Tuesday, October 26, 2010

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப் பாதையில் வெற்றி நடை போடுகிறது




சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையானது அபிவிருத்தியின் உச்ச வரம்பை தொடுமளவுக்கு பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் குறுகியகாலத்தில் எட்டியுள்ளது. தற்பொழுது பல்வேறுபட்ட சிகிச்சை முகாம்கள் எமது வைத்தியசாலையில் நடைபெற்று வருகின்றது.இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
                                                                  

Monday, October 25, 2010

கிழக்கு மாகாண மட்டத்திலான விஞ்ஞான வினாடி வினாப்போட்டி பரிசளிப்பு விழா

கிழக்கு மாகாண மட்டத்திலான விஞ்ஞான வினாடி வினாப்போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவி செல்வி.முஹம்மட் றபீக் ஹன்ஷா  இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.இவருக்கான வெள்ளிப் பதக்கத்தையும்,சான்றிதழையும் பாடசாலை ஆராதனையில் வைத்து வித்தியாலய அதிபர் ரீ.எம்.தெளபீக் மாணவிக்கு வழங்குவதைக் காணலாம்.
                                                                   

Sunday, October 24, 2010

மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் அஸ்ரஃப் அவர்களின் நினைவு மலர் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா



23.10.2010 அன்று மாலை 04.45 இற்கு சம்மாந்துறை நகர மண்டபத்தில் மறைந்த தலைவர் மர்ஹூம் அஸ்ரஃப் அவர்கள் மண்ணை விட்டுப் பிரிந்து ஒரு தசாப்தத்தை முன்னிட்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக தமிழ்ச் சங்கத்தின் கனவுகள் கலைக்கப்பட்ட அஸ்ரஃப் எனும் "அடையாளம்" கவிதைத் தொகுப்பு நூல் விழாவானது வெகு விமர்சையாக சம்மாந்துறை மண்ணில் அரங்கேறியது.இதில் புத்திஜீவிகள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் பிரமுகர்களோடு தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் ஆதரவாஅளர்கள் மற்றும் போட்டியில் பங்குபற்றிய கலைஞர்களும் இவ் விழாவில்
கலந்து சிறப்பித்தனர்.

Saturday, October 23, 2010

முன்பள்ளி சிறார்களின் கண்கவர் பிரமாண்டக் கண்காட்சி





சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட  அனைத்து முன்பள்ளிப் பாடசாலைகளும் இணைந்து நடாத்திய சின்னஞ் சிறார்களின் ஆக்கபூர்வமான அற்புதத் திறமைகள் இன்று சம்மாந்துறை அல்-ம்ர்ஜான் மகளிர் கல்லூரியில் உத்தியோகபூர்வ அரங்கேற்றம் சுமார் காலை 9.25 மணியளவில் இடம்பெற்றது.இதில் அதிதிகளாக    கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் பல்வேறு வலயக் கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் சம்மாந்துறைப் பிரதேச சபைத் தவிசாளர் போன்றோர் பிரசன்னமாகி இருந்தனர்.மேலும் இந் நிகழ்வானது அனைத்து மக்களினதும் உள்ளங்களையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறையில் திடீர் விபத்துக்களில் ஒருவர் மரணம் இருவர் படுகாயம்





இன்று 23.10.2010 நண்பகல் 12.30 மணியலவில் சம்மாந்துறை நெல்லுச் சேனை வட்டையில் கிறவல் மணல் ஏற்றலுடன் தொடர்புடைய உழவு இயந்திரமும் பெட்டியும் திடீரென பாதையை விட்டு வாய்க்காலுக்குள் பாய்ந்ததன் காரணமாக சாரதி எப்.சிராஜ்.வயது 19(பத்து வீட்டுத்திட்டம்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதும் மரணமானார்.

உழவு இயந்திரத்துடன் உதவிக்குச் சென்ற 18 வயது மதிக்கத்தக்க முஸம்மில் என்பவர் ப்டுகாயம் அடைந்த நிலையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைக்காக மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் இடமாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை திடீர் விபத்தில் மரணமடைந்த சிறாஜின் நண்பர் மலையடிக் கிராமம்-3 இல் வசிக்கும் முபாரக் (19வயது) வைத்தியசாலைக்குச் சென்று நிலைமையை அவதானித்து மரணச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளுக்காக வீடு நோக்கி வந்து கொண்டிருக்கையில் பி.ப.2.50 சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதியில் இலங்கை வங்கிகும் அல்-மர்ஜான் மகளிர் வித்தியாலத்திற்கும் இடைப்பட்ட  இடத்தில் மோட்டார் சைக்கிளில் பிராயணிக்கையில் அதே திசையை நோக்கி பின்னால் வந்து கொண்டிருந்த பாரஊர்தி(ரம் ரெக்)மோதி விபத்துக்குள்ளக்கியதனால் முபாரக்கும் படுகாயம் அடைந்து சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெருவதையும் பின்னர் அதி தீவிர சத்திர சிகிச்சைக்காக அம்பாரை போதனா வைத்தியசாலையில் இடம் மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் மரணமடைந்தவர் தொடர்பான மரண விசாரணையினை இரவு 7.50 கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதவான் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று அவதானித்ததுடன் இரவு 8.05 இற்கு சம்மாந்துறை வைத்தியசாலையில் இருந்து ஜனாஸா குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.விபத்துடன்  தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வ்ருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.









Friday, October 22, 2010

நட்புறவுக்கான மாபெரும் சினேகபூர்வ உதைப்பாந்தாட்டப் போட்டி




சம்மாந்துறை தேசிய பாடாசாலை மைதானத்தில் சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகத்திற்கும்,காரைதீவு விளையாட்டுக் கழகத்திற்கும் இடையே மாபெரும் சினேகபூர்வ உதைப்பாந்தாட்டப் போட்டியானது 22.10.2010 ஆகிய இன்று பி.ப.4.00 மணிக்கு ஆரம்பமாகியது.மிகவும் உற்சாகமான எதிர்பார்ப்புகள் பல ரசிகர்களின் முகத்தில் முகபாவனைக் காட்டும் வகையில் இறுதிவரைப் போட்டியானது விறு விறுப்பான முறையில் அரங்கேரியது.இதில் ஏசியன் அணியானது 2 கோல்களையும் காரைதீவு விளையாட்டுக் கழத்தினர் ஒரு கோலினையும் பெற்று சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகத்தினர் வெற்றி வாகை சூடினர்.

சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் தொழிற்ப் பயிற்ச்சி நிலையத்திற்கு திடீர் விஜயம்.


சம்மாந்துறை தொழிற்ப் பயிற்ச்சி நிலையத்திற்கு சம்மாந்துறை பிரதேசசபைத் தவிசாளர் M.I.M.மன்சூர் அவர்கள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு காணப்படுகின்ற குறைகளைக் கேட்டு அறிந்தார்.மேலும் அங்கு சில குறைகளுக்கான தீர்வும் அவ்விடத்திலேயே எட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thursday, October 21, 2010

தகவல் தொழிநுட்ப விழிப்புணர்வூட்டும் பயிற்ச்சிப் பட்டறை


கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் e-Village ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்ச்சிப் பட்டறையானது சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தில் 21.10.2010 ம் திகதி இடம்பெற்றது.இதில் மாகாண செயற்திட்ட முகாமையாளர் E.K.S.P.கலாநிதி,e-Village நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நந்தசிறீ மற்றும் மாண்புமிகு மாகாண கல்வி,கலச்சார அலுவல்கள்,நிலங்கள் அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மாகணக் கல்விப் பணிப்பாளர் M.T.A.ஹிசாம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.   

சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை சுகாதாரக் கழகங்களுக்கு இடையிலான போட்டிப் பரிசளிப்பு விழா


சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சுகாதாரக் கழகங்களை மேம்படுத்தும் செயற்திட்டங்களுக்கு அமைவாக பாடசாலைகள் தோறும் அமைக்கப்பட்டுள்ள சுகாதாரக் கழகங்களுக்கிடையிலான போட்டி நிகழ்வில் வெற்றி ஈட்டிய பாடசாலைக் கழகங்களுக்கு வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டன. 

2010.10.20ம் திகதி ச்ம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற விருது வழங்கல் நிகழ்வில் ச்ம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியலாயம்,வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயம்,வீரச்சோலை அ.த.க பாடசாலை,மல்வத்தை புது நகர் அ.த.க. பாடசாலை,சம்மாந்துறை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி போன்ற பாடசாலை சுகாதாரக் கழக உறுப்பினர்கள் வெற்றியாளர்களாகத் தெரிவாகினர்.

இவர்களுக்கான விருது,சான்றிதழ்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் M.K.M.மன்சூர்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் V.T.சகாதேவன்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் A.அஸீஸ் முகைதீன்,சுகாதாரக் கழக செயற்பாட்டாளர்கள்,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களும் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.                                                                 

Wednesday, October 20, 2010

சம்மாந்துறை அல்-உஸ்வா பகல் பராமரிப்பு நிலையப் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள்


சம்மாந்துறை அல்-உஸ்வா பகல் பராமரிப்பு பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மாகா வித்தியாலய மைதானத்தில் பாடசாலையின் அதிபர் ரசூல் B.A அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.பிரதம அதிதியாக கல்முனைக் கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் M.P.A.தெளபீக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.கெளரவ அதிதியாக GAFSO அமைப்பின் பணிப்பாளார் A.J.காமில் இம்தாட் உம் சமாதான கற்கை நிலையப் பணிப்பாளர் கலாநிதி S.L.A.றியாஸ் சிறப்பு அதிதிகளாக ஜெனீஸ் வித்தியாலய அதிபர் K.M.ரபீக், ஊடகவியலாளர்களான J.M.ஹனீபா, சுடர் ஒளி உதவி ஆசிரியர்  வரலாற்று ஆய்வாளர் ஜலீல்-ஜீ மற்றும்  அல்-உஸ்வா சமூக சேவை அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் அல்ஹாஜ் மெளலவி முஸ்தபா அவர்களும் இன்னும் பல அதிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tuesday, October 19, 2010

உலக கை கழுவல் தின நிகழ்வுகள்



     கடந்த 15.10.2010 அன்று உலக கை கழுவுதல் தினமானது யுனிசெப் நிறுவனத்தின் அனுசரனையுடன் அம்பாரை மாவட்டப் பாடசாலைகளில் இடம்பெற்றது.இதன் ஓரங்கமாக சேரங்கட நவோதயா பாடசாலையின் மூவின மாணவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.இதன்போது மகோயா கல்விப் பணிபாளர் மற்றும் யுனிசெப் பிரதிநிதிகளுடன் கப்சோ நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் அப்துல் ஜ்ப்பார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இந் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படத்தை படத்தில் காணலாம்.                                                                   

Monday, October 18, 2010

சம்மாந்துறையில் பெரும்போக நெற்ச் செய்கைக்கான பணிகள் ஆரம்பம்



சம்மாந்துறை பொலிஸ் வீதியில் விபத்துச் சம்பவம்


சம்மாந்துறை பொலிஸ் வீதியில் மக்கள் வங்கி எதிரில் ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் இன்று விபத்துகு உள்ளாகியது இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயமுற்ற நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

மற்றுமொரு ஹஜ் யாத்திரைக் குழுவானது இன்று பயணமாகிறது சம்மாந்துறையில் இருந்து


இன்று அதாவது 18.10.2010 ஆகிய இன்று 85 பேரைக் கொண்ட ஹஜ் யாத்திரியைக் குழுவானது இன்று சம்மாந்துறையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.இவர்கள் சம்மாந்துறை ஹிஜ்ரா பள்ளிவாசலில் இருந்து துஆப் பிரார்த்தனையுடன் புறப்பட்டுச் சென்றனர்.

பிரமாண்டமான வெள்ளைப் பிரம்பு தினம்


சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு 18.10.2010 ஆகிய இன்று சம்மாந்துறை நகர மண்டபத்தில் இஸ்லாமிய விழிப்புணர்வு அற்றோர் அமைப்பினால் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாக - சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சூர்,கெளரவ அதிதியாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர்,விழிப்புனர்வற்றோர் சங்க தலைவர் உஸாமா சியாத், சிறப்பு அதிதியாக இலங்கை வானொலி கூட்டுத்தாபன அறிவிப்பாளர் யூனுஸ் கே.றஹ்மான் வீற்றிருப்பதைக் காணலாம்.

Sunday, October 17, 2010

வாசகர்களின் கவனத்திற்கு

எமது இச் சம்மாந்துறை செய்தித் தளமானது எதுவித பக்கச் சார்புமன்றி எமது தனிப்பட்ட ஆக்கமாகும் அத்துடன் எதுவித பொருளாதார உதவியும் யாரிடமும் பெற்றும் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இது தங்களது அதாவது F &  F Media இனது தனிப்பட்ட செலவில் சமூகத்திற்காக செய்யும் தொண்டு என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

Friday, October 15, 2010

இலங்கை பாடசாலை கிரிக்கட் சிறான் வீரர்கள் தேசிய மட்ட அணிக்கு தெரிவு

இலங்கை பாடசாலை கிரிக்கட் சிறான் வீரர்கள் (வயது 13-15) தேசிய மட்ட அணிக்காக தெரிவு செய்யும் போட்டிக்கு 2010.10.15 அன்று சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.


பயிற்சிக்காக மாவட்ட பயிற்றுவிப்பாளர் வஹரகொட அவர்களும் சம்மாந்துறை பயிற்றுவிப்பாளர் கே.எல்.எம். ஷகீ அவர்களும் பயிற்றுவிப்பதில் ஈடுபட்டனர்.

இப்போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலையிலிருந்து மாவட்ட அணிக்காக மூன்று துடுப்பாட்ட வீரர்களும், மூன்று பந்து வீச்சாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.


Thursday, October 14, 2010

சம்மாந்துறையில் இருந்து முதலாவது ஹஜ் யாத்திரைக் குழு இன்று புறப்படுகிறது


சம்மாந்துறையில் இருந்து புனித ஹஜ் யாத்திரியை மேற்கொள்வதற்காக 15.10.2010 ஆகிய இன்று முதலாவது ஹஜ் யாத்திரியைக் குழுவானது இன்று காலை 10.00 மணியளவில் எமது ஊரின் ஹிஜ்ரா பள்ளிவாசலில் இருந்து துஆப் பிரார்த்தனையுடன்  தமது பயணத்தை ஆரம்பித்தனர்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மேலும் ஒரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஐரிஸ் ரெட் குரோசின் 45 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் ஆண்,பெண்களுக்கான தங்குமிட வாட்டும்,சத்திர சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டு இன்று பூர்த்தியாக்காப்பட்டுள்ளது.இது 9 மாத கால செயற்திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.



Wednesday, October 13, 2010

சம்மாந்துறை இலாகாவுக்கு உற்பட்ட பெரும் போக நெற்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம்

சம்மாந்துறை இலாகாவுக்கு உட்பட்ட சம்மாந்துறை-நிந்தவூர் வரையான பெரும்போக நெற்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் 12.10.2010 ஆகிய இன்று அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபருடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் A.மன்சூரின் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.இதில் பிரதேச செயலாளர்கள்,விவசாய அமைப்பின் தலைவர்கள்,விவசாய உத்தியோகத்தர்கள்,நீர்ப்பாசன இலாகு உத்தியோகத்தர்கள்,மேலும் இதனுடன் தொடர்புபட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.