பயிற்சிக்காக மாவட்ட பயிற்றுவிப்பாளர் வஹரகொட அவர்களும் சம்மாந்துறை பயிற்றுவிப்பாளர் கே.எல்.எம். ஷகீ அவர்களும் பயிற்றுவிப்பதில் ஈடுபட்டனர்.
![]() |
![]() |

சம்மாந்துறை வீரமுனை ஆர்.கே.எம். மகா வித்தியாலய மைதானத்தில் 09.10.2010 ஆகிய இன்று சுமார் 06.00 மணியளவில் சூரியன் எப்.எம் இன் நகருக்குள் நகரும் இசை வண்டியுடன் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியானது இடம்பெற்றது.இதில் இலங்கையின் பிரபல இசைக் குழுவான நாவலப்பிட்டி கிரிசானனின் இசைக் குழுவானது கலந்து கொண்டு பெருந் திரலான மக்களை சந்தோசப்படுத்தினர்.
03.10.2010 ஆம் திகதி சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில் இளைஞர் சேவை
மன்றத்தின் வலய மட்டத்திலான கபடி இறுதிப் போட்டியானது இடம்பெற்றது.இதில்
சம்மாந்துறையைச் சேர்ந்த நிவ்சன் விளையாட்டுக் கழகமும் முபோ ஈகில் அணியும்
மோதின.போட்டியானது விறுவிறுப்புத் தன்மை குறையாததாக அரங்கேறி முபோ ஈகில்
அணியானாது வெற்றி வாகை சூடியது.28 இற்கு 12,22 இற்கு 23 என்ற புள்ளிகள்
அடிப்படையில் இரு சுற்றுக்களும் முடிவுற்றது.மேலும் இதில் வெற்றி ஈட்டிய
முபோ ஈகில் அணியினர் மாவட்ட மட்டப் போட்டிகளுக்கு தேர்வு
செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சிறுவர் தினத்தைக் கொண்டாடும் முகமாக சம்மாந்துறைக் கல்வி
வலயமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இணைந்து சம்மாந்துறையில்
பெருவிழா கொண்டாடியது.சம்மாந்துறை மகளிர் கல்லூரியில் காலை 07.30 இற்கு
ஆரம்பித்த ஊர்வலம் விளினையடி ஊடாக ஹிஜ்றா சந்தியை காலை 09.30 இற்கு
வந்தடைந்தது. ஹிஜ்றா சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் அத்தனை
மாணவர்களுக்கும் தாகசாந்தி ,குடிபானம் என்பன வழங்கி சிறுவர்களுடைய
முயற்சிக்கு சங்கத்தில் உள்ள அத்தனை வர்த்தகர்களும் வீதியோரம் நின்று
சிறுவர்களை உபசரித்ததை காணக் கூடியதாக இருந்தது.ஊர்வலம் அங்கிருந்து
தொடர்ந்து சம்மாந்துறை கோட்டக் கல்வி அலுவலகத்தை 10.50 இற்கு அவ்விடத்தில்
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் M.T.A. நிசாம்,கல்முனை வலயக் கல்விப்
பணிப்பாளர் M.T.A.தெளபீக்,சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர்
M.K.M.மன்சூர்,பிறை f.m வனொலி பணிப்பாளர்,கட்டுப்பாளர்,சந்தைப்படுத்தல்
பிரிவு பொறுப்பதிகாரி ,பிரதிக்கல்விப் பணிப்பாளர்,உதவிக் கல்விப்
பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,சகல பாடசாலை அதிபர்கள் உட்பட
ஆசிரியர்களும் அவ்விடத்தில் குழுமியிருந்தனர்.பிரதம அதிதிககள்,கெளரவ
அதிதிகள்,அதிபர் குலாத்தினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பேன்ட் வாத்தியக்
குழு,பொலிஸ் கடேட் பிரிவு,சாரணியப் படைக்குழு,பொல்லடிக் குழு இன்னும் பல
கலாச்சார விழுமியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களினால்
வரவேற்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சம்மாந்துறை மல்கம்பிட்டி கிராம சேவகப் பிரிவிற்குட்பட்ட பள்ளாற்றுப்
பகுதியில் இனம் தெரியாத பெண் சடலம் ஆற்றில் மிதந்து வந்ததை பொதுமக்கள்
2010.09.29 அவதானித்து சம்மாந்துறைப் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்தனர்.
ஸ்தலத்துக்கு
சம்மாந்துறை நிலையப் பொறுப்பதிகாரி ஜெயந்த தஹனாக்க மற்றும் கல்முனை உதவி
பொலிஸ் அத்தியகட்சகர் மெண்டிஸ்,கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆகியோர்
பிரசன்னமாகி சடலத்தை ஆற்றிலிருந்து அப்புறப்படுத்தினர்.சடலம் இனம்
காணப்படாமல் வைத்தியப் பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரஃப் ஆதார வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது.விசாரணைகள் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியகட்சகர்
திரு.மெண்டிஸிணால் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இன்று எமது ஊரின் தேசிய பாடசாலை மற்றும்,அல் மர்ஜான் மகளிர் வித்தியாலய
ஆசிரியர்கள் சட்டபூர்வமற்ற ஓர் சுகவீனப் போராட்டம் நிகழ்த்தப்பட்டது.இது
தொடர்பாக எமது ஊரின் வலயக் கல்விப் பணிப்பாளர் M.K.M.மன்சூர் அவர்கள் இது ஓர்
தனிப்பட்ட பழிவாங்கல்கள் காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டது எனவும் மேலும் இது
தொடர்பான விளக்கங்களை பொது மக்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் வழங்கினார்.மேலும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தேவையான ஆதரவை
பொது மக்கள் பெருவாரியாக வழங்கினர்.மேலும் 400 இற்கும் மேலான மக்கள்
கையப்பமிட்டு ஆதரவு வழங்கும் மகஜர் ஒன்றும் கையழிக்கப்பட்டது.