13.10.2010 ஆகிய இன்று சம்மாந்துறை ஸ்டார் கொமியுனிகேசனுக்கு முன்னாக இன்று ஏயார்டலின் சந்தைப்படுத்தல் விரிவாக்கப் பிரிவினர் சக்தி எப்.எம் இன் டீ.ஜே பாயிஸ் உடன் அவர்கள் தமது விரிவாக்க சேவையினை மேற்கொண்டனர்.
Saturday, November 13, 2010
சம்மாந்துறை ஸ்டார் கொமியுனிகேசன் முன்பாக எயார்டலின் வர்த்தக விரிவாக்கம்
13.10.2010 ஆகிய இன்று சம்மாந்துறை ஸ்டார் கொமியுனிகேசனுக்கு முன்னாக இன்று ஏயார்டலின் சந்தைப்படுத்தல் விரிவாக்கப் பிரிவினர் சக்தி எப்.எம் இன் டீ.ஜே பாயிஸ் உடன் அவர்கள் தமது விரிவாக்க சேவையினை மேற்கொண்டனர்.
Thursday, November 11, 2010
மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 100இற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் விழா
மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இருந்து இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 100இற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற 504 மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் விழா சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் அஸ்ரப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் பீ.பீ.சிவபிரகாசம் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக எம்.கே.எம்.மன்சூர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்மினைப் பிராந்திய இணைப்பாளர் எம்.எம்.சறூக் சம்மாந்துறை வலய உதவி கல்விப் பணிப்பாளர் வீ.டி.சகாதேவராஜா,கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள்,அதிபர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
Wednesday, November 10, 2010
இளைஞர் பாராளுமன்றத்துக்கான வேட்புமனுத் தாக்கல்
Tuesday, November 9, 2010
சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் 23ம் வருட மாணவர்கள் மெளலவி பட்டம் பெற்றனர்
Monday, November 8, 2010
தந்தையிழந்த வறிய சிறார்களுக்கான பாராமரிப்பு நிதியுதவி

ஜமியதுல் அன்ஸார் சுன்னதுல் அன்சாரி அமைப்பினால் குவைத் நாட்டின் பைதுஸ் ஸகாத் நிதியுதவியின் கீழ் இலங்கையில் 1250 தந்தையை இழந்த சிறார்களுக்கான வறுமையான சிறார்களுக்கான நிதியுதவியை வழங்குகின்றது. இத்திட்டத்தின் அடிப்படையில் 08.11.2010 ஆகிய இன்று சம்மாந்துறை மர்கஸ் தாறுல் ஈமான் கலாபீடத்தில் இடம்பெற்றது.இதில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த 345 பேர் நிதியுதவியைப் பெற்றுக் கொண்டனர். இதில் நிதியுதவியை பொறுப்பதிகாரி கலாபூஷணம் செய்னுதீன் எஸ்.பரீட் அவர்கள் கையழித்தார். இந் நிகழ்வை சாம-சிறீ தேசிய கீர்த்தி மெளலவி ஐ.எல்.எம்.முஸ்தபா அவர்கள் ஏற்பாடு செய்தார்.
Sunday, November 7, 2010
கட்டாக்கலி மாட்டு உரிமையாளர்களுக்கு
தற்போது சம்மாந்துறை ஹிஜ்ரா
சந்தியில் கட்டாக்காலி மாடுகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.இக் கட்டாக்
காலி மாடுகள் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன் எமது
நகரத்தையும் சாணம் இட்டு அசுத்தமாக்குகின்றது.இது குறித்து கட்டாக்காலி
மாட்டு உரிமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என எமது செய்திப் பிரிவு
எச்சரிக்கை விடுக்கின்றது.Saturday, November 6, 2010
EDC இன் இலவசக் கல்விக் கருத்தரங்கு
Friday, November 5, 2010
தெளஹீத் பிரச்சாரம்
சம்மாந்துறை அம்பாரை வீதியில் 05.11.2010 ஆகிய இன்று இரவு சுமார் 07.00 மணியளவில் தேசிய சேமிப்பு வங்கிக்கு எதிரே தெளஹீத் ஜமாஅத் இனுடைய இஸ்லாமிய பிரச்சார மார்க்கச் சொற்பொழிவானது இடம்பெற்றது.
Thursday, November 4, 2010
சம்மாந்துறை நெல்லுப்புடிச் சந்தியில் விபத்துச் சம்பவம்
வாசகர் பார்வை வட்டம் உருவாக்க ஆரம்ப நிகழ்வு



சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நல்லாட்சிக்கான இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் வாசகர் பார்வை வட்டம் உருவாக்குவதற்கான ஆரம்ப நிகழ்வானது 04.10.2010 ஆகிய இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாக தென் கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மட் இஸ்மாயில்,கெளரவ அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் மற்றும் விசேட அதிதிகளாக எம்.எம்.றிபாய்டீன்,எம்.எம்.முனப்பர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இவ் விழாவை கல்லூரி முதல்வர் எச்.எம்.பாறூக் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தி வைத்தார். இச் செயற்திட்டத்தின் மூலம் நூலகர் வட்டம் ஒன்றை உறுவாக்குதல்.
Wednesday, November 3, 2010
நுளம்பு பரவும் இடங்களை அழிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள்
தற்பொழுது எமது ஊரில் நுளம்பு பரவும் இடங்கள் அதிகமாக காணப்படுகிறது. இது டெங்குக் காய்ச்சலை பரப்பக் கூடிய ஓர் உற்பத்திக் கூடமாக நாம் உருவாக்குவது கவலைக்குரிய விடயமே. எனவே நாம் எமது சூழலை சுத்தமாக வைத்திருந்து இவ்வாறான நோய் விளைவாக்கிகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவோம்.
Tuesday, November 2, 2010
வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவ எம்.எல்.ஏ.அமீர் அவர்கள் விஜயம்
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலை கட்டிட நிர்மாணப் பணிகளையும், அங்கு உள்ள நோயாளிகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவ அமீர் அவர்கள் பார்வையிட்டார்.மேலும் எம்து வைத்தியசாலைக்கு பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை எடுத்து வந்தவர் கெளரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, November 1, 2010
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு ஆனது திறந்து வைக்கப்பட்டுள்ளது

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவானது இன்று கெளரவ கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்(T.A) அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.இது சுமார் மூன்று மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அவர்களின் அயராத முயற்ச்சியினதும், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை பொறுப்பதிகரி வைத்தியர் இஸ்ஸதீன் அவர்களின் முயற்ச்சியின் காரணமாகவும் இப் பிரிவானது நிர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் எமது சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையானது அபிவிருத்தியடைந்து வருகிறது.இதற்கு அயராது உழைக்கும் வைத்தியர்கள்,அரசியல்வாதிகள்,பொதுமக்கள் அனைவருக்கும் எமது செய்திப் பிரிவானது நன்றிப் பூக்களை சமர்ப்பிக்கின்றது.
Sunday, October 31, 2010
சம்மாந்துறை இணையத்தளத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் M.L.A.அமீர் T.A அவர்கள் ஆசிச் செய்தி.
www.sammanthurai.tk என்ற இணையத் தளத்தின் மூலம் எமது ஊர் நடப்புகளை உலகளாவிய ரீதியில் எடுத்துக் கூறும் தங்களின் முயற்ச்சி வெற்றியடைய இவ்விணைய்யத் தளத்திற்கு எனது ஆசிச் செய்தியை வழங்குவதில் உளப்பூரிப்படைகிறேன்.
ஒரு சமூகம் மேன்மையடைய வேண்டுமானால் அச்சமூகத்தைப் பற்றிய நாட்டு நடப்புகள் வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் எமது சமூகத்தை விழிப்படையச் செய்ய, நீங்கள் அதி உச்சமான சேவையை முன்னெடுக்கின்றீர்கள். இச் சேவை நெடுங்காலம் நிலைத்திருக்க இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
எமது சமூகத்தின் இளைஞர்கள் தற்போது விழிப்படைந்திருக்கிறார்கள்.எமது சமூக நலனுக்காக சுறு சுறுப்பாக இயங்க களமியங்கியிறுக்கின்றார்கள்.முன்னேற்றப் பாதையில் மிகச் சிறப்பாகப் புறப்பட்டிருக்கிறார்கள். கல்வித் துறையிலும்,தொழிநுட்பத் துறையிலும் இன்னும்மின்னும் எத்தனையோ துறைகளிலும் உயர்வடைந்திருக்கிறார்கள்.இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கின்ற-சமூக முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது.
எனவே, சமூகப்பணியில் இவர்களின் பணி மென்மேலும் சிறக்கட்டும். புதுவொளி பிறக்கட்டும் எனக்கூறி இவ்விணைய தளம் நின்று நீடுழிகாலம் வாழ வளர வாழ்த்துகின்றேன்.
இது-
M.L.A.அமீர் T.A
மாகாணசபை உறுப்பினர்,
கிழக்கு மாகணசபை.
2010.10.31
ஒரு சமூகம் மேன்மையடைய வேண்டுமானால் அச்சமூகத்தைப் பற்றிய நாட்டு நடப்புகள் வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் எமது சமூகத்தை விழிப்படையச் செய்ய, நீங்கள் அதி உச்சமான சேவையை முன்னெடுக்கின்றீர்கள். இச் சேவை நெடுங்காலம் நிலைத்திருக்க இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
எமது சமூகத்தின் இளைஞர்கள் தற்போது விழிப்படைந்திருக்கிறார்கள்.எமது சமூக நலனுக்காக சுறு சுறுப்பாக இயங்க களமியங்கியிறுக்கின்றார்கள்.முன்னேற்றப் பாதையில் மிகச் சிறப்பாகப் புறப்பட்டிருக்கிறார்கள். கல்வித் துறையிலும்,தொழிநுட்பத் துறையிலும் இன்னும்மின்னும் எத்தனையோ துறைகளிலும் உயர்வடைந்திருக்கிறார்கள்.இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கின்ற-சமூக முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது.
எனவே, சமூகப்பணியில் இவர்களின் பணி மென்மேலும் சிறக்கட்டும். புதுவொளி பிறக்கட்டும் எனக்கூறி இவ்விணைய தளம் நின்று நீடுழிகாலம் வாழ வளர வாழ்த்துகின்றேன்.
இது-
M.L.A.அமீர் T.A
மாகாணசபை உறுப்பினர்,
கிழக்கு மாகணசபை.
2010.10.31
Saturday, October 30, 2010
ஐக்கிய அமெரிக்கா தூதரகத்தின் அதிகாரிகளால் லொத்தரி வீசா பற்றிய அறிவுறுத்தல் கருத்தரங்கு
ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் அதிகாரிகளினால் லொத்தர் வீசா நிகழ்ச்சி பற்றிய விளக்கவுரை சம்மாந்துறையில் நடைபெறவுள்ளது.இலவசமாக எவ்வாறு விண்ணப்பிப்பது பற்றிய விளக்கவுரை தமிழ்,சிங்கள மொழிபெயர்ப்புடன் வழங்கப்படும்.அனைவருக்கும் அனுமதி இலவசம்.
இடம்:அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி
திகதி : ஒக்டோபர் 31.2010
மாலை: 03.00 மணி
இடம்:அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி
திகதி : ஒக்டோபர் 31.2010
மாலை: 03.00 மணி
சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலயத்திற்கு நிதி ஒதுக்கீடு
சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலய முன்பள்ளிக் கட்டிடம் திருத்துவதற்காகவும், வகுப்பறைத் தரையை செப்பனிடுவதற்காகவும் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவை சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் கெளரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கெளரவ எச்.எம்.ஹரீஸ் அவர்கள் ஒதுக்கித் தந்துள்ளார்.
பாடசாலைக் கட்டிட சிறு திருத்தத்திற்காக, சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்கள்.
மேலும் பாடசாலை அபிவிருத்திற்காக கெளரவ விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்கள் என பாடசாலை அதிபர்கள் ஜனாப்.அப்துல் ஜப்பார் அவர்கள் தெரிவித்தார்.
பாடசாலைக் கட்டிட சிறு திருத்தத்திற்காக, சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்கள்.
மேலும் பாடசாலை அபிவிருத்திற்காக கெளரவ விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்கள் என பாடசாலை அதிபர்கள் ஜனாப்.அப்துல் ஜப்பார் அவர்கள் தெரிவித்தார்.
Friday, October 29, 2010
சம்மாந்துறை தொழிற்ப் பயிற்ச்சி நிலையத்திற்கு ஒரு தொகுதி மரக்கன்றுகள் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்புப் பல்கலைக்கழக கணணிப் பிரிவின் தொழிநுட்பக் கருத்தரங்கில் சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவர்களும் 2010.10.29 ஆகிய இன்று கலந்து கொண்டுள்ளனர்.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் தகவல் தொழிநுட்ப கருத்த்தரங்கில் கொழும்பில் தற்பொழுது கலந்து கொண்டுள்ளனர்.இதில் பல்வேறுபட்ட பயனுள்ள விடயங்களை பெற்றுக் கொண்டனர் என எமது செய்தியாளர் எம்.எம்.தில்ஷாத் தஸ்னீம் தெரிவித்தார்.மேலும் இத் தகவல் தொழிநுட்பக் கருத்தரங்கானது கொழும்புப் பல்கலைக்கழக கணணிப் பிரிவில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இம் மாணவர் குழுவை பின்வரும் ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி.எம்.ஹசீம்,எஸ்.எம்.ஹில்மி, எ.பி.சம்சுனா, திருமதி.செய்னுல் ஆப்தீன்
எம்.பி.எம்.ஹசீம்,எஸ்.எம்.ஹில்மி, எ.பி.சம்சுனா, திருமதி.செய்னுல் ஆப்தீன்
Thursday, October 28, 2010
சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலயத்தில் தேசிய வாசிப்பு வாரத்தை முன்னிட்டு தேசிய விழாக் கொண்டாட்டம் சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலயத்தில்
தேசிய வாசிப்பு வாரத்தை முன்னிட்டு தேசிய விழாக் கொண்டாடும் தினமாக 2010ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ம் திகதி பாடசாலை நூலகத்திற்கு நூல்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறைகளைச் செய்து கொள்ளும் வகையில் மாணவர்களிடமிருந்தும்,ஆசிரியர்களி டமிருந்தும் நூல்களைப் பெற்றுக் கொள்வதையும் மாணவர்களுக்கான நூல்களை சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலய அதிபர் ஜனாப் எ.எ.ஜப்பார்,நூலகர் ஜனாப் எ.எல்.எம்.ஜாபிர் படங்களில் காணலாம்.
மின்னல் தாக்கத்தினால் இளம் குடும்பஸ்த்தர் பலி


2010.10.28 ஆகிய இன்று சுமார் பி.ப 2.25 இற்கு இடியுடன் கூடிய மழை பரவலாக பெய்தது. சம்மாந்துறை கைகாட்டி வீதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தகப்பனான ஆதம்லெப்பை மஹ்றூப் (வயது 37) சம்மாந்துறை அன்டிய சேகப்பற்று வயல் வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி ஸ்தலத்திலேயே மரணமானார். இவருடன் கூடச் சென்ற மருமகனான ஹசன் ஹாசிர் (வயது 17) சம்பவத்தில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.சடலம் உடனடியாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டது. சம்மாந்துறைப் பொலிஸார் இது தொடர்பான் மேல் விசாரணைகளை நடத்துகின்றனர்.
Wednesday, October 27, 2010
சம்மாந்துறை அறபா வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களினை பாராட்டு விழா
சம்மாந்துறை அறபா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களினை பாராட்டும் விழாவில் கெளரவிக்கப்பட்ட மாணவர்களுடன் பாடசாலை அதிபர் யூ.எல்.எம்.இஸ்மாயீல் மெளலவி,ஆசிரியர்களான ஏ.எல்.எம்.ஜாபீர்,ஏ.பீ.பரீதா, எம்.ஐ.ஸமினா பிரதிக் கல்விப் பணிப்பாளர் அமீன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ,ஏ.றசூல்,அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி உப பீடாதிபதி யூ.எல்.எம்.புகாரி உப பீடாதிபதி ஏ.எல்.எஸ்.ஏ.சத்தார்,பிறை எப்.எம் வானொலி அறிவிப்பாளர் யூனுஸ் கே றஹ்மான் ஆகியோர் காணப்படுகின்றனர்.
Tuesday, October 26, 2010
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப் பாதையில் வெற்றி நடை போடுகிறது



சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையானது அபிவிருத்தியின் உச்ச வரம்பை தொடுமளவுக்கு பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் குறுகியகாலத்தில் எட்டியுள்ளது. தற்பொழுது பல்வேறுபட்ட சிகிச்சை முகாம்கள் எமது வைத்தியசாலையில் நடைபெற்று வருகின்றது.இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
Monday, October 25, 2010
கிழக்கு மாகாண மட்டத்திலான விஞ்ஞான வினாடி வினாப்போட்டி பரிசளிப்பு விழா
கிழக்கு மாகாண மட்டத்திலான விஞ்ஞான வினாடி வினாப்போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவி செல்வி.முஹம்மட் றபீக் ஹன்ஷா இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.இவருக்கான வெள்ளிப் பதக்கத்தையும்,சான்றிதழையும் பாடசாலை ஆராதனையில் வைத்து வித்தியாலய அதிபர் ரீ.எம்.தெளபீக் மாணவிக்கு வழங்குவதைக் காணலாம்.
Sunday, October 24, 2010
மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் அஸ்ரஃப் அவர்களின் நினைவு மலர் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா
23.10.2010
அன்று மாலை 04.45 இற்கு சம்மாந்துறை நகர மண்டபத்தில் மறைந்த தலைவர்
மர்ஹூம் அஸ்ரஃப் அவர்கள் மண்ணை விட்டுப் பிரிந்து ஒரு தசாப்தத்தை
முன்னிட்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக தமிழ்ச் சங்கத்தின் கனவுகள்
கலைக்கப்பட்ட அஸ்ரஃப் எனும் "அடையாளம்" கவிதைத் தொகுப்பு நூல் விழாவானது
வெகு விமர்சையாக சம்மாந்துறை மண்ணில் அரங்கேறியது.இதில்
புத்திஜீவிகள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் பிரமுகர்களோடு தலைவர்
மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் ஆதரவாஅளர்கள் மற்றும் போட்டியில் பங்குபற்றிய
கலைஞர்களும் இவ் விழாவில்
கலந்து சிறப்பித்தனர்.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
feature content slider
Content right
.
.
.










.jpg)



