Wednesday, June 15, 2011

கிரகணத் தொழுகை ஹிஜ்றா ஜும்மாப்பள்ளிவாயலில் இன்று

இன்று கிரகணத் தொழுகை இரவு 10:55 மணியளவில் சம்மாந்துறை ஹிஜ்றா ஜும்மாப்பள்ளிவாயலில் நடைபெற்றது.இத் தொழுகையை நிறைவேற்றுவ்தற்காக பெருமளவிலான மக்கள் கூடியதும் குறுப்பிடத்தக்கதாகும்.
 


நேற்று இர‌த்தான‌ இட‌மாற்ற கானொளிப் ப‌திவு


நேற்று தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டதாக PDE எம்.டீ.எம்நிஸாம் மற்றும் ZDE எம்.ஐ.எம்.மன்ஸூர் ஆகியோர்களால் கூறப்பட்ட வீடியோ உங்களுக்காக இங்கே

Tuesday, June 14, 2011

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஆசிரிய இடமாற்றம் தொடர்பான கலந்துரையாடல்



நியாயமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட சம்மாந்துறை வலய ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக சம்மந்துறை வலய பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடல் இன்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதற்கு கிழக்கு மாகண கல்விப்பணிப்பாளர் எம்.டீ.எம்.நிசாம்,சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.எம்.மன்ஸூர்,கிழக்கு மாகண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் (டி.ஏ) மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.நௌஸாத் ஆகிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.வருட நடுப்பகுதியில் இடமாற்றம் செய்யப்படதனால் பாடசாலை மணவர்கள் பெரிதும் பாதிக்கபடுள்ளதாக அதிபர்கள் முறையிட்டனர் மேலும் 2008 ம் ஆண்டு சம்மாந்துறை வலயதில் நிலவிய ஆசிரியர் பற்ராக்குறையை தீர்பதற்க்காக கல்முனை வலய அசிரியர்கள் இங்கு குறுப்பிடத்தக்கது.இஙு அப்படி வந்தவர்களை மீள அவர்களின் சொந்த வலயங்களுக்கு எடுத்து சம்மாந்துறைக்குள் சம்மாந்துறை  வலய ஆசிரியர்களை இடமாற்றம் மேற்கொள்ளுமாறும் இங்கு கோரிக்கை அதிபர்களாலும்,அரசியர் பிரமுகர்களாலும் முன்வைகப்பட்டது.
இது தொடர்பக மாகண கல்விப்பணிப்பாளர் கூறுகையில் அடுத்த வருடம் சம்மாந்துறை வலயத்தில் காணப்படும் வெளிவலய ஆசிரியர்களை சொந்த வலயங்களுகு மீளெடுப்பதாக வாக்குற்தியளித்தார்.
இறுதியாக பல மணிநே கலந்துரையாடலின் பின்பு ஆசிரிய இடமாற்றமானது தற்காலிகமக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியில் கூடி நின்ற அசிரியர்களிடம் தெரிவித்தார்.

Monday, June 13, 2011

பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செண்றிருந்தும் மாணவர்கள் செல்லாத நிலை

பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செண்றிருந்தும் மாணாவர்கள் பாடசலையை புறக்கணிதுள்ளனர்.இதற்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிபாளரினல் மேற்க்கொள்ளபட்ட நியாயம் இல்லத ஆசிரிய இடமாற்ரமே காரணமகும்.மேலும் வகுப்புக்கள் அனைத்தும் மணவர்கள் இண்றி வெறிச்சோடிக்கிடந்தன.இது    டொடர்பான ஆர்பாட்டம் மானவர்களினால் நேற்று திங்கட் கிளமை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமணையின் முன்னால் இடம்பெற்றதும் குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.


டயலொக், மொபிடல் வலையமைப்பினூடாக எமது இணையத்தள செய்திகளை தற்பொழுது இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

டயலொக், மொபிடல் வலையமைப்பினூடாக எமது இணையத்தள செய்திகளை தற்பொழுது இலவசமாக உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ள "FOLLOW<SPACE>SAMMANTHURAITK என டைப் செய்து 40404 இற்கு SMS செய்யுங்கள்
               

Sunday, June 12, 2011

சம்மாந்துறை வலய ஆசிரியர்களின் இடமாற்றாத்திற்கு பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.






13.06.2011 ஆகிய இன்று சம்மாந்துறை வலய மாணவர்கள் ஆசிரியர்களின் திடீர் இடமாற்றத்தைக் கண்டித்து வலயக் கல்வி வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.  மேலும் இதில் வலயக் கல்விப் பணிப்பாளாருக்கு எதிரான பதாதைகளுடன் மாணவர்கள் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிசார் கடமையில் ஈடுபட்டனர்.

சம்மாந்துறை வலய ஆசிரியர்கள் மேம்பாட்டுக் கழகத்தினால் 14.06.2011 செவ்வாய்க் கிழமை காலை 08.00 மணிக்கு அனைவரையும் ஹிஜ்றா சந்தியில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை வலய ஆசிரியர்கள் மேம்பாட்டுக் கழகத்தினால்  14.06.2011 செவ்வாய்க் கிழமை காலை 08.00 மணிக்கு அனைவரையும் ஹிஜ்றா சந்தியில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Thursday, June 9, 2011

மாபெறும் உதைப்பந்தாட்ட போட்டி

சம்மாந்துறை MUFO விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சினேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி.

                                   MUFO S.C   VS     REMAINDERS S.C

2011/06/10 ம் திகதி (வெள்ளிக்கிழமை)

நேரம்:   பிற்ப்பகல் 04.00 மணிக்கு

இடம்:  சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில்

சம்மந்துறை வலயத்திற்குள் ஆசிரியர் இடமாற்றம்

தற்போது சம்மாந்துறை பிரதேச பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் இடமாற்றம் காரணமாக ஆசிரியர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும், இன்னல்களுக்கும் உள்ளாகியுள்ளனர். இது மட்டுமல்லாது ஆசிரியர்களை மிகவும் தூர பிரதேசங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ்வறான இடமாற்றம் காரணமாக தற்போது கல்வி பயின்றுவறும் கல்வி பொதுத்தராதர சதரணதர(O/L), உயர்தர(A/L), புலைமைப்பரிசில்(SCHORLARSHIP) மாணவகளுக்கான பாடப்பரப்பும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்,மற்றும் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Wednesday, June 8, 2011

மாவட்ட மட்டத்திலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி



சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 2011 ஆம் ஆண்டிற்கான மாவட்ட மட்டத்திலான மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டி இம் மாதம் 07,08,09 ஆகிய தின்ங்களில் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, இந் நிகழ்வில்,
சம்மாந்துறை
கல்முனை
அக்கரைப்பற்று
திருக்கோவில்


ஆகிய வலய பாடசாலைகளில் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு மாவட்ட ரீதியிலான போட்டி இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதன் இறுதி நாள் நிகழ்வுகள் 09ம் திகதி இடம் பெறவுள்ளது. இதில் பரிசில்கல்,சான்றிதல்களும் வழங்கப்படவுள்ளது   

Saturday, June 4, 2011

பாடசாலை மட்ட மென்பொருள் ஆக்கப்போட்டி

MORATTUWA பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட மென் பொருள் ஆக்கப் போட்டி அன்மையில்  MORATTUWA பல்கலைக்க்ழ்க்திலேயே இடம் பெற்றது.
இதில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலையம்,தேசிய பாடசாலையிலிருந்து 04 மணவிகள் தெரிவு செய்யப்பட்டு, இப்போட்டியில் பங்கு பற்றி, சன்றிதலும் பெற்றுக் கெண்ட்ன்ர்.

இதில் பங்கு பற்றிய மாணவிகல்

MOHAMED ISMAIL ASMIYA
ASNAR FATHIMA RAKSHANA
YOSUF LEBBE MAFAHIRA BANU
ABDDUL MAJEED FATHIMA SAHANA                                             

Wednesday, May 25, 2011

மாபெரும் இஜ்திமா நேரடி ஒலிபரப்பு

அறிவியல் உலகைச் சூழ்ந்திருக்கும் அறியாமை இருள்,
எதிர் வரும் 27 ஆம் திகதி பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணி வரை
சம்மாந்துறை ஹிஜ்ரா ஜுமுஆ பள்ளிவாயலில்(மஸ்ஜிதுல் பத்ர்)
நடக்கவிருப்பதால் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த நிகள்வானது இன்ஸாஅல்லஹ் எமது இனணயத்தலதில் நேரடி ஒளிப்பரப்பு செய்யபடவுள்ளது.

Sunday, May 22, 2011

மாபெரும் இஜ்திமா

அறிவியல் உலகைச் சூழ்ந்திருக்கும் அறியாமை இருள்,
எதிர் வரும் 27 ஆம் திகதி பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணி வரை
சம்மாந்துறை ஹிஜ்ரா ஜுமுஆ பள்ளிவாயலில்(மஸ்ஜிதுல் பத்ர்)
நடக்கவிருப்பதால் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இதன் ஒலிப்பதிவு அன்றிரவு 9.30 மணியலவில் எமது இணையத்தளத்தில் கேற்கலாம்.

எமது இணையத்தலத்தில் வெளிவரும் செய்திகள் தாமதமாகுவதர்கான காரணங்கள்

எமது இணையத்தலத்தில் பணிபுரியும் அனைவரும் கல்வி பொதுத்தராதரத் உயர்தர பரிட்சையில் தோற்ற இருப்பதால் செய்திகள் தாமதமாகின்றன இனி வரும் காலங்களில் விரைவாக கிடைக்கும்.

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதாரவைத்தியசாலைக்கு வைத்தியர்கள் நியமணம்

சம்மாந்துரை ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்தியின் மற்றுமோர் மயிற்கல்லாக புதிய 4 வைத்தியர்கள் நியமனம் பெற்றுள்ளனர். இவ்வாறு நியமனம் பெற்றுள்ள வைத்தியர்கள் மயக்கமருந்து நிபுன்ர்கலாக 6 மாத கால பயிற்சியினை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு,கண்டி வைத்தியசாலைகலுக்கு அனுப்ப இருப்பதாக வைத்தியசாலை பொருப்பதிகாரி DR.ISSADEEN  தெரிவித்துள்ளார்.
 
மேலும் கண், தோல் மற்றும் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் விரைவில் இவ் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்    

Monday, May 9, 2011

சம்மாந்துரை இளைஞர் கலகங்களுக்கிடையிலான விலையாட்டுப் போட்டி



08/05/2011 அன்று சம்மாந்துரை தேசிய பாடசாலையில் கழகங்களுக்கிடைலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது  இப்பேட்டியானது சம்மாந்துரை பிரதேச சம்மேளனத்தின் அனுசரனையுடன் இறுதி நாள் போட்டிகள் நடைபெற்றது.
இப் போட்டியானது  faisal ameen (yso, jp all island)  m.u.m.assrudeen ( சம்மாந்துரை பிரதேச சம்மேளனத்தின் தலைவர்)ஆகியோரின் அனுசரனயுடன் நடை பெற்றது



பிரதம அதிதி:

  மன்சூர்  (DS)

கெளரவ அதிதிகள்:

மாவட்ட இ.சே.அதி.  ஈஸ்வர ராஜா
S.H.M.FOWSY           (MOWFI TECH)
MOHAMED BAZEER (NSB MANAGER)
M.F.A.RAHEEM           ( பதவி நிலை உத்தியேகத்தர் )
S.L.SABURTHEEN      (  விளையட்டு அதிகாரி)
M.KAALITH                 ( சம்மாந்துரை இளைஜர் கழக பாராளூமன்ற உருப்பின்ர்)  



Thursday, May 5, 2011

நடமாடும் இலவச மலேரியா பரிசோதனை

மலேரியாவை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கமைய சுகாதார அமைச்சின் முழு அனுசரனையுடன் டெடா(tedha) நிருவனத்தின் குலுவினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (நாளை) இரத்த பரிசோதனை நடத்தபடவுள்ளது

இடம் : கிராம உத்தியோகத்தர் காரியாலயம் சம்மாந்துறை

திகதி  :2011/05/06

நேரம் :மு.ப 9.00 தொடக்கம் பி.ப 4.00 வரை



Wednesday, April 27, 2011

எமது மண்ணின் சாதனயாலர்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹாவித்தியாலய தகவல்  தொடர்பாடல் தொழிநுட்ப பாட ஆசிரியர் M.B. ஹசீன் (CLC in Tr.) MICROSOFT நிறுவனத்தின் PARTNERS LEARNING PROGRAM க்காக தெரிவு செய்யபட்டுள்ளார்.உலகளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 500க்கும் குரைவான ஆசிரியர்களில் ஒருவராக எமது ஊரைச் சேர்ந்த ஆசிரியர் தெரிவு செய்யபட்டுள்ளார்   . இதன் மூலம் MICROSOFT  நிறுவனத்தின் ஊடாக ONLINE  மூலம் 21ம் நூற்றாண்டுக்கான மாண்வர் சமூகத்தை பயிற்றுவித்தல்  எவ்வாறு MICROSOFT கருவிகளை (TOOLS)  கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் பயன்படுத்தல் போன்ற பயிற்ச்சிகள் ONLINE மூலமாக குறிப்பிட்ட ஆசிரியருக்கு வழக்கபடவுள்ளது.

Tuesday, April 26, 2011

2010/2011 மகாபோகத்தில் ஏற்பட்ட அதிக மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக முற்றாக பாதிக்கப்பட்ட நெற் காணிகளுக்கு இலவச விதை நெல் வழங்கும் வைபவம்



கடந்த காலதில் ஏற்பட்ட வெள்ளதினல் பாதிக்கப்பட்ட விவசயிகலுக்கு  விவசாய அமைச்சினல் விதை நெல்கல் இலவசமாக வழங்கும் வைபவம் 25/04/2011 அன்று  அல் -ஹஜ் S.A.B.மெளலனா (சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியேகத்தர்) அவர்கலின் தலைமையில் நடை பெற்றது 

பிரதம அதிதி
கெளரவ அமைச்சர்  T.நவரெட்ணராஜ
(விவசாயம்,கால்நடை,மீன்பில்டி,சிறு கைத்தெழில் அமைச்சு )

விசேட அதிதி
திரு சுனில் கன்னங்கர
(மாவட்ட செயலாளர் அம்பாரறை)

கெளரவ அதிதிகல்

கெளரவ  M.L.A.அமீர் (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)

  கெளரவ அல்-ஹாஜ். A.M.M. நெளஷட்
   (தவிசாளர், பிரதேச சபை சம்மாந்துறை)


Thursday, April 21, 2011

விளையாட்டு வீரர்களுக்கானமருத்துவ சிகிச்சைப் பிரிவினை ஆரம்பிக்க விளையாட்டு அமைச்சு நடவடிக்கை

மே மாதம் முதல் வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் 25 மாவட்டங்களிலுள்ள பிரதானமான வைத்தியசாலைகளில் விளையாட்டு வீரர்களுக்கானமருத்துவ சிகிச்சைப் பிரிவினை ஆரம்பிக்க விளையாட்டு அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது.
சுகாதார அமைச்சும் விளையாட்டு அமைச்சும் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள விளையாட்டு வீரர்கள் தமக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் ஆலோசனைகளையும் விபத்துகள் ஏற்படும்போது சிகிச்சை பெறுவதற்கும் வசதியாக மாவட்டத்தின் ஒரு வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டு அங்கு இதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ள விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவு மூலம் விளையாட்டு வீரர்கள் தமக்குத் தேவையான உடற் தகுதியைத் தீர்மானிப்பதுடன், வைத்திய சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது ஊக்கமருந்து மற்றும் உற்சாகபானம் போன்றவற்றின் பாவனையையும் இந்த மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை மூலம் கண்டறிந்து கொள்ள முடியுமென அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Monday, April 11, 2011

சகல மாவட்டங்களிலும் அருங்காட்சியகங்கள் நிறுவ நடவடிக்கை!

நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் நாட்டின் சகல மாவட்டங்களிலும் அருங்காட்சியகங்கள் நிறுவப்பட உள்ளதாக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் டொக்டர் ஜகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல மாவட்டங்களிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவூம்
போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பின்னர் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பல்வேறு தொல்பொருட்கள் இந்த அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவூம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கையடக்கத் தொலைபேசிகள் மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெற ஏற்பாடு!

கையடக்கத் தொலைபேசிகள் மூலம் விபரங்களை பெற்று பிறப்பு இறப்பு மற்றும் விவாகப் பதிவு சான்றிதழ்களை துரிதமாக வழங்குவதற்கான செயற்திட்டமொன்றை தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு கையடக்கத் தொலைபேசி மூலம் விபரங்களை வழங்குவதன் ஊடாக பிறப்பு இறப்பு மற்றும் விவாக பதிவுச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்தார்.
இத்திட்டத்தின்படி இச்சான்றிதழ்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கான கட்டணங்கள் கையடக்கத் தொலைபேசி மூலம் செலுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.

Friday, April 8, 2011

டெங்கு நுளம்பு பெருகும் மாதம் ஏப்ரல்!

dengu
ஏபரல்  மாதத்தில் டெங்கு நோய் பரவுவதற்கான அறிகுறிகள் அதிகளவில் தென்படுவதாகவும்  கடந்த சில வருடங்களில் டெங்கு நோய் காரணமாக அதிகளவானோர் உயிரிழந்ததும்  ஏப்ரல் மாதத்திலேயே என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தொற்று நோய் ஆய்வு பிரிவில்  நேற்று  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
டெங்கு நுளம்பு பெருகும் மாதத்திலேயே அதனை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாதொழிக்காவிட்டால் வருடம் பூராகவும் டெங்கு காய்ச்சலினால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தினால் டெங்கு நுளம்பு அதிகளவில் பெருகும் நிலை காணப்படுவதாகவும் அவ்வாறு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, April 7, 2011

சம்மந்துரை பிறதேச சபையின் புதிய உருப்பினர்களின் அறிமுக விழா







இன்று சம்மந்துரை பிறதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உருப்பினர்களை அறிமுகப் படுத்தும் முகமாக அப்துல் மஜீட் மண்டபத்தில்.A.L.IRSHAT (உள்ளுரட்ச்சி உதவி ஆனையாளர்) அவர்களின் தலைமையில் நடை பெற்றது. இவ்விழாவில் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட A.M.M.NOWSHAT  (தவிசாளர்) மற்றும் பிற உருப்பினர்களான A.L.RIYAL, A.ACHUMOHAMED,  M.THIYAKARAN (UNP)  மற்றும் முன்னாள் பாரளுமன்ற உருப்பினர் M.A.MAJEED மற்றும்   பொது மக்களும் இவ் விழவில் கலந்து சிறப்பித்தனர்

Wednesday, April 6, 2011

செவ்வய் 5 முதல் சூரியன் உச்சத்தில்!

இலங்கைக்கு நேரே சூரியன் நேற்று 5ஆம் திகதி முதல் உச்சம் கொடுக்கும் என்றும் இம்மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்த நிலை நீடிக்கும் எனவும் வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவகே நேற்றுத் தெரிவித்தார்.
நேற்று நண்பகல் 12.14 மணியளவில் திக்வெல்ல- ககணதுர- வெலிகம- மிதிகம ஆகிய நகர்களுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை இன்று 6ஆம் திகதி இதேநேரத்திற்கு அஹுங்கல்ல- சூரியவெவ- கினிதும நகர்களுக்கு நேரே சூரியன் சஞ்சரிக்கும் என்றும் இதன் காரணமாக இலங்கையில் அதிகளவு உஷ்ணம் உணரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சூரியனை நீள்வட்டப் பாதையில் வலம் வரும் பூமி இலங்கைக்கு நேரே சூரியன் வருடத்திற்கு இரு தடவைகள் சஞ்சரிக்கின்றது. அவற்றில் ஒரு தடவையே 05 ஆம் திகதிஆரம்பமாகியது. 05முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையும் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களுக்கு நேரே நண்பகலில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.

Monday, April 4, 2011

விவசாயிகலுக்கான கலை நாசினி பற்றிய விளிப்புனர்வு

புதிய வகையை கலை நாசினியான கொன்சோலோ எனும் கலை நாசினி அவற்றின் பயன் பற்றியும் மக்களுக்கு விளிப்புனர்வு செய்யப்பட்டது. இதன் போது விதை நெல் கெள்வனவு ப்ற்றிய தகவல்களும். வளன்கபட்டது.இந்த நிகல்வானது சம்மந்துரை அல் மர்ஜான் மக்ளீர் பாடசலையில் இடம் பெற்றது.

இந்த நிகல்வில் பிரதம அதிதிகலாக

AL-HAJ Y.B. IKBAL (விவசாய ஆரய்ச்சி உத்தியொகத்தர்)

K.SIVALINGAM  (விதைகல் அத்தட்ச்சி படுத்தல் அதிகாரி)

A.L.M. FAREED

MAJEED

JAINULABDEEN

AL-HAJ S.M.M. MUSTHAFA



Sunday, April 3, 2011

வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க உலகக் கிண்ணப்போட்டிகளில் ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தான் இனிமேல் உலகக் கிண்ணப்போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்திருக்கின்றார்.

இன்றைய தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அத்தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில்

எனது அணிக்கு என்னாலான சேவைகளை வழங்குவேன். அடுத்த உலகக் கிண்ண போட்டி இடம்பெறும் ஆண்டான 2015 ஆம் ஆண்டு தான் விளையாடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

தான் கடந்த பல வாரங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும் தனக்கு ஓய்வு தேவையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Saturday, April 2, 2011

உலகக் கிண்ணத்தை கைப் பற்றிய இந்தியா

இவ்வருட உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இந்திய அணி சம்பியனாகியுள்ளது.

மும்பை வாங்கடே அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால்
தோற்கடித்து இந்திய அணி சம்பியனாகியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இணி 50 ஒவர்களில் 6 விக்கெட இழப்பிக்கு 274
ஒட்டங்களைப் பொற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.2 ஒவர்களில 4 விக்கெட்டுக்களை மாதிதிரம்
இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
10அவது தடவையாக நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் பேட்டியில் இந்திய அணி இரண்டாவது
தடவையாக சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

Friday, April 1, 2011

பெற்றோல்,டீசல் விலை அதிகரிப்பு

பெற்றோல் மற்றும் டீசலின் விலை(01/04/2011) இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கபட்வுல்லதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் 90 ஒக்டேன் பெற்றோலின் விலை 10 ரூபாவினாலும் டீச்லின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.

இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 125 ரூபாவாகவும் டீசலின் விலை 76 ரூபாவாகவும் இருக்கும்.
                                                       

Thursday, March 31, 2011

வாரத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பிற்பகல் 2.10 மணிவரை பாடசாலை வகுப்புகள் கிழக்கு கல்வி அமைச்சு பணிப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள அரசாங்க அனைத்துப் பாடசாலைகளும் தரம் 6 இலிருந்து உயர்தரம் வரையிலான வகுப்புகள் வாரத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையில் மாத்திரம் பிற்பகல் 2.10 மணிவரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமென கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம்.நிசாம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய விசேட சுற்றறிக்கையை சகல மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணிக்கு பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 2.10 மணிவரை இடம்பெறவுள்ளதாகவும் ஏனைய நாட்களில் வழமைபோல் காலை 7.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணிவரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளில் காலையில் இடம்பெறும் மத வழிபாடுகள் மற்றும் கூட்டங்களினால் வாரமொன்றில் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கால அளவு குறைவடைகின்றமையால், அதனை மீள் நிரப்பும் நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிசாம் தெரிவித்துள்ளார்.

Tuesday, March 29, 2011

சொந்த மண்ணில் விடை பெற்றார் முரளி!

அரை  இறுதியில் நிகழ்வு

நேற்றைய அரையிறுதிப் போட்டியின் போது தமது கடைசி பந்தில் விக்கெட் ஒன்றையூம் வீழ்த்தி சொந்த மண்ணில் விடை பெற்றுக்கொண்டார். இலங்கை நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரான  முத்தையா முரளிதரன்.
இந்த உலகக் கிண்ண போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முத்தையா முரளிதரன் நேற்று அரையிறுதியில் தனது சொந்த மண்ணில் விளையாடி னார்.
ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் முரளி தனது 10 ஓவர்களுக்கும் 42 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதில் அவர் தனது சொந்த மண்ணில் வீசிய கடைசி பந்தில் ஸ்கொட் ஸ்ரைரிஸை எல்.பி.டபிள்யூ. முறை யில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று முரளி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது கடைசி பந்துக்கு விக்கெட் வீழ்த்தியமை குறிப்பிட்டத்தக்கது.
முரளி தனது சொந்த மண்ணில் 109 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனினும் அவர் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் வரிசையில் 4 ஆவது இடத்தையே பிடித்துள்ளார்.
இந்த சாதனை பட்டியலில் தென்னாரிபிக்க முன்னாள் வீரர் ஷோன் பொலக் 193 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
அடுத்து வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முரளி விளையாடவுள்ளார். இதுவே அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் விளையாடும் கடைசி ஆட்டமாகவும் அமையவுள்ளது.

டெங்கு ஒழிப்புத் திட்ட வாரம் 29 ஆம் திகதி வரை கிழக்கில் தொடரும்

டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதியின் செயற்குழுவின் டெங்கு ஒழிப்புத் திட்ட வாரம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களங்கள், கல்வியலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளில் அமுல்படுத்தப்பட்டு வருவதாகக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஒவ்வொரு வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அவர்களது நிர்வாகத்தின் கீழுள்ள வலயக் கல்வி அலுவலகங்கள், கோட்டக் கல்வி அலுவலகங்கள், பாடசாலைகள், வேறு கல்வி அலுவலகங்கள் போன்ற இடங்களில் நுளம்பு பரவும் இடங்களை 29 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்திற்கென மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தியோகத்தர்களை நியமித்து, அவர்களிடமிருந்து அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்களிடமிருந்துஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் இச்செயற்பாட்டினைத் திறம்பட நடத்த நிகழ்ச்சித் திட்டங்களைத் தயார் செய்து அமுல்படுத்துவதுடன் இச் செயற்திட்டம் தொடர்பான அறிக்கை ஒன்றினை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தனக்கு அனுப்பி வைக்குமாறும் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார கேட்டுள்ளார்.

NATIONAL ICT EXCELANT AWARD 2009



பாடசாலை கணணி வல  நிலயங்கலுக்கிடைலான போட்டி நிகழ்ச்சியில்  சம்மாந்துரை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் மாகாண மட்டத்தில் 2ம் இடத்தினை பெற்றுள்ளது. இப் போட்டி நிகழ்ச்சி கல்வி அமைச்சின் செயற்த்திட்ட பிரிவில் நடத்தப்பட்டது.  இதற்க்கு 1500 000 ரூபா பெறுமதியான கணணி மற்றும் கணணி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. 
 
தகவல்.

கணணி வள நிலைய ஆசிரியர்
M.B.M.HASEEN

Monday, March 28, 2011

சம்மாந்துரை பொலிஸாரினால் தேசிய பாடசாலையில் டெங்கு ஒழிப்புப் பணிகள் இன்று

சம்மாந்துரை  தேசிய பாடசாலையில்  இன்று பொலிஸாரின் ஏற்பாட்டுடன்  சூழல் பாதுகாப்பு பிரிவு, சுகாதார பரிசோதகர்  ஆகியோரின் அனுசரனையுடன் டெங்கு ஒழிப்பு பணிகலானது. பாடசலை அதிபர் ஆசிரியர்  மாணவர்கள் இனணந்து பணியில் ஈடுப்ட்டனர்

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.