகளும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணப்பணிக்கு சீன அரசாங்கத்தினால் 2430 மில்லியன் ரூபாவும் ஏனைய நிதி நிறுவனங்கள் மூலம் 650 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் அண்டு இக்கட்டிடம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அதே வருடம் நவம்பர் மாதம் 11ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஜுலை மாதம் இதன் வேலைகள் யாவும் பூர்த்தியடைந்த நிலையில் நேற்று ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இங்கு உரை நிகழ்த்திய ஜனாதிபதி இலங்கை மக்களின் கண்ணீர் யுகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிபிட்டார்.

GCE (A/L) பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் இழுபறி!

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படுவதில் இழுபறிநிலை காணப்படுகிறது. இது தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க ஆகியோர் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளனர்


நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 19ம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க இன்று காலை பாராளுமன்றில் அறிவித்தார்.

எனினும் அப்பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிட முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். அவற்றை வெளியிடுவதற்கு மேலும் ஒரு வாரம் காலம் எடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டள்ளார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க இன்று காலை பாராளுமன்றில் தெரிவித்ததைத் தொடர்ந்தே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க மாற்று கருத்தை வெளியிட்டுள்ளார்.

Thursday, December 15, 2011

சட்டத்தரணியாக சத்தியபிரமாணம்...



சம்மாந்துறை மண் ஈன்றெடுத்த இன்னுமொரு சட்டத்தரணி எம். பீ. முஹம்மது பௌசான் இன்று (14. 12. 2001)  நண்பகல் 12.15 மணியளவில் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court of Sri Lanka) நீதியரசர் காமினி அமரதுங்க தலைமையிலான மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாத்தின் முன்னிலையில்  சத்தியப்பிரமாணம் செய்து இம்மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவர் தனது ஆரம்ப கல்வி, இடைநிலை கல்வி, உயர்தர கல்வி ஆகியவற்றை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்திலே  கற்று 2004 ல் யாழ். பல்கலைகழகத்தின் சட்ட பீடத்திற்கு  தெரிவானார். பின்னர் கொழும்பு பல்கலைகழகத்தின் சட்ட பீடத்திற்கு மாற்றம் பெற்று 2010 ல் சட்டமாணி (LL.B) பட்டத்தினை பெற்றுக்கொண்டார். மேலும் அதே வருடம் சட்ட கல்லூரியின் இறுதி பரீட்சையில் சித்தி பெற்றார். 

இவர் 2004 ல் நடைபெற்ற வடக்கு கிழக்கில் ஆயிரம் ஆசிரியர்கள் நியமனதிட்கான போட்டி பரீட்சையில் சித்தியெய்து சம்மாந்துறை சென்னல் சாஹிரா வித்தியாலயத்தில் நிரந்தர ஆசிரியராக மூன்று மாதங்கள் பணிபுரிந்த வேளையில் சட்ட பீடத்திற்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Wednesday, December 7, 2011

ஆசிரியர் இடமாற்றம் ரத்துச் செய்யக் கோரி ஆர்பாட்டம்




ஏற்கனவே சம்மாந்துறை வலையத்தில் ஆசிரியர்கள் வேறு வலயங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த சம்பவம் இடைநிறுத்தப்பட்டு தற்போது அது மீண்டும் உருவெடுத்துள்ளது.

 43 ஆசிரியர்களும் இதில் அதிகமான ஆசிரியர்கள் பெண்கள் என்பதால், அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்க்கு முன்னால் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Friday, December 2, 2011

சம்மாந்துறை மண்ணின் தகவல் தொழிநுட்ப அறிவானது தற்பொழுது பண்டாரணாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில்

 தற்பொழுது பண்டாரணாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் எமது சம்மாந்துறை CSS குழுவினர் தமது தகவல் தொழிநுட்ப வல்லமையினை உலக அரங்கில் அரங்கேற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமே
                                                                       

Tuesday, November 29, 2011

மண்ணின் மைந்தன் பிரிந்தார்

சம்மாந்துறையில் நீண்ட நாட்கள் அரசியல் வாதியாக இருந்து தற்போது அரசியல் ஒய்வு பெற்றிருக்கும்.

முன்னால் அமைச்சர் பாரளுமன்ற உறுப்பினருமான

 M.A.அப்துல் மஜீட் அவர்கள்

இன்று காலமானார்.

இன்னாலில்லாகி வைஇன்னா இலைகி ராஜிஊன்.                                           

Monday, November 28, 2011

BMICH இல் இடம் பெறும் ICT கண்காட்சியின் நேரடி ஓளி,ஒலி பரப்பு சேவை

கொழும்பு BMICH  இல் நாடளாவிய ரீதியில்DECEMBER  2,3,4,5 ம் திகதிகளில் இடம் பெற இருக்கும் ICT கண்காட்ச்சியின் பல தரப்பட்ட பாடசாலைகள்,பல்கலை கழகங்கள் மற்றும் பல்வேறு பட்ட கல்வி நிறுவனங்களும் பங்கு பற்றும் அதே வேளையில் கிழக்கு மாகாணத்தில் சம்மந்துறையை பிரதி நிதித்துவப் படுத்தி சம்மந்துறை முஸ்லிம்மத்திய மகா வித்தியலையம்(தேசிய பாடசாலை) பங்கு பற்றுகின்றது.

இந்த கண்காட்ச்சியின் நேரடி ஓளி,ஒலி பரப்பு சேவைகள் உடனுக்குடன்  சம்மந்துறை முஸ்லிம்மத்திய மகா வித்தியலையம்(தேசிய பாடசாலை) அங்கத்தவர்கள் வழங்க இருக்கின்றனர்.

இதனை    www.smmmmvns.sch.lk
                     www.sammanthurai.tk 

ஆகிய இரண்டு இனணய தளங்களில் கானலாம்.                   

Sunday, November 27, 2011

EDC யின் O/L தின விழா




இன்ரு சம்மாந்துறை  EDC கல்வி நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டு O/L தின விழா நிகழ்ச்சி சது/அல்மர்ஜான் மக்ளிர் கல்லுரியில் இடம் பெற்றது.இதில் பிரதம அதிதியாக சட்டத்தரனி M.B.FOWZAN கலந்து கொண்டார்.மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்களும் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறையில் நடமாடும் சேவை





சம்மாந்துறை பொலிஸ் நிலையதினால் 2011/11/26 ம் திகதி சனிக்கிழமை சது/ அல் மர்ஜான் மகளிர் வித்தியாலயத்தில் நடமாடும் சேவை இடம் பெற்றது.
                                                                       
இந்தநிகழ்வில் அத்திகளாக

பொலிஸ் உயர் அதிகாரிகள்.


பொலிஸ் சம்மாந்துறை பொறுப்ப்திகாரி.

பிரதேச சபை தவிசாளர்  A.M.M.NOESHAD

உதவி தவிசாளர்                A.KALILUL RAHMAN

பிரதம ந்ம்பிக்கையாளர்  AL-HAJ  I.ABDHUL JABBAR

பாடசாலை அதிபர்கள்

மதகுருமார்கள்     போன்றோரும் கலந்து கொன்டனர்.

இதன் போது

மேடை நிகழ்ச்சி

சம்மாந்துறை வைத்திய சாலையினால் வைத்திய பரிசோதனை இடம் பெற்றது.

அடையாள அட்டை,சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் சம்மாந்துறை பிரதேச சபையினால் இடம் பெற்றது

சம்மந்துறை மத்தியஸ்தர் குழாவின் செயற்பாடுகள்.

இளைஞர்களுக்கான கரப்பந்தாட போட்டி



போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்நிகழ்வு காலை 8.00 முதல் பி.ப 3.00 மணிவரையும் இடம் பெற்றது.

Sunday, November 20, 2011

கல்முனை – அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் ஒருவர் பலி




கல்முனைஅக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

டிப்பர் வாகனத்தில் பயணித்தவரான சம்மாந்துறையைச் சேர்ந்த அர்ஸாத் என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.
சம்மாந்துறையிலிருந்து கல்முனை நோக்கி கல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் வாகனத்தின் அடிச்சட்ட டயர் ரொட் உடைந்ததன் காரணமாக வழுக்கிச் சென்ற வாகனம் எதிரே வந்த லொறியுடன் மோதுண்டே இந்த விபத்து சம்பவித்தது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து கல்முனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






Thursday, November 17, 2011

1000 மர கன்றுகள் நடுகைத்திட்டம்




சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில்,இலங்கைத் திரு நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தெயட்ட செவன(நாம் பயிரிடுவோம் நாட்டை கட்டியெழுப்புவோம்) எனும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் 2011/11/17 ம் திகதி 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சம்மாந்துறை மஹல்லா முஅல்லா (மைய்யவாடி பள்ளி) யில் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் அதிதிகளாக,
            
    அல்ஹஜ்: A.M.M.NOWSHAD(தவிசாளர்,பிரதேச சபை,சம்மாந்துறை)
     ஜனாப்    : K.KALILUL RAHMAAN(உதவி தவிசாளர்,பிரதேச சபை, சம்மாந்துறை)
                       M. LASITH GAMAGA (மாவட்ட வனவல அதிகாரி)
                       M.A.JAYAA(வட்டார வனவல அதிகாரி)
  அல்ஹஜ் :I.ABDUL JABBARபிரதம நம்பிக்கையாளர் சபை சம்மாந்துறை)


ஆகியோரும் கலந்து கொன்டனர்.                                                          

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்ட மீறல் எட்டு மாதத்தில் 45 இலட்சம் ரூபா அறவீடு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து கடந்த எட்டு மாதங்களில் போக்குவரத்துச் சட்டங்களை மீறியோரிடமிருந்து 45 இலட்சம் ரூபா அதே இடத்தில் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரைக்குமான தண்டப்பணமாகவே இத்தொகை பெறப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹநக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் நடைபெற்ற வீதி விபத்துக்களை குறைப்பதற்காக அம்பாறை மாவட்ட பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சர் பிரேமலால் ரணகலவின் உத்தரவின் பேரில் வாகன போக்குவரத்து பொலிஸார் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இத்தொகை தண்டப்பணமாகப் பெறப்பட்டுள்ளதுடன் வீதி விபத்துகளும் ஓரளவு குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர் இப்பிரதேசத்தில் தற்போது தலைக்கவசம் அணிவதும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டம்

இவ்வருடம் சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு புதிதாக அனுமதி பெற்ற மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்னிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம்
வகுப்பு தடையை விதித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்குமாறும் கோரியும் இன்று நண்பகல் சம்மாந்துறையிலுள்ள வளாகத்திற்கு முன்பாக மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பல்கலைக்கழக மாணவர்களும் மாணவிகளும் பாதையோரத்தில் பதாதைகளை ஏந்திய வண்ணம் கோசம் எழுப்பியதோடு ஏனைய பீட மாணவர்களையும் தம்மிடம் இணைந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தனர்.--



எச்சரிக்கை - உங்கள் பேஸ்புக்கை கண்காணிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேலிய அரசுக்கு எதிரான சர்வதேச ஆர்வலர்களின் நடவடிக்கைகள் பெருகி வருகின்றன. இஸ்ரேலிய அரசு அவர்களை நாட்டிற்குள் வர விடாது தடுத்து வருகின்றது. பாலஸ்தீன ஆதரவாளர்களை இனங் காண்பதற்காக, முகப்புத்தகம் (Facebook) போன்ற சமூக வலைப் பின்னல்களை பயன்படுத்தி வருகின்றது. முகநூலில், இஸ்ரேலிய அரச உளவாளிகள் போலி அடையாளத்துடன் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போன்று உலா வருகின்றனர்.

சர்வதேச மட்டத்தில் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான நபர்களை இனங்காண்பதும், விபரங்களை தொகுப்பதும் அவர்களது வேலை. அண்மையில் பாலஸ்தீன பிரதேசத்தில் இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு, முகநூலில் குழுமங்கள் உருவாக்கப்பட்டன. பல உலகநாடுகளில் இருந்து, பல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தனர். அவர்களது பெயர் விபரங்கள் யாவும் இஸ்ரேலிய அரசின் வசம் சென்றுள்ளன. ஏற்கனவே இஸ்ரேலிய அரசிடம் உள்ள, “விரும்பத் தகாத நபர்களின்” பட்டியலில் அந்த விபரங்கள் சேர்க்கப்பட்டன. இவ்வாறு 300 க்கும் அதிகமான சர்வதேச ஆர்வலர்களின் பெயர்கள், “கறுப்புப் பட்டியலில்” உள்ளன.

சமீபத்தில் இந்தப் பட்டியலில் உள்ள 65 நபர்கள் டெல் அவிவ் விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது, திருப்பி அனுப்பப்பட்டனர். பிற “சந்தேக நபர்கள்” பற்றிய விபரங்கள், இஸ்ரேலுக்கு வரும் விமான நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. அந்த நபர்களை கொண்டு வரும் விமானங்களுக்கு தண்டப் பணம் அறவிடப்படும் என எச்சரிக்கப் பட்டுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில், இஸ்ரேலுக்கு செல்லவிருந்த பயணிகள் பலர் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளனர். இஸ்ரேலிய அரசின் வற்புறுத்தல் காரணமாகவே, தாம் அந்த நடவடிக்கை எடுத்தாக விமான நிறுவன முகாமையாளர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேலிய அரசின் கடும்போக்குக் காரணமாக, மேற்கத்திய நாடுகளில் அதிருப்தியாளர்கள் பெருகி வருகின்றனர். சர்வதேச மட்டத்தில் இஸ்ரேலிய உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டம் நடந்து வருகின்றது. இதனால் கலக்கமடைந்த இஸ்ரேலிய அரசு, “பகிஸ்கரிப்பு எதிர்ப்பு சட்டத்தை” கொண்டுவந்துள்ளது. இஸ்ரேலிய இடதுசாரிகளால் “பாசிசமயமாக்கல்” என்று விமர்சிக்கப்பட்ட சட்டம், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் (கினேசெட்), பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் பிரகாரம், பகிஷ்கரிப்பால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலிய நிறுவனம் நஷ்டஈடு கோரலாம். வெளிநாடுகளில் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் அமைப்பிடமோ, அல்லது தனிநபரிடமோ நஷ்டஈட்டை அறவிடலாம். இஸ்ரேலின் பாசிச சட்டத்திற்கு, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. ஜனநாயக உலகில், அடிப்படை கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் என்று விமர்சித்துள்ளன.

உலக பிரச்சினைகளுக்கு குர்ஆன் போதனைகள் தகுந்த தீர்வாகும் - பேராசிரியர் பீரிஸ்

இலங்கையில் பெரும்பான்மை பெளத்த மக்களுடனும், இந்துக்களுடனும் முஸ்லிம்கள் சமாதானமாகவும் நல்லெண்ணத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். மகத்தான மத சகிப்புத்தன்மையுடனும், தமக்குள்ளான நல்லெண்ணத்துடனும் இங்கு மக்கள் சமூகம் வாழக் கிடைத்தமை பாக்கியமாகும். பிரதமர் தி. மு. ஜயரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

உலக முஸ்லிம் காங்கிரஸ¤ம், ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையமும் ஏற்பாடு செய்த சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் இவ்வாறு கூறினார். பிரதமர் தொடர்ந்து பேசுகையில்:-

முஸ்லிம்கள் இலங்கையில் குறிப்பிடத்தக்க நிலையில் உள்ளனர். நாட்டில் குடியேற்றங்களை உருவாக்கிய அரபு வர்த்தகர்களுக்கு பெளத்த மன்னர்கள் காணிகளையும் புகலிடங்களையும் வழங்கியமை வரலாற்றுப் பதிவாகும். 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் முஸ் லிம்கள் போர்த்துகீசராலும், ஒல்லாந்தர் களாலும் பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்பட்ட போது மலையகத்தின் பெளத்த மன்னர்கள் முஸ்லிம்களுக்கு குடியிருப்புக்களையும், வசதிகளையும் வழங்கினர்.

நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதிலும் முஸ்லிம் தலைவர்கள் மகத்தான பங்காற்றியுள்ளனர். கலாநிதி ரி.பீ. ஜாயா, சேர் ராசீக் பரீத், ஏ. அஸஸ் போன்ற அரசியல் தலைவர்களின் பணிகள் மகத்தானவை.

சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு முஸ்லிம்கள் அரசாங்கங்களில் அமைச்சர்களாகப் பதவி வகித்துள்ளனர். முஸ்லிம் அமைச்சர்கள் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை நல்கியுள்ளனர். முப்பது வருட பயங்கரவாத யுத்தம் முடிவடைந்து இலங்கை அமைதியும், சமாதானமும் கண்டுள்ள ஒரு நிலையில் இம் மாநாடு இலங்கையில் நடப்பது பாராட்டத்தக்கதாகும். இம்மாநாடு சகல வழிகளிலும் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் பிரதமர் குறிப் பிட்டார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தமது உரையில், இஸ்லாத்தின் உயரிய தத்துவங்கள் முழு உலகுக்கும் மகத்தான உதாரணங்களாகும். இன்று உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு குர்ஆன் போதனைகள் தகுந்த தீர்வாகும் என்றார்.

உலக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் செனட்டர் ராஜா முஹம்மத் ஸபருள்ஹக், சூடானின் முன்னாள் ஜனாதிபதி பீல்ட் மார்ஷல் அப்துல் ரஹ்மான் ஸொஸார் அல் டஹாப், உலக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கலாநிதி அப்துல்லா பின் உமர் நப் ஆகியோரும் உரையாற்றினர்.
sources- yarlmuslim

Wednesday, November 16, 2011

தேசிய ரீதியில் இடம்பெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலையை சோ்ந்த இரு மாணவா்கள் தெரிவு.


எமது பாடசாலை மாணவிகளான  தரம் 7 ஆங்கில பிரிவில் கல்வி கற்கும் எஸ். நஜா சிமாறாஹ், எம்.பாதிமா ஸஸ்னா ஆகிய மாணவிகள் (ஆங்கில மொழி மூலம் தேசியரீதியல் இடம்பெற்ற) சமூக விஞ்ஞஞான போட்டியில் பங்கு பற்றி 3ம், 4ம் இடம்களை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளனா் இவா்களை எமது பாடசாலை சமூகம் பாராட்டி கொளரவிக்கின்றது.

Sunday, November 13, 2011

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் ஓர் பாரிய ஊரவலம்





 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இன்று சம்மாந்துறையில் ஓர் பாரிய நிகழ்ச்சியும் ஊரவலமும் இடம் பெற்றது.
இந் நிகழ்வு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபம் வரையில் ஊரவலமாக வைத்திய அதிகாரிகள்ää தாதிமார்கள் மற்றும் ஏனைய அதிதகள் ஆகியோரும்ää பொது மக்களும் கலந்து கெண்ட வண்ணம் இடம் பெற்றது.
மேலும் நிகழ்வில் வைத்திய பரிசோதனைகள் உடனுககுடன் இடம் பெற்ற அதே வேளைää நீரிழிவு நோய்க்கான காரணிகள் மற்றும் அதனைத்தடுக்கும் வழிகளும் காணிபிக்கப்பட்டன.
அத்துடன் நீரிழிவு நோய் சம்பந்தமான நூல் ஒன்றும் Dr.M.M.Nowsath அவர்களினால் வெளியிடப்பட்டது. மேலும் இந் நிகழ்வுக்கு

Dr.A.Issadeen
Dr.P.K.Sivakumar  (பொது வைத்திய நிபுணர்)  
A.A.Bawa (மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்) 
I.A.ஜப்பார் (பிரதம நம்பிக்கையாளர் - நம்பிக்கையாளர் சபை சம்மாந்துறை)
Dr.M.M.நௌஷாத்
D.M.J.K.தகநாயக்கா (சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி)
அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.