*உள்ளம் இனித்திடவே உவகைப் பெருநாள் வந்ததுவே!
இல்லம் மகிழ்ந்திடவே ஈகைத் திருநாள் வந்ததுவே!
ரமலான் முழுதும் தினமும் நோன்பினை நோற்றனரே!
எமதிறை அல்லாஹ் பேரருள் ரஹ்மத் பெற்றனரே!
*ஐம்பெரும் கடமை ரமலான் அதில் ஒன்று.
ஐயம் இல்லை நன்மைகள் பற்பலவே உண்டு.
உறுப்புகள் உழைக்குது தினமும் இரவுபகல் நேரம்.
ஓய்வு கொடுப்போம் பகலில் சிலமணி நேரம்.
*புசிப்பவர் அறியார் ஏழைபடும் பசியின் துயரம்.
பசியின் கொடுமை நோன்பாளிகள் உணரவே முடியும்
நோன்பு என்பது பலமுள்ளோர் மீதுதான் கடமை
மாண்பு கண்டு ஏற்பதும் நம்மீது உடமை!
*இல்லாதார்க்கு உள்ளோர் கொடுத்தால் அதுதான் ஈகை
வல்லோன் தருவான் மறுமைதனிலே மாபெரும் வாகை
மகிழ்ச்சியுடன் உவந்திடுவோம்.....
......பெருநாள் இன்றைய தினம்
நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது எனதினிய அன்பு மனம்!
அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!
Thursday, September 9, 2010
சம்மாந்துறையில் பெருநாள் கடைகள்
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு
ஹிஜ்ரி 1431 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்த்து தீர்மானிக்கும் மாநாடு
இன்று வியாழக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில்
அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறுகிறது.
நோன்புப் பெருநாள் தொடர்பாக தீர்மானி க்கும் வகையில் இன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.14 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம் களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்கிறது.
அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்க ளுடன் நேரிலோ அல்லது 011-5234044, 2432110, 2390783 மற்றும் 0777-366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கொழு ம்பு பெரியபள்ளிவாசல் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் கேட்டுக்கொள்கின்றார்.
நோன்புப் பெருநாள் தொடர்பாக தீர்மானி க்கும் வகையில் இன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.14 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம் களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்கிறது.
அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்க ளுடன் நேரிலோ அல்லது 011-5234044, 2432110, 2390783 மற்றும் 0777-366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கொழு ம்பு பெரியபள்ளிவாசல் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் கேட்டுக்கொள்கின்றார்.
Wednesday, September 8, 2010
நபி வழியில் நம் பெருநாள் தொழுகை
அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!அஸ்ஸலாமு அலைக்கும்.அபுஸயீத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் "நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தார்கள்.அவர்களது காரியங்களில் முதற் காரியமாக தொழுகையை துவக்குவார்கள்.(புஹாரி 956,முஸ்லிம் 1612)
இரு பெருநாட்களிலும் மாதவிடாய் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும்(தொழும் திடலுக்கு)அனுப்புமாறும் அப் பெண்கள் வீட்டில் இருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்கு சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும் தொழுமிடத்தை விட்டும் மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கி இருக்குமாறும் நாங்கள் கட்டளையிட்டோம் என நபி (ஸல்) கூறியதாக உம்மு அத்தியா(ரழி)அறிவிக்கின்றார்கள்.(புஹாரி351,முஸ்லிம்1612).
இந்த நபி வழிக்கு மாற்றமாக காலாகாலமாக பெருநாள் தொழுகை தொழுவிக்கப்படுவதாலும்,பெண்கள் பெருநாள் தொழுகைகளில் புறக்கணிக்கப்படுவதாலும்,இம் முறை நோன்புப் பெருநாள் தொழுகையை திடலில் தொழுவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்,அல்ஹம்துலில்லாஹ்.
இடம் :- அல்மர்ஜான் மகளிர் கல்லூரி மைதானம்
காலம்:-பெருநாள் தினம்(அகில இலங்கை உலமா சபை பிறைக்குழுவால் அறிவிக்கப்படும் தினம்)
நேரம்:-காலை 06.20
ஏற்பாடு:- சம்மாந்துறை தவ்ஹீத் ஜமாஅத்
இம் முயற்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க விரும்புவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்-
0773520876,0775527326
ஏற்பாடு:- சம்மாந்துறை தவ்ஹீத் ஜமாஅத்
இம் முயற்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க விரும்புவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்-
0773520876,0775527326
இலங்கை நாடாளுமன்றத்தில், 18 வது அரசியலமைப்பு திருத்த விவாதம் ஆரம்பமாகியது
சிறிலங்கா நாடாளுமன்றத்தில், 18 வது அரசியலமைப்பு திருத்த விவாதம்
இன்று ஆரம்பமாகியுள்ளது என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த
அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்புத் தெரிவித்து வரும் பிரதான
எதிர்கட்சியான ஐ.தே.கட்சியி உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் கலந்து
கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.
இந்தத் திருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும், உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மக்கள் அபிப்பிராயம் கோரி சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டு வரும் நிலையில், சிறிலங்கா உச்ச நீதிமன்றம், மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில், சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை என்றிருக்கிறது.
சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மை பலம் பெற்று, புதிய அரசு அமைந்த போதும், ஆளும் கட்சிக்கு 144 உறுப்பினர்களே உள்ளனர். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பெற, 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருந்தது.
இந்நிலையில் அன்மையில் அரசுக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ள, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேருடன், ஐதேகட்சி உறுப்பினர்கள் 6 பேர், அரசுடன் இணைந்துள்ள ஜனநாயகக் கட்சியின் பிரபா கணேசன், தொழிலாளர் தேசிய முன்னணியின் திகாம்பரம், அம்பாறை மாவட்ட ததேகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பியசேன ஆகியோர், அரசியலமைப்புத் திருத்ததிற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும், உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மக்கள் அபிப்பிராயம் கோரி சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டு வரும் நிலையில், சிறிலங்கா உச்ச நீதிமன்றம், மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில், சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை என்றிருக்கிறது.
சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மை பலம் பெற்று, புதிய அரசு அமைந்த போதும், ஆளும் கட்சிக்கு 144 உறுப்பினர்களே உள்ளனர். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பெற, 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருந்தது.
இந்நிலையில் அன்மையில் அரசுக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ள, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேருடன், ஐதேகட்சி உறுப்பினர்கள் 6 பேர், அரசுடன் இணைந்துள்ள ஜனநாயகக் கட்சியின் பிரபா கணேசன், தொழிலாளர் தேசிய முன்னணியின் திகாம்பரம், அம்பாறை மாவட்ட ததேகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பியசேன ஆகியோர், அரசியலமைப்புத் திருத்ததிற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tuesday, September 7, 2010
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே
சிறு பிழை கூட எம்மில் பெரிய இழப்பை ஏற்படுத்தக் கூடும்.எனினும் தற்பொழுது இணைக்கப்படும் விடயம் ஓர் கவனையீனமான எழுத்துப் பிழையின் விபரீதமே ஆகும்.சம்மாந்துறை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள மில்கோ பால் குளிரூட்டல் நிலையம் பெயர்ப் பலகையில் எமது ஊரின் பெயர் சம்மாந்துறை என்பதற்குப் பதிலாக சம்மான்துறை என அச்சிடப்பட்டுள்ளது.இப் பிழையானது இது வரை யாரினாலும் சுட்டிக் காட்டப்படவில்லை .அப் பாதை வழியாக எத்தனையோ மக்கள் ஒரு நாளைக்குக் செல்கின்றனர் எனினும் அது இனங்காட்டப்படாத பிரச்சைனையாகவே இருக்கின்றது.இது எமது ஊரின் கல்வித் தரத்தை குறைத்து மதிப்பிடும் செயலாக காணப்படுகிறது.எனவே இப் பெயர்ப் பலகையில் உள்ள பிழையை உடனடியாக மாற்ற வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எமது செய்திப்பிரிவு வேண்டுகோள் விடுக்கிறது.இவ்வறான சிறு சிறு பிழைகளை எமது செய்திப் பிரிவு தொடர்ந்து சுட்டிக் காட்டும்.
வீதிகளின் அபிவிருத்தியும் விபத்துகளின் அதிகரிப்பும்
தற்பொழுது வீதிகளானது எமது ஊரில் மிகவும் அழகான முறையில் புணர்நிர்மானிக்கப்பட்டுள்ளன எனினும் ஏற்பட்டுள்ள விபரீதம் விபத்துக்களின் அளவு அதிகரித்தமையாகும்.இன்று கூட வாகன விபத்துகளினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நான்கு என வைத்தியாசலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனவே வாகனங்களில் பிரயாணம் செய்பவர்கள் அவதானத்துடன் செலுத்துமாறு எமது செய்திப் பிரிவு விணயமாக கேட்டுக் கொள்கிறது.
Monday, September 6, 2010
சம்மாந்துறை தொழிற்ப் பயிற்ச்சி நிலையத்தில் 2011ம் ஆண்டிற்கான புதிய கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.
சம்மாந்துறை தொழிற்ப்பயிற்ச்சி நிலையத்தில் 2011ம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.இதற்கான விண்ணப்பப் படிவங்களை காரியாலத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தொழிற்ப் பயிற்ச்சிப் பொறுப்பதிகாரி திரு.வசீம் தெரிவித்தார்.அத்துடன் தொழிற்ப் பயிற்ச்சி நிலையம் திறப்பு விழாவின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்களும் எமது ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ளன.


லைலதுல் கத்ர்' ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது
லைலதுல் கத்ர் என்பது விசுவாசிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடையாகும் ‘மகத்தான இரவு’, ‘ஏற்பாட்டின் இரவு’ என்பது இதன் பொருள். மனிதன் இவ்வுலகில் குறிப்பிட்ட ஒரு காலம் வரை மட்டும் வாழ்கின்றான். மனிதனின் நிலையான பெருவாழ்வு அவனது மரணத்தின் பிறகே ஆரம்பமாகிறது. நிலையான இன்ப வாழ்வுக்கு ஆயத்தம் செய்யும் ஒரு சாதனமாக லைலதுல் கத்ர் வழங்கப்பட்டுள்ளது. இதனையே அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது. ‘லைலதுல் கத்ர் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது’ (அல்குர்ஆன்)
இஸ்ரேலியர்களில் ஒரு மனிதன் ஆயிரம் மாதங்கள் போர் கருவி தாங்கி அல்லாஹுதஆலாவுக்காகப் புனித யுத்தத்தில் ஈடுபட்டான் என்னும் செய்தி அண்ணலாருக்கு அறிவிக்கப்பட்டது.
காருண்ய நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத ஆலாவிடம் தமது சமுதாயத்தவர்களின் வாழ்நாள் குறைவானதென்றும் நீண்ட காலம் வாழ வாய்ப்பளிக்கப்பட்டால் அதில் அமல் செய்து அபரிமிதமான நன்மைகளைச் சம்பாதிப்பார்களே என்றும் இரந்து கொண்டார்கள்.
எனவே அல்லாஹ்வுத்த ஆலா ஆயிரம் மாதங்களை விடவும் மேலான ஒரு இரவை ஒவ்வொரு வருட றமழான் மாதத்திலும் அருளி பெருமானாரின் அவாவை நிறைவேற்றியுள்ளான்.
றமழான் மாதத்தில் இவ்விரவு எத்தினத்தில் வருகின்றது என்பது நிச்சயமில்லை. அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் இவ்விரவு இதுதான் என்று வரையறுத்துக் கூறப்படவில்லை.
இவ்விரவு றமழான் மாதத்தில் வருகின்றதென்பது மட்டும் கூறப்படுகிறது. எனவே றமழான் ஆரபத்திலிருந்து கடைசிவரை இவ்விரவுக்கான முயற்சிகளும் அமல்களும் பிராத்தனைகளும் இடம்பெற வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஹதீஸிலும் “றமழானின் கடைசிப் பத்தில் உள்ள ஒற்றைப்பட்ட நாட்களில் லைலதுல் கத்ர் இரவை தேடிக் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்கள். லைலதுல் கத்ர் தொடர்பாக உபாதாவின் ஸாமித் (ரலி) இவ்வாறு கூறுகிறார். “ஒருமுறை முஹம்மத் (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக புறப்பட்டு வந்தார்கள்.
அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அச்சமயம் நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ர் பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக புறப்பட்டு வந்தேன். இவ்வேளையில் இன்னாரும், இன்னாரும் சச்சரவில் ஈடுபட்டிருந்தனர். அதனால் அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். ஆகவே லைலதுல் கத்ர் இரவை ரமழான் மாதத்தில் 29ம், 27ம், 25ம் இரவிலும் தேடுங்கள் என்றார்கள். (புஹாரி 2023)
இது தவிர ஆயிஷா (ரலி) அவர்கள் றமழான் மாதத்தில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப் படையான இரவுகளில் லைலதுல் கத்ரை தேடுங்கள். (புஹாரி 2017)
மேலும் ஒரு ஹதீஸில் ஆயிஷா (ரலி) கூறுகையில் ரமழானின் கடைசிப் பத்து வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லற தொடர்பை நிறுததிக்கொள்வார்கள்.
இரவை (அல்லாஹ்வை தொழுது) உயிர்ப்பிப்பார்கள். (அல்லாஹ்வை வணங்குவதற்காக) குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். (புஹாரி 2024)
இவ்வாறு அதிக நேரம் இரவு வணக்கங்களில் ஈடுபட்டுள்ளார்கள். தனது கால்கள் வீங்கும் அளவு நின்று இரவு வணக்கங்களில் ஈடுபட்டுள்ளார்கள். தராவீஹ், வித்ர் போன்ற தொழுகைகளை அதிக நேரம் தொழுதுள்ளார்கள். இது தவிர குர்ஆன் திலாவத், திக்ர் போன்ற விடயங்களிலும் அதிக நேரம் ஈடுபட்டுள்ளார்கள்.
ஒருவர் தான் மேற்கொள்ளும் வணக்கங்கள் அனைத்தும் இறை அச்சத்தோடும், உளத்தூய்மையோடும் மேற்கொள்ளல் வேண்டும். இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. “செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே. ஒருவன் தான் எந்த நோக்கத்தோடு ஒரு விடயத்தைச் செய்கிறானோ அதற்கான கூலியையே அவன் பெற்றுக்கொள்வான்.” (முஸ்லிம்)
சங்கைமிக்க லைலதுல் கத்ர் இரவிலே மலக்குகள் பூமிக்கு இறங்குகிறார்கள். இத்தினத்திலேயே தான் அல்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இக்குர்ஆனில் ஒன்பது இடங்களில் மட்டுமே லைலதுல் கத்ர் என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
இத்தினத்தில் பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருந்து இந்த இரவின் பலன்களை பெற்றுக்கொள்கின்றனர். அதிக நேரம் வணக்கங்களில் ஈடுபட்டு பலகோடி நன்மைகளை பெற்றுக்கொள்கின்றனர்.
இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. “றமழான் காலங்களில் ஒன்றுக்கு எழுபது மடங்கு நன்மைகள் வழங்கப்படுகின்றன. (ஹதீஸ்) றமழானின் கடைசிப் பத்து நாட்களும் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருப்பார்கள் என இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள். (புஹாரி 2025)
மேலும் அளவற்ற நன்மைகளையும் பல மடங்கு கூலியையும் இம்மாதத்தில் தன் அடியார்களுக்கு அள்ளி வழங்குகின்றான். இது பற்றி ஹதீஸ் குத்ஸியில் பின்வருமாறு கூறப்படுகிறது. நோன்பு எனக்காக நோற்கப்படுவதாகும். அதற்குரிய கூலியை நானே வழங்குகிறேன்.
றமழானின் இறுதிப் பத்தில் உள்ள நாட்கள் நரக விடுதலைக்குரிய நாட்களாகும். இந்நாட்களில் தாம் செய்த பாவங்களுக்கு மனம் இரங்கி மன்னிப்பு கோர வேண்டும்.
இதனை பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
“இந்த மாதத்தின் முதல் பகுதி அருள் நிறைந்தது. நடுப்பகுதி பாவமன்னிப்பு மிக்கது. இறுதிப் பகுதி நரக விடுதலைக்கு உரியது.” (பைஹகீ) மற்றுமொரு இடத்தில் யார் றமழானில் நன்மையை எதிர்பார்த்து ஈமானுடன் இரவுத் தொழுகையில் ஈடுபடுகிறாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். (நபி (ஸல்)
இவ்வாறு ரமழான் மாதத்தில் நரக விடுதலை கிடைப்பதோடு அதிக நன்மைகளும் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது.
ரமழானில் அதிக தான தர்மங்கள் செய்து நன்மைகள் அதிகம் பெற வாய்ப்பு உள்ளது. விசேடமாக ‘பித்ரா’ என்ற தர்மம் உள்ளது. இது தவிர ஹதியா, ஸதகா போன்றனவும் நடைமுறையில் உள்ளன.
இதனையே நபி (ஸல்) அவர்கள் வலக்கை கொடுக்கும் தர்மத்தை இடக்கை அறியாத வண்ணம் தர்மம் செய்யுமாறு கூறி உள்ளார்கள்.
எனவே நாமும் இந்த ரமழான் நமது வாழ்நாளில் உள்ள இறுதி றமழான் என நினைத்து அதன் பலனை உரிய முறையில் அடைவோமாக!
Sunday, September 5, 2010
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
எமது ஊரில் நிறையவே பயிர்ச் செய்கை நிலங்கள் காணப்படுகின எனினும் அதை தரிசு நிலமாக மாற்றும் கூட்டமே அதிகம் காணப்படுகின்றன.இவ்வாறான ஓர் நிலைப்பாட்டில் தனது மூன்றாவது மொட்டை மாடியில் பயிர் செய்து புதிய பயிர்ப் பேதம் உருவாக்கிய வரலாறு உண்டு.இது உங்களுக்கு தெரியுமா?அதுவே உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைகின்றோம்.சம்மாந்துறை விளினியடிச் சந்தியில் ஓய்வு பெற்ற முன்னால் பல-நோக்குக் கூட்டுறவுச் சங்க சபைச் செயலாளர் திரு.றசீத் அவர்களின் பொழுது போக்கு முயற்ச்சியே ஆகும்.இவர் குடியிருப்பது பிரதான வீதியில் ஆகும்.எனவே இவர் பயிர் செய்வதற்கு ஓர் அங்குல இடம் காணப்படவில்லை.இருந்தும் மன்முன்டால் இடமுண்டு எனும் பழமொழிக்கு உயிப்பூட்டியுள்ளார்.இவர் தனது கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஓர் அரையடிக்கு மண்ணிட்டு தனது பயிர்ச் செய்கையை மேற்க் கொண்டார்.தற்பொழுது அது ஓர் பல் நாட்டு மரக்கறிகளின் இராச்சியமாக மாறியுள்ளது.அவர் கூறுகையில்-தான் சென்ற வருடம் இத் தோட்டத்தைச் செய்ய ஆரம்பித்ததாகவும் தற்பொழுது தனது பயிர்ச் செய்கையில் பூரண வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.மேலும் இவர் கூறுகையில் தான் ஓர் புதிய இன வெண்டி ஒன்றைக் கலப்புச் செய்து உருவாக்கியுள்ளதாகவும்,அது சிறிய பருவத்திலேயே காய்க்கக் கூடியது எனவும் அத்துடன் சிறந்த நோய் எதிர்ப்புள்ள வீரியமான இனம் இது எனக் குறிப்பிட்டார்.இவ்வாறான திறமையுள்ள எத்தனையோ திறமைசாலிகள் எமது ஊரிலே காணப்பட்ட பொழுதும் அவர்களுடைய திறமைகள் மழுங்கடிக்கப் படுகின்றன.எனவே இவர்களுடைய திறமைகளை வெளிக் கொண்டு வர எமது செய்திப் பிரிவு தொடர்ச்சியாக உழைக்கும் என்பதில் ஐயமில்லை.எனவே இவ்வாறான திறமைகளை நீங்களும் இனங்காட்டலாம்.



நோன்பின் கொண்டாட்டம் பள்ளிவாசல்களின் அழகில்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் துரித வளர்ச்சி
Friday, September 3, 2010
கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்
இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
15
நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம்
தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல்
போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால்,
மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனை http://monitores.googlecode.com/files/ MonitorES_05.exe என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://greenutils.com/ Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனை http://monitores.googlecode.com/files/ MonitorES_05.exe என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://greenutils.com/ Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.
வெகு விரைவில் வரலாற்று ஆய்வு நூல்
சம்மாந்துறை வரலாற்று ஆய்வாளர் ஜலீல் ஜீ இன் சம்மாந்துறை மண்பதியின் கலை இலக்கிய பிரசவங்கள் என்ற சம்மாந்துறையின் வரலாற்று அலசல் நூல்
Thursday, September 2, 2010
விவசாய ஆராய்ச்சி நிலையம் தொடர்பான அறிவுறுத்தல்
சம்மாந்துறை வாழ் மக்களுக்கு விவசாய ஆராய்ச்சி நிலையம் தொடர்பாக விளக்கம் தருகிறார் சம்மாந்துறை விவசாய ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி திரு.இக்பால் அவர்கள்.செவ்வி கீழே இணைக்கப்பட்டுள்ளது
பாகம்-1
எமது செய்திப் பிரிவினர் அங்கு சென்ற பொழுது எடுக்கப்பட்ட படங்கள் கீழே இணைக்கப்படுகின்றன.


பாகம்-1
எமது செய்திப் பிரிவினர் அங்கு சென்ற பொழுது எடுக்கப்பட்ட படங்கள் கீழே இணைக்கப்படுகின்றன.
![]() |
| தற்பொழுது நிர்மாணிக்கப்படுகின்ற புதிய கட்டிடத் தொகுதி |


சம்மாந்துறை ஹிலால் எஞ்சினியரிங் வேர்க் சொப்பின் மற்றுமோர் மைல் கல்
![]() | |
| M.I.M.MAJEED (M.D) |

எமது ஊரின் தலை சிறந்த எஞ்சினியரிங் வேர்க் சொப்பான ஹிலால் எஞ்சினியரிங் வேர்க் சொப் நிருவனத்தினர் தமது உற்பத்திகளின் மற்றுமோர் வெற்றிப் பாதையின் மற்றுமோர் இலக்கை எட்டியுள்ளனர்.இவர்களது நெசவுத் தொழிலில் பயனபடும் நூல் சுற்றும் எந்திர உற்பத்தியானது உலகளவில் போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.ஏனெனில் இவ் இயந்திரத்தை இந்தியா மற்றும் சைனா போன்ற நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட பிரயத்தனங்கள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.எனினும் எமது மண்ணில் பிறந்த ஹிப்கோ அச்சகம்,ஹிலால் எஞ்சினியரிங் வேர்க் சொப் நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர் அல்ஹாஜ்-M.I.M.மஜீத் அவர்களின் அயராத முயற்ச்சியின் பயனாகவே இன்று ஓர் உலகப் புகழுக்குரிய உற்பத்தியை உருவாக்கி எம் ஊருக்கு பெருமை சேர்த்துள்ளது.இவ்வாறான உற்பத்திகளை உருவாக்கும் உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் மற்றும் மக்களாகிய நாம் அனைவரும் ஊக்கம் அளிக்க வேண்டும் என எமது செய்திப் பிரிவு கேட்டுக் கொள்கிறது.மேலும் இவ் இயந்திர உற்பத்தியாளர் ஓர் சிறந்த சிக்கனப் பொருள் உற்பத்தியாளர் கூட.இவர் மின்சாரனம் இன்றி விறகினால் குறைந்த விறகுச் செலவுடன் oven ஒன்றினைக் கூட உருவாக்கியுள்ளார்.
.மேலும் எமது ஊரின் கண்டுபிடிப்பாளர் அவருடைய இவ் உற்பத்தியில் உதவிய அனைவருகும் நன்றியைத் தெரிவித்தார்.. குறிப்பாக ஆசிக் (ஹிப்கோ) அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.இவற்றின் புகைப்படங்களானது கீழே இணைக்கப்பட்டுள்ளது.எனவே இவ்வாறான ஓர் ஆக்க பூர்வமான ஓர் உற்பத்தியாளரை எமது ஊரான சம்மாந்துறை கொண்டுள்ளதையிட்டு பெருமையடைகிறது.இவருடன் நீங்கள் தொடர்பு கொள்ள-0772301817,0672260326







Wednesday, September 1, 2010
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
feature content slider
Content right
.
.
.



























