Saturday, November 5, 2011

அனைவருக்கும் இனிய ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்கள்

கட்டுப்பட்ட இறைக்குக்
காட்டத் துணிந்தத் தியாகம்;
மறக்காதுமனிதக்குலம்;
இருக்கும்வரை உலகம்!
வெற்றிப் பெற்றச்
சோதனைக்குப் பகரமாய்
பெருநாள்;
களிப்புடன் பலியிட்டுக்
கண்டுக்கொள்ள இத்திருநாள்!

அறுக்கும்கறிஏதும்
அடைவதில்லை
இறைவனை;
புதுப்பித்துக்கொண்டு
பூப்பூக்கும் ஈமானை!
புத்தாடைப்
போர்த்திக்கொண்டு
முழக்கமிடுவோம்
தக்பீரை;
மனம் குளிர்ந்து
முகம் மலர்ந்து
அள்ளித் தெளிப்போம்
வாழ்த்துகளை!
கசந்துப்போன நினைவுகளை
கசக்கிவிடு;
முட்டிநின்றச் சகோதரனை
முத்தமிடு;
எரியும் வெறுப்புகளை
அணைத்துவிட; அணைத்துவிடு!
தந்தை இப்றாகிம்
வழிவந்த திருநாள்
உயிர் தியாகத்தை
உணர்த்தும் நன்நாள்.
ஈதுல் அல்ஹா…ஹஜ்ஜூப் பெருநாள்!

Thursday, November 3, 2011

இலங்கையிலுள்ள தேசிய கல்லூரிகளில் 2012 ஆம் வருடத்துக்குப் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கேற்ப அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் நவம்பர் மாதம் 16ஆம் திகதியும் 17ஆம் திகதியும், மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரியில் நவம்பர் மாதம் 26ஆம் திகதியும் 27ஆம் திகதியும், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நவம்பர் மாதம் 19ஆம் திகதியும் 20ஆம் திகதியும்,  வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் நவம்பர் மாதம் 21ஆம் திகதியும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளது.  


இத்திகதிகளில் முதலாம் மொழி தமிழ், விசேட கல்வி, இஸ்லாம் ஆகிய பாடநெறிகளுக்கான நேர்முகப் பரீட்சை தமிழ் மொழியில் இடம்பெறவுள்ளது. 


இந்தப் பாடநெறிகளைப் பின்பற்றுவதற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

அதேவேளை இதுவரை நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக்கடிதங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி நிருவாகத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

தகவல்:
எம். ஐ. எம். நவாஸ்
உப-பீடாதிபதி
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி
0714286891

Tuesday, November 1, 2011

கிழக்கு மாகாணசபையின் 2012ம் வருடத்திற்கான நிதிப்பிரகடனம்



கிழக்கு மாகாணசபையின் 2012ம் வருடத்திற்கான நிதிப்பிரகடனம் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நேற்று (25.10.2011) கிழக்கு மாகாண சபைஅமர்வு சபை தவிசாளர் எச்.எம்.பாயிஸ் தலமையில் இடம்பெற்றது. இச்சபையமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனினால் சபைத் தீர்மானத்திற்காக 2012ம் வருடத்திற்கான நிதிப்பிரகடனம் முன்வைக்கப்பட்ட போது சபை ஏகமானதாக ஏற்றுக் கொண்டது.
பதினேழாயிரத்து இருநூற்று அறுபத்தெட்டு மில்லியன் (17,268) நிதி ஒதுக்கீட்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை சபையில் சமர்ப்பிப்பதற்கான பிரகடனத்தினை ஏகமானதாக ஏற்றுக்கொண்டார்கள்.
மாகாணசபை முறைமையினூடாக கடந்த 3 வருடங்களாக புதிதாக உதையமான கிழக்கு மாகாணசபை மூலம் பல உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் வலுப்பெறுவதும் வீதி, பாலம், பாடசாலைகளென பல அபிவிருத்திப்பணிகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் 2011ம் வருடத்தில் ஏனைய துறைகளை விட கல்வித்துறைக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டது போல் 2012ம் வருடமும் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமென எதிர்பாக்கப்படுகின்றது.

Saturday, October 29, 2011

பெற்றோல் மற்றும் டீசல் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

ஒரு லீற்றர்  பெற்றோல் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12 ரூபவினாலும் அதேவேளை டீசலின் விலையை 10 ரூபாவினாலும், மண்ணெண்ணையின் விலை 8 ருபாவினாலும்  இலங்கை பெற்றோல் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது. 
இதே வேளை LANKA IOC நிறுவனம் பெற்றோல் விலை 12 ரூபாவினாலும் டீசலின் விலை 2 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.
                                                                        


                                                                       

இலங்கை ஜம்யதுல் உலமாவின் தகவலின்படி

இலங்கை ஜம்யதுல் உலமாவின் தகவலின்படி 27.10.2011 திகதி தென்பட இருந்த துல் ஹஜ் தலைப்பிறை 28.10.2011 திகதி தென்பட்டதனால் புனித ஹஜ்ஜூப் பெருநாள் தினமாக 07.11.2011(திங்கட்கிழமை) யாக அறிவிக்கப்பட்டுள்ளது. என‌‌வே எமது இணையதள வாசகா்களுக்கு முன் கூட்டியே புணித ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். (Computer Society of Sammanthurai) CSS

Thursday, October 27, 2011

சம்மாந்துறை வலயப் பாடசாலைகளுக்கு கணனி மற்றும் பாடசாலை மாணவா்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு


இன்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹாவித்தியாலயத்தில் சம்மாந்துறை வலையக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டின் கீழ் சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு கணனிகள்,பாடசாலை மாணவா்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண கல்வி அமைச்சா் விமலவீர திசானயக்க அவா்களும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண போக்குவரத்து அமைச்சா் எம்.எஸ். உதுமாலெவ்வை அவா்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினா்களான எம்.எல்.ஏ. அமீா் அவா்களும், எஸ் புஷ்பராஜா அவா்களும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளா் எம்.கே.எம். மன்சூா் அவா்களும் கலந்துகொண்டனா்.இக் கணனிகள் கிழக்கு மாகாண முதலமைச்சா் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவா்களின் வேண்டுகோலுக்கிணங்க இந்திய அரசின் உயரிஸ்தானிகத்தினால் வழங்கப்பட்டது. மேலும் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சம்மாந்துறை வலயத்திற்குகுட்பட்ட பாடசாலை மாணவா்கள் 180 பேருக்கு  துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்து.

Tuesday, October 25, 2011

வெகு விரைவில் சம்மாந்துறைக்கு என்று ஒரு இணையத்தள் வானொலி காத்திருங்கள். எம்மோடு இணைந்திருங்கள் புதுமைகள் ஏராளம்.

வெகு விரைவில் சம்மாந்துறைக்கு என்று ஒரு இணையத்தள் வானொலி காத்திருங்கள். எம்மோடு இணைந்திருங்கள் புதுமைகள் ஏராளம்.

அமீர் அலி பொது நூலகத்திற்கு ஒரு தொகை புத்தகம் அன்பளிப்பு


கண்காட்சியை பார்வையிட வருகை தந்த Colombo Asia Foundation     நிறுவனத்தின் பணிப்பாளர் நூலகத்திற்கு ஒரு தொகை புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

இந் நிகழ்வில் அமீர் அலி பொது நூலகத்தின் நூலகர் A.L.M.Musthak, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் அல் ஹாஜ் A.M.M.Nowshad மற்றும் Colombo Asia Foundation பணிப்பாளர் திரு அன்டன் னு. நல்லதம்பி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Saturday, October 22, 2011

புத்தகக் கண்காட்சியும், விற்பனையும்

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையும், சம்மாந்துறை பிரதேச சபை பொது நூலகத்தின் அபிவிருத்திக் குழுவும் இணைந்து நடாத்தும் புத்தகக் கண்காட்சியும், விற்பனையும்
இன்று சற்று நேரத்திற்கு முன்னர் அங்குராப்பனம் செய்து வைக்கப்பட்டது.
இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் கௌரவ எம். உதயகுமார் அவர்கள் வருகை தந்து இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்கள்.
அவர்களுடன் உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஜனாப். ஏ.ஜெ.எம். இர்ஸாட் அவர்களும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் ஏனைய அதிதிகளும் கலந்து கொண்டனர்.

புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்

எதிர் வரும்2011/10/23,24,25 ம் திகதி சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சியும், நூல் விற்பனையும் மிகவும் கோலகலமாக இடம்பெற உள்ளது.


இந் நிகழ்வு காலை10.00 முதல் இரவு10.00 மணி வரையும் இடம் பெற ஏற்பாடாகியுள்ளது.


இந்த நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாகSAMMANTHURAI.TK மூலம் இணையத்தள வானொளியில்  உள்ளக கலைப்பரங்கில் இருந்து நேர்முக வர்ணனை செய்யப்படவுள்ளது.

உலகில் தெரிவு செய்யப்பட்ட 50 சிறந்த ஆசிரியா்களில் ஜனாப் எம்.பி. ஹசீன்

உலகில் தெரிவு செய்யப்பட்ட 50 சிறந்த ஆசிரியா்களில் சம்மாந்துறை மண்ணை சோ்ந்த தேசிய பாடசாலையின் ஆசிரியா் ஜனாப் எம்.பி. ஹசீன். ஐக்கிய அமைரிக்காவில் Microsoft நிறுவனத்தில் அன்மையில் இடம் பெற்ற கருத்தரங்கு ஒன்றில்  இலங்கையைப் பிரதி நிதித்துவப்படுத்திய ஒரே ஒரு ஆசிரியராக கலந்து கொண்டார். இவருடய அப் பயணத்தின் அனுபவத்தை SAMMANTHURAI.TK இன் கானொளி ஊடக நீங்கள் கண்டு கழிக்க

Friday, October 21, 2011

சம்மாந்துறை தேசியபாடசாலையில் பழைய மாணவர்கள் ஒன்று கூடல்

கடந்த 2011/10/16ம் திகதி ஞயிற்றுக் கிழமை சம்மாந்துறை, தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஒன்று கூடல் பாடசாலையின் அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் பாடசாலயின் கடந்தகால, நிகழ்கால,எதிர்கால விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.அத்தோடு இங்கு
இங்கு அதிபர் அவர்களின் தலையின் கீழ் புதிய நிர்வாகம் ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.

மேலும் இச் சங்கமானது தொடர்ச்சியாக செயற்பாட்டில் இருக்குமெனவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.
                                                           
                                                           

Friday, October 7, 2011

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் வகுப்பறையில் மல்டி மீடியா கற்பித்தல் முறைமை உயர்தர வகுப்பில் அறிமிகம்


சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் வகுப்பறையில்  நவீன முறையில் கற்றல் கற்பித்தல் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதன்படி இப்பாடசாலையில் கலை,வர்தக பிரிவுகளில் உள்ள வகுப்புளில் தற்போது மல்டி மீடியா பயன் படுத்தப்பட்டு நவீன முறையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்   மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.


                                  இதன்படி கடந்த 03/10/2011  திங்கட்கிழமை அன்று வணிக கல்வி ஆசிரியர்  A.R.M.AJVATH ALI ஆசிரியரினால் கற்பித்தல் நடவடிக்கைகள் முதன் முதலாக மல்டி மீடியா மூலம் மேற்கொள்ளப்பட்ட போது பாடசாலையின் முதல்வர் Mr.S.L.ABOOBUCKER, கலை வர்தக பிரிவு பொறுப்பு அதிபர் Mr.H.M ANVER ALI, பகுதி தலைவர் Mr.S.M.SAMOON ஆகியோரினால் மல்டி மீடியா மூலமான வகுப்பறை கற்றல்,கற்பித்தல் நடவடிக்கை  உள்ளக மேற்பார்வை மேற் கொள்ளப்பட்டு ஆரம்பித்து  வைக்கப்பட்டது..                              

Thursday, October 6, 2011

சம்மந்துறை தேசிய பாடசாலையில் இன்று ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாட பட்டது.


சம்மந்துறை தேசி பாடசாலையில் ஆசிரியர் தினக் கொண்டாடமானது மாணவர்களாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இன் நிக்ழ்வில் மாணவர்களாள் ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டதுடன் தமது குருதட்சனயாக மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் பரிசில்க்லையும் கொடுத்துனர் மகிழ்ந்தனர். மற்றும் மாணவர்களாள் ஏற்ப்பாடு ஏற்ப்பாடு செய்யப் பட்ட கிறிக்கட் விளையாட்டும் ஆசிரியர்களுககிடையில் இடம் பெற்றது. இச் சந்தர்பதில் இப் பாடசாலையின் பழைய மாணவர்கலால் (2010 உ/த கலைப்பிரிவு) மின்விசிறியும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

Wednesday, October 5, 2011

A/L எழுதிய மாணவர்கழுக்கான புதிய வகுப்புக்கல் ஆரம்பம்

சம்மாந்துரை தேசிய பாடசாலையில்A/L  பரிட்ச்சை எழுதிய மாணவர்கலுக்கான புதிய வகுப்புகல் ஆரம்பமாகிறது.


graphic designing

போன்ற பாடங்கள் ஆரம்பமாக உள்ளன


தொடர்புகளுக்கு நிலைய பொறுப்பதிகாரி :M.B.M HASEEN (TR)
PHONE: 0772928808


சுகாதார வாரத்தை முன்னிட்டு சுகாதார விழிப்புணா்வூட்டல் நிகழ்வு

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் இன்று விஷேட காலை ஆராதனை கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து மாணவா்களுக்கு சுகாதார தினைக்களத்தினூடாக சுகாதார நடவடிக்கைகள், ஆரோகியமான சுகவாழ்வுவு சம்மந்தமாக விழிப்புனா்வு ஒன்றினை கல்முனை மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளா் Dr. இப்றாலெப்பை அவா்களினால் மாணவா்களுக்கு ஆரேக்கியமான சுகவாழ்வு பற்றி சிறப்புரையாற்றப்பட்டது. இந்நிகழ்வில் அதிபா்,பிரதி அதிபா்கள், ஆசிரியா்கள் மாணவா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.

தகவல்: M.B.M.HASEEN  (TR)

Sunday, October 2, 2011

சட்ட விரோதமாய் மணல் ஏற்றிய வாகனங்கள் கைபற்றப்பட்டன


இன்று சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு D.M.J.K. தஹநாயக்கா வின் தலைமையில்,சம்மாந்துறை பொலீஸாரும்,சூழல் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து நடாத்திய திடீர் சுற்றி வளைப்பினால் நிந்தவூர்,நெய்னாகாடு உள்கட்டுவாய்க்கால் பகுதியில் சட்ட விரோதமாய் மணல் ஏற்றிய 10 உழவு இயந்திரங்களும் சரதிகளும்,வாகனங்களும் கைபற்றப்பட்டு சம்மாந்துறை நீதிமன்றதிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Thursday, September 22, 2011

National ICT Software Competition


சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்திலான   மென் பொருள் போட்டியல் தேசிய மட்டத்தில் தெரிவு.
  A.K.F. Nusaira   13C Arts
  M.T.M Irshad     13B Arts 
 இவர்களுக்கான விருதுகள் எதிர் வரும் 21.09.2011 இலங்கை மன்றக் கல்லூரியில் வழங்கப்படவுள்ளது. இதற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் உட்பட அதிபர் Mr. s. Aboobucker  தகவல் தொடர்பாடல் ஆசிரியர் Mr. M.B. Haseen   மாணவர்களின் பெற்றோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Saturday, September 10, 2011

வெற்றிக்கு பிராத்திப்போமாக.

சம்மாந்துறை செந்நெல் சாஹிராக் கல்லூரி மாணவன் ஏ.ஆர்.றஸ்கான் இன்று தேசிய மட்டத்திலான மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்கிறார் இவரது வெற்றிக்கு  பிராத்திப்போமாக.

Friday, September 2, 2011

99 கிலோமீற்றர் காபர்ட் பாதை நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தி

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வின் வழிகாட்டலில் உலக வங்கியின் 3000 மில்லியன் ரூபாய் செலவில் திருக்கொண்டியாமடு முதல் அக்கரைப்பற்று வரையான 99 கிலோமீற்றர் வரையான காபர்ட் பாதை நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தற்போது பாதையை அழகுபடுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படடுள்ளன. இந்நிலையில், பாதையின் நடுவே நவீன மின்விளக்குகளை பொருத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்படடுள்ளன. இதன் முதற்கட்டமாக காத்தான்குடி நகரசபை பிரிவிலும் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலும் தற்போது மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் இடம் பெற்றுவருகின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே 112 வீதியோர மின்விளக்குள் பொருத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாநகர சபைபிரிவில் 56 மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுவருகின்றன. இத்திட்டத்திற்கென வீதி அபிவிருத்தி அதிகாரசபை பல மில்லியன் ரூபாய் செலவிட்டு வருகின்றது.

Tuesday, August 30, 2011

எமது சம்மாந்துறை மண்ணில் அனைத்து இடங்களிலும் மைதானத்தில் பெருநாள் தொழுகை நிறைவேற்றப்பட்டது.




எமது சம்மாந்துறையில் முதல் தடவையாக அனைத்து மக்களும் மைதானத்தில் பெருநாள் தொழுகையை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தை கடைப்பிடித்து வெற்றி அடைந்துள்ளது எம் மக்கள் என்பது மகிழ்ச்சிகரமான விடயமே.

பெருநாள்க் கோலம் பூண்டுள்ளது மணிக் கூட்டுக் கோபுரம்


பெருநாளை முன்னிட்டு ஹிஜ்றா சந்தியானது தற்பொழுது களைகட்டியுள்ளது.

பெருநாளை முன்னிட்டு ஹிஜ்றா சந்தியானது தற்பொழுது களைகட்டியுள்ளது. பெருந்திரளான மக்கள் தமக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான மேலதிக புகைப்படங்களுக்காய காதிருங்கள்....

எமது இணையத்தள வாசகர்களுக்கு இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

எமது அன்பான வாசகர்களுக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்
மனக் கவலைகள் யாவும் நீங்கி
இப் பெருநாள் தினத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகவென எமது இணையத்தள குழு சார்பாக வாழ்த்துகின்றது. 
           

கிழக்குப் பல்கலை வேந்தராக பேராசிரியை யோகா!

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வேந்தராக பேராசிரியை யோகா இராசநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் மிகவும் மதிப்பு மிக்க உயர் பதவிகளில் ஒன்றாக கருதப்படும் வேந்தர் பதவியினைப் பெறுகின்ற முதல் தமிழ் பெண்மணி இவர் ஆவார். நீண்ட காலம் பல்கலைக் கழக உயர் கல்விப் பணியில் ஈடுபட்டுவரும் இவர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் கலைத் துறை பீடாதிபதியாகவும் பதில் உபவேந்தராகவும் பல தடவை பணியாற்றியு ள்ளார்.

இங்கிலாந்தின் கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டத் தைப் பெற்றுக்கொண்ட இவர், உள்நாட்டி லும், வெளிநாட்டிலும் பிரபலமான விருதுகள் பலவற்றைப் பெற்றுக்கொண்டவர்.

இவை தவிர தேசிய சர்வதேச ரீதியில் செயற்படும் அமைப்புக்களில் அங்கத்தவராக செயற்பட்டுள்ளார். இவர் உயர் கல்விப் பணியில் அடைந்த அளவிடமுடியாத வெற்றிகளைக் கெளரவித்து கொழும்புப் பல்கலைக் கழகம் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டமளித்து கெளரவித்தது.

கொழும்பிலுள்ள சொண்டா (Zonta) அமைப்பானது கல்வித்துறை மேம்பாட்டுக்காக இவர் ஆற்றிய பணியினைக் கெளரவித்து “சொண்டா பெண்கள் சாதனையாளர் விருதினை” 2004ம் ஆண்டு வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.

Monday, August 29, 2011

பாடசாலை பணியாளர்கள் வெற்றிடங்களுக்கு 343 பேரை நியமனம் செய்வதற்கான அங்கீகாரம்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் செயற்பாட்டு ரீதியாகவும்,வளங்கள் அடிப்படையிலும், அபிவிருத்தியடைந்து வரும் இவ்வேளையில் இப்பாடசாலைகளில் நீண்டககாலமாக நிரப்பப்படாமல் உள்ள பாடசாலை பணியாளர்கள் வெற்றிடங்களுக்கு 343 பேரை நியமனம் செய்வதற்கான அங்கீகாரத்தை கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக
கிழக்கு மாகாண அமைச்சரவை பேச்சாளரும்,வீதி அபிவிருத்தி, நீர்பாசனம்,வீடமைப்பும் நிர்மானமும்,கிராமிய மின்சாரம்,மற்றும் நீர்வழங்கள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

இதேவேளை கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் ஊடாக 2008ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 100 கல்வி அலுவலக,காரியாலய ஊழியர்களுக்கான அமைய நியமனம் வழங்குவதற்கும் இவ்வமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 930 முன்பள்ளி ஆசிரியர்கள் எதுவித கொடுப்பனவுகளின்றி நீண்ட காலமாக கடமையாற்றிவருகின்றார்கள். இவர்களால் வழங்கப்படும் சேவையை ஊக்குவிப்பதற்காகவும்,பாலர் பாடசாலைகளில் தொடர்ந்தும் இயங்குவதற்காகவும் அவர்களுக்கு மாதாந்தம் ஊக்குவிப்பு கொடுப்பனவாக 3000 ருபாய் வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் உதுமாலெப்வை மேலும் தெரிவித்தார்.

Friday, August 26, 2011

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாபாண முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சிரேஷ்ட அமைச்சர்களான பீ.தயாரத்ன, அதாவுட செனவரத்ன, பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹஸனலி, பைசால் காசீம், சிறியாணி விஜேவிக்கிரம, பி.பியசேன, கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, விமலவீர திஸாநாயக்க, ரீ.நவரெட்னராஜா, அம்பாரை அரசாங்க அதிபர் சுனில்கன்னங்கரா, உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸ், இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவட்டத்தில் நடைபெற்று வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.